திங்கள், ஜனவரி 05, 2009

காத்திருப்பு

யன்னல் வழியே எட்டிப் பார்த்தேன்
இருண்ட இரவு என் மனசைப் போல;
ஊர் உறங்கியும் கண்கள் உறங்கவில்லை
மூடிய கண்களுக்குள் கனவுகளின் தொடர்ச்சி
னவுகள் தந்த வெளிச்சத்தில் காலத்தை ஓட்ட முடியவில்லை
நினைவுகள் சுட்ட காயத்தை கண்ணீரால் கழுவியும் ஆறவில்லை
ஏன் இந்த நாட்கள் எல்லாம்
என் தேசத்தின் விடியலைப் போல் நீள்கிறது
நம்பிக்கையீனம் நாற்புறமும் போராடி வெல்கிறது
தனிமையின் வெறுமை நிஜத்தையும் கேள்வியாக மாற்றியது
ஒரு கணம் அழுகிறது மனசு
மறு நிமிடம் அடை காக்கும் தாயாகச் சுரக்கிறது
ஏனிந்த போராட்டம்?
கசியும் என் இதயத்துக்கு கட்டுப்போட
கரைகின்ற காலத்தால் முடியுமா?
இருண்ட இரவில் தோன்றும் வெள்ளிபோல்
எனக்குள்ளும் விடியல் தோன்றுமா?
விடியலுக்கு காத்திருப்பு அவசியம்தான்
எதுவரை என்பதுதான் புரியவில்லை?
சௌந்தரி

1 கருத்து: