tag:blogger.com,1999:blog-34241502975240768432024-02-07T15:53:09.458+11:00பூபதிஎண்ணங்களின் எழுத்து வடிவம் &
சிந்தனைகளின் சந்திப்புBOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-46127097819615174712011-11-22T10:27:00.001+11:002011-11-22T10:29:04.831+11:00புன்னகைச் சாரல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi35Kcm-hGms-oNFXveQkX9UEnafNQMdiBGrpXjDPTCP-23Q89f6eKXVdTWz8my_NwTQiJPjp2_jMBGJoPqP3xVnXZvpCesR69UitN3XY-ZBzmQMjEkHJ220e4pyJjS1xAuBlOqUBlTtVc/s1600/mona-lisa_smile.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" hda="true" height="353" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi35Kcm-hGms-oNFXveQkX9UEnafNQMdiBGrpXjDPTCP-23Q89f6eKXVdTWz8my_NwTQiJPjp2_jMBGJoPqP3xVnXZvpCesR69UitN3XY-ZBzmQMjEkHJ220e4pyJjS1xAuBlOqUBlTtVc/s640/mona-lisa_smile.jpg" width="640" /></a></div><br />
<br />
புன்னகையென்பது மகிழ்ச்சி. அதன் பெறுமதி அளப்பரியது. புன்னகைத்தவாறு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்வாக வைத்துக்கொள்வதென்பது ஓர் கலை மட்டுமல்ல அதுவோர் தேவையான சேவையும்கூட. சிரித்தமுகம் எல்லோருக்கும் அமைந்துவிடாது. இயல்பாகவே சிரித்தமுகம் அமைந்துவிட்டால் அதை அதிஷ்டம் என்றே கூறவேண்டும். சிரித்த முகத்துடன் அமைதியும் சாந்தமும் சேர்ந்து கொண்டால் தெய்வீகத்தன்மை தோன்றிவிடும். அப்படிப்பட்டவர்களோடு பழகக்கிடைப்பதென்பது ஓர் வரமாகும். <br />
<br />
<span style="color: #783f04;">உன் புன்னகைச் சாரலில்</span><br />
<span style="color: #783f04;">குளிரும் என் எரிமலைச் சோகம்</span><br />
<span style="color: #783f04;">உடல் சுமந்த அழகும்</span><br />
<span style="color: #783f04;">மனம் நிறைந்த அன்பும் </span><br />
<span style="color: #783f04;">இரண்டங்குலப் புன்னகையும் </span><br />
<span style="color: #783f04;">வசீகரிக்கும் ஆயுதங்கள் </span><br />
<span style="color: #783f04;">பகலில்கூட பயமுறுத்தும் </span><br />
<span style="color: #783f04;">மனித விகாரங்களுக்கிடையே</span><br />
<span style="color: #783f04;">நாணலைப்போல் மென்மையாக</span><br />
<span style="color: #783f04;">பாலைப்போல் வெண்மையாக</span><br />
<span style="color: #783f04;">புன்னகைத் துளிகளை </span><br />
<span style="color: #783f04;">மௌனமாகத் தூவிச்செல்</span><br />
<span style="color: #783f04;">இதயக் கொந்தளிப்புகள்</span><br />
<span style="color: #783f04;">இல்லாது போய்விடும் </span><br />
<span style="color: #783f04;">பேசுகின்ற பொக்கிஷமே</span><br />
<span style="color: #783f04;">பாசத்தின் உடன்பிறப்பே</span><br />
<span style="color: #783f04;">புன்னகையொன்றே போதுமே</span><br />
<span style="color: #783f04;">என்மனம் உன்வசமாகுமே</span><br />
<br />
சிரிப்பைத் தவிர்க்க முடியாது. சிரிப்போடுமட்டும்தான் என்னால் வாழமுடியும். என்னோடு இணைந்திருக்கின்றது எனது சிரிப்பு. எல்லோரிடமும் தனித்துவமான சிரிப்பொன்றிருக்கின்றது. எந்த ஒரு சூழ்நிலையையும் சமன்செய்துவிடுகின்றது கலகலக்கும் சிரிப்புச் சத்தம். யாருமே தனியாகச் சிரிக்கமுடியாது அப்படிச் சிரித்தால் அதற்கு வேறு பெயர் சூட்டிவிடுவார்கள். சிரித்து மகிழ்வதற்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆகவே சிரிப்பவர்களை தேடிச்சென்று பழகிப்பாருங்கள் சிரிப்பின் ஆளுமை புரிந்துவிடும். ஒருவரது சிரிப்பு மற்றவர்களை எந்தவிதத்தில் வசீகரிக்கின்றது என்பதில்தான் அந்த சிரிப்பின் ஆளுமை அமைந்துள்ளது. மனிதனின் ஆளுமையென்பது இவையெல்லாவற்றையும் அடக்கியதுதான். புறத்தோற்றம் அகத்தோற்றம் இரண்டுமே மேம்பட்டிருப்பவர்கள்தான் ஆளுமைமிக்க மனிதர்களாவர். அகத்தில் அன்பும் குறையாத கருணையும் இருப்பவர்கள்தான் புறத்திலும் அழகாக இருக்கமுடியும். வெளிப்பூச்சில் அழகை தக்கவைத்துக் கொள்பவர்களது வேஷம் சிறிது நேர பழக்கத்தில் வெளிப்பட்டுவிடும்.<br />
<br />
நான் பழகிய மற்றும் பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களைத் திரும்பிப் பார்க்கின்றேன். எனது நண்பர்கள் நல்ல நகைச்சுவை உணர்வுடையவர்களாகவே இருந்திருக்கின்றார்கள். எங்களைச் சுற்றி எப்போதுமே ஓர் கூட்டம் நிற்கும். சிடுமூச்சிகளுடன் எனது நட்புத் தொடர்வதேயில்லை. எதிர்மறையாக சிந்திப்பவர்களிடமிருந்தும் எதிலுமே குறைகளைச் சுட்டிக்காட்டி மற்றவர்களை வேதனைப்படுத்தி தம்மை சந்தோசப்படுத்துபவர்களிடமிருந்து எப்போதும் தள்ளியே நிற்கின்றேன்.<br />
<br />
மகிழ்வாக இருப்பதென்பது எனது இயல்பு அதுவே எனது விருப்பம். அதனால்தான் என்னையும் என்னைச் சார்ந்தவர்களினதும் வட்டத்துக்குள் எப்போதும் சிரிப்பலைகள் சுற்றிக் கொண்டேயிருக்கும். சிரிப்பென்பது ஓர் ஆரோக்கியமான தொற்றுநோய் பக்கத்தில் இருப்பவர்களையும் விரைவாகத் தொற்றிக்கொள்ளும். அதன்மூலம் அவர்களுக்கிடையேயான நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghpcZrp0GnL6tV9vZ_dZvwLMWaKUtlvfaV_V8hWtK95H8YNbRPKr0j8PIIZe3-yT_14LBPHiLUK7ExKLdzmshCxEjccoOi4F-sBlsrjBhYb6AOhzQckoxSz0ysmTnELy1GDoPc79z-2Rk/s1600/children%252Cfun%252Claughter%252Cphotography-86ed3c1f594902ff927ce29a48ab7797_m.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" hda="true" height="547" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghpcZrp0GnL6tV9vZ_dZvwLMWaKUtlvfaV_V8hWtK95H8YNbRPKr0j8PIIZe3-yT_14LBPHiLUK7ExKLdzmshCxEjccoOi4F-sBlsrjBhYb6AOhzQckoxSz0ysmTnELy1GDoPc79z-2Rk/s640/children%252Cfun%252Claughter%252Cphotography-86ed3c1f594902ff927ce29a48ab7797_m.jpg" width="640" /></a></div><br />
விஞ்ஞான ஆராய்சிகளின்படி சிரிப்பென்பது உன்னதமான நோய் நிவாரண சக்தியென்றும் உடல் தசைகளின் இறுக்கத்தை குறைக்கும் நல்லதோர் உடற்பயிற்சியென்றும் கூறப்படுகின்றது. அதனால்தான் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று கூறினார்கள். சேர்ந்து சிரியுங்கள் மனம் மிகவும் இலேசாகிவிடும். மனஅழுத்தத்தை மனவலியை கட்டுப்படுத்துவதற்கு சிரிப்பே சிறந்த மருந்து. ஆனால் தேவைகளுக்காக சிரிப்பதென்பது வேறு சிரித்த மனசோடு இருப்பதென்பது வேறு. சிரிப்பில் பலவிதமான வகைகள் இருந்தபோதும் இயற்கையான சிரிப்புடன் இயல்பாக இருக்கும் மனிதர்களே பலரையும் வசீகரித்துக் கொள்வார்கள்.<br />
<br />
எப்போதுமே சிடுமூஞ்சியாக இருந்துவிட்டு திடீரென்று சிரிப்புக்கு மாறமுடியாது. சிரிப்பதுகூட ஓர் பயிற்சியும் பழக்கமும்தான். காசின்றி செலவிடும் உண்மையான சிரிப்புக்கு விலையேது? சிரித்துக்கொள்ளுங்கள்.<br />
<br />
<span style="color: #783f04;">சிரிப்பில் மயங்காத மனமுண்டா </span><br />
<span style="color: #783f04;">வெட்கத்தில் ஒரு சிரிப்பு</span><br />
<span style="color: #783f04;">வேதனையில் ஓர் சிரிப்பு</span><br />
<span style="color: #783f04;">நக்கலில் ஓர் சிரிப்பு</span><br />
<span style="color: #783f04;">நாணத்தில் ஓர் சிரிப்பு</span><br />
<span style="color: #783f04;">உயிர்க் கொல்லிபோல்</span><br />
<span style="color: #783f04;">உள்ளுக்குள் விஷம் கலந்து</span><br />
<span style="color: #783f04;">வெளியிலே சிரிக்கும்</span><br />
<span style="color: #783f04;">வஞ்சகச் சிரிப்புமுண்டு</span><br />
<span style="color: #783f04;">அரைகுறையாய் மலர்ந்த</span><br />
<span style="color: #783f04;">அல்லிமலரைப்போல் சிரிக்கும் </span><br />
<span style="color: #783f04;">அப்பாவிச் சிரிப்புமுண்டு</span><br />
<span style="color: #783f04;">இன்னும் பல சிரிப்புகள்</span><br />
<span style="color: #783f04;">வர்ணனைக்குள் சிக்காது </span><br />
<span style="color: #783f04;">வலுவிழந்து சிரிக்கின்றன</span><br />
<span style="color: #783f04;">மயங்கத்தானே சிரிப்பு</span><br />
<span style="color: #783f04;">மயங்கி மகிழத்தானே சிரிப்பு</span><br />
<span style="color: #783f04;">மனிதகுலத்தின் </span><br />
<span style="color: #783f04;">தனிச்சிறப்பல்லவா சிரிப்பு</span><br />
<span style="color: #783f04;">சிரித்துப் பாருங்கள்</span><br />
<span style="color: #783f04;">ஒட்டிக்கொள்ளும் சிரிப்பு</span><br />
<br />
நகைச்சுவையுணர்வென்பது மிக முக்கியமானதொன்றாகும். சிலருக்கு அடிப்படையிலேயே நகைச்சுவையுணர்வு இருக்கின்றது. அவர்கள் தொடர்ச்சியாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதால் அவர்களது நகைச்சுவையுணர்வு மேலும் மெருகூட்டப்பட்டு எல்லோராலும் விரும்பப்படுகின்றது. பொழுதுபோக்குச் சாதனங்களில் நகைச்சுவைச் சித்திரங்கள் அதிகமாக சேர்க்கப்படவேண்டும். இயந்திரமயமான வாழ்க்கையில் ஓடி ஓடிக் களைத்து ஓய்வுதேடும் வேளையில் அழுது வடியும் திரைப்படங்களும் தொடர் நாடகங்களும் தேவையா என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழவேண்டும். காசைக்கொடுத்து மேலும் சுமையையும் அழுத்தத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டுமா? கொஞ்சநேரம் அனைத்தையும் மறந்து சந்தோசமாக குடும்பத்தோடு சிரித்து மகிழ்ந்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளை தேடிச் செல்லுங்கள். <br />
<br />
எனது நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கு வேலைத்தளத்தில் கழிகின்றது. வேறு இனத்தவர்கள் மத்தியில் பணி புரிந்தாலும் மகிழ்ச்சியான புன்னகை ததும்பும் முகங்களை ஒவ்வொரு காலையும் தரிசித்து காலை வணக்கம் கூறி எனது புதிய நாளை ஆரம்பிப்பதென்பது எல்லோருக்கும் சுலபமாக கிடைத்துவிடாது. நன்றி கூறும்போதும் வாழ்த்தும்போதும் அன்பை பரிமாறும்போதும் காதலை தெரிவிக்கும்போதும் நட்பை வெளிப்படுத்தும்போதும் புன்னகை தானாக வெளிப்படுகின்றது. வெற்றுப் புன்னகைக்கும் முகமலர்ச்சியோடு முறுவலிக்கும் புன்னகைக்கும் உள்ள வித்தியாசத்தை புன்னகை பரிமாற்றத்தின்போது சுலபமாக உணர்ந்து கொள்ளமுடியும்.<br />
<br />
வயது முதிர்ந்தவர்கள் சிரிக்கின்றபோது நிறைவான சிரிப்பொன்றைக் காணலாம். வயசோடு வக்கிரபுத்திகள் தேவையற்ற காழ்ப்புணர்ச்சிகள் மிருக குணங்கள் போன்றவை அழிந்து போய்விடுவதால் அதுவரைகாலமும் தொலைத்த நிர்மலமான மனசு அவர்களுக்கு மீண்டும் திரும்பக் கிடைத்து விடுகின்றது. அதனாலோ என்னவோ வயது முதிர்ந்து பொக்கை வாயால் சிரிக்கும் மனிதர்களின் சிரிப்பில் கள்ளமற்ற குழந்தையின் சிரிப்பை காணமுடியும். <br />
<br />
துன்பத்தில் இருப்பவர்களுக்கு எப்படி சிரிப்புவரும் என்ற கேள்வியுமுண்டு. துன்பத்தில் உழலும்போது அழுவதுதான் சரியென்று யாருமே சொல்லவில்லை. துன்பம் வருகின்றபோது துன்பமே வாழ்க்கை என்று நினைப்பவர்கள் ஒரு சாரார் துன்பத்தை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வெளியேறி வாழ்பவர்கள் இன்னொருசாரார். இருசாரார்களது சிரிப்பும் வேறு வேறு விதமாக இருக்கும். வேதனைப்படும்போது நான் பேசுகின்ற குரலில்கூட சோகம் ததும்பி நிற்கும். அப்படியிருக்கும்போது எப்படி எனது சிரிப்பு நிஐமானதாக இருக்கமுடியும். ஆனால் என்னைப் போன்றவர்கள் சோகத்திற்குள் நீண்ட நேரம் வாழமாட்டார்கள். சோகத்திலிருக்கும் சில மணி நேரங்களுக்குள் அழவேண்டும் என்றால் சீக்கிரம் அழுது முடித்துவிட்டு துன்பத்திற்கான காரணங்களை அறிந்து அதற்கான தீர்வுகளையும் தீர்மானித்துவிட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடுவார்கள். உணர்சிகளற்று வரவேற்பாளர்களின் சிரிப்பைப்போல் கடமைக்காக சிரித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். <br />
<br />
தானும் மகிழ்ந்து தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தாம் சந்திக்கும் துன்பங்களையும் வெல்லக்கூடிய மனப்பக்குவத்தை பெற்றிருப்பர். அதுமட்டுமல்ல எத்தகைய துன்ப நிகழ்வையும் இன்பமாக மாற்றிக் கொள்ளும் பயிற்சியையும் துன்பத்தை இன்பமாக்கிக்கொள்வதற்கான பல தெரிவுகளை நாடிச்செல்லும் திறமையையும் பெற்றிருப்பர் என்பதும் எனது அனுபவக்கருத்து. <br />
<br />
பரந்தமனப்பான்மை கொண்டவர்களது மனதில் எப்போதும் மகிழ்ச்சியிருக்;கும் அவர்களோடு பழகுபவர்களும் ஓர் பாதுகாப்பான வட்டத்துக்குள் வாழ்கின்ற உணர்வை அனுபவிப்பார்கள். சாதாரணமாக மற்றவர்களுடன் ஒத்துப்போகாதவர்கள்கூட இவர்களோடு சுலபமாக இணைந்து கொள்வார்கள். <br />
<br />
சிலரிடம் சென்று பேசிப்பாருங்கள். எதையுமே ஈடுபாட்டுடனும் கருத்துக்களோடு உடன்படும் நோக்கிலும் பேசுவார்கள். அவர்களைநாடி மீண்டும் மீண்டும் சென்று பேசத்தோன்றும். இன்னும் சிலர் இருக்கின்றார்கள். எதையும் எதிர்மறையாகவே பார்ப்பார்கள். அவர்களது கண்களுக்கு குறைகள் மட்டும்தான் தெரியும். நிறைகளைப் பாராட்டும் மனசற்றவர்கள். தமது மனசில் உள்ள தாழ்வுச்சிக்கலை மற்றவர்களது குறையை சுட்டிக்காட்டுவதால் சமநிலைப் படுத்திக்கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் சிரிக்கத் தெரியாதவர்கள். சந்தோசத்தை அனுபவிக்கமுடியாதவர்கள். கடுகடுப்பான முகத்தோடு வளையவரும் இவர்களைவிட்டு சுற்றியிருப்பவர்கள் தூர விலகிச் சென்றுவிடுவார்கள். இவர்கள் தனித்தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாவப்பட்டவர்கள் என்றே கூறவேண்டும்.<br />
<br />
இப்படிப்பட்டவர்களது மனப்போக்கிற்கு அடிப்படைக் காரணம் அவர்களது வாழ்க்கைமுறைதான். சிறுவயது வாழ்க்கைச் சூழல் அவர்களது மனதை வறண்ட பாலைவனமாக மாற்றிவிடுகின்றது. சிறுவயதுமுதல் எப்போதும் சிரித்த முகத்தோடுதான் நான் வளர்ந்தேன். எனது பெற்றோர்கள் எனது சிரிப்புக்கு தீனி போட்டு வளர்த்தார்கள். தொடர்ந்து என்னோடு கூடவந்த உறவுகள் எனது சிரிப்பை பக்குவப்படுத்தினார்கள். நான் தொடர்ந்து சிரிப்பதை பொறுக்கமுடியாமல் என்னோடு கூட இருந்து எனது சிரிப்பை கொன்றுவிடவேண்டும் என்ற முயற்சியில் அவ்வப்போது குழிபறித்து தோல்வியுற்று பறித்த குழியில் தம்மைப் புதைத்துக்கொண்டவர்களும் உண்டு. <br />
<br />
எனது வாழ்க்கைச் சக்கரம் மாறுபட்ட வேகத்தோடு சுழன்று கொண்டிருந்தாலும் என்றும் வாய்விட்டுச் சிரிப்பவர்களின் உறவைத் தேடிச் செல்லும் பெண்ணாகவே வாழ்;கின்றேன். இறுதிக் காலம்வரை எனது சிரிப்பும் அதனூடக நான் அனுபவிக்கும் மகிழ்ச்சியும் தொடரும் என்றே கருதுகின்றேன். </div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-86483515781909268222011-11-08T12:26:00.005+11:002011-11-08T19:12:49.930+11:00போதிமரத்தின் நிழல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggNBeb-sLDIjP71TYVvomV5LalM46qsOujeoCniU2KnBh31nYb0s0d7bWFAgMNiotXPGbpam-DkNVe-f1N1NEeFUQorAbZ9K5i4C1bqfStlJHkVGjU_u4qW7bAU517bgKpF7YyBsi5ZPs/s1600/bodhi-tree-blue.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="356px" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggNBeb-sLDIjP71TYVvomV5LalM46qsOujeoCniU2KnBh31nYb0s0d7bWFAgMNiotXPGbpam-DkNVe-f1N1NEeFUQorAbZ9K5i4C1bqfStlJHkVGjU_u4qW7bAU517bgKpF7YyBsi5ZPs/s640/bodhi-tree-blue.jpg" width="640px" /></a><br />
<br />
<br />
அரசமரத்தடியில் சித்தார்த்தன் தன்னை புத்தனாக கண்டுகொண்டான். தன்னைக் கண்டுகொண்ட சித்தார்த்தன் ஞானம் அடைந்து தனது வாழ்க்கை பற்றிய தேடலை ஆரம்பிக்க உலகமும் அவனைப் புத்தனாக கண்டுகொண்டது. <br />
<br />
நம்மை நாமே கண்டுகொள்ள போதிமரத்தின் நிழல் ஒன்றும் அவசியமில்லை. தினமும் நம்மைச் சுற்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் புதுப்புது அனுபவத்தைக் கற்றுத்தருகின்றன. அவை கற்றுத்தரும் பாடங்களை பாடசாலைகளோ நூல்களோ தெளிவாக கற்றுத்தரமுடியுமா? ஆனால் அவற்றிலிருந்து வாழ்க்கைக்கு தேவையானவற்றை நாம் கற்றுக்கொள்கின்றோமா? <br />
<br />
<span style="color: blue;">உறக்கத்தில் மட்டும்</span><br />
<span style="color: blue;">தேவதையுடன் உரையாடல்</span><br />
<span style="color: blue;">விடிந்தவுடன் </span><br />
<span style="color: blue;">வேதனைகளும் விளையாட்டும் </span><br />
<span style="color: blue;">தொடராகத் துரத்தும் வாடிக்கை</span><br />
<span style="color: blue;">கொஞ்சநேர அமைதிக்கும் </span><br />
<span style="color: blue;">இடையறாத போராட்டம்</span><br />
<span style="color: blue;">தவிர்க்கமுடியாத காயங்கள்</span><br />
<span style="color: blue;">தணிக்கமுடியாத தழும்புகள்</span><br />
<span style="color: blue;">ஒவ்வொரு தழும்புகளும்</span><br />
<span style="color: blue;">ஒவ்வொரு போதிமரம்</span><br />
<span style="color: blue;">மீண்டும் மீண்டும் போதிமரங்கள்</span><br />
<span style="color: blue;">புத்தனாக மாறுவது எப்போது?</span><br />
<br />
இந்தக் கணத்தில் வாழ்வதே வாழ்க்கை. ஆனால் அதை அனுபவிப்பதற்கு ஏதேதோ காரணங்களைச் சொல்லி தடைகளைப் போட்டு எம்மை நாமே வதைத்து சுற்றியுள்ளவர்களது பார்வையை திருப்திப் படுத்த ஞானத்தைத் தேடி ஓடுவதாக வேஷம் போட்டு ஓர் தற்காலிகமான மதிப்பையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துகின்றோம். <br />
<br />
சோதனைகளும் பயமும் வரும்போதும் நிராதரவான நிலையை உணரும்போதும் அதிலிருந்து தப்பிப்பதற்கு ஏதோ ஒன்றை நாடிச் செல்வது இயல்பு. நம்மீதுள்ள நம்பிக்கை குறைகின்றபோது வேறொன்றின்மீது நம்பிக்கை அதிகரிக்கின்றது. ஓர் பாதுகாப்பான நிழல் கிடைத்தால் அதில் ஐக்கியமாவதைத்தான் மனசும் விரும்பும். ஆனால் பின்பு எல்லாம் சரியாகி பழைய நிலைக்கு வந்தபின்பு ஞானம் மறைந்து விடுகின்றது, மறந்தும் விடுகின்றது. <br />
<br />
<span style="color: blue;">படித்துத் தெரிந்தவை</span><br />
<span style="color: blue;">பட்டறிந்தவை </span><br />
<span style="color: blue;">சொல்லப்பட்டவை</span><br />
<span style="color: blue;">அனைத்தும் அறிந்தும் </span><br />
<span style="color: blue;">தொற்று நோய்போல்</span><br />
<span style="color: blue;">ஒட்டிக்கொள்ளும் பலவீனத்தை </span><br />
<span style="color: blue;">எங்கே விட்டுச்செல்வது</span><br />
<span style="color: blue;">காலத்தோடு கரையுமென்றால்</span><br />
<span style="color: blue;">கையில்வைத்து காத்திருக்கலாம்</span><br />
<span style="color: blue;">மரணத்தோடு மறையுமென்றால்</span><br />
<span style="color: blue;">கையளித்துவிட்டு மறந்திருக்கலாம்</span><br />
<span style="color: blue;">எதுவுமே நடக்கவில்லை </span><br />
<span style="color: blue;">கண்ணீர்துளிகளின் செறிவில்</span><br />
<span style="color: blue;">போதிமரங்கள் மட்டும் வளர்கின்றன</span><br />
<span style="color: blue;">போதனைகள் பயனற்று வாடுகின்றன</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
விரக்தியும் நம்பிக்கையும் மாறிமாறி வருவதுதான் வாழ்க்கை. பரந்த வானத்திற்கு கீழ் எத்த<span style="color: black;">னை</span> ஐPவராசிகள். ஒவ்வொன்றுமே எமது வாழ்க்கையோடு ஏதோவகையில் இணைக்கப்பட்டவை. அவற்றிலிருந்து நாமும் எம்மிலிருந்து அவையும் ஏதாவதொன்றை பெற்றுக் கொள்ளும் வண்ணம் வாழப் பழகிக் கொண்டால் எதுவுமே சாத்தியம்தான். <br />
<br />
<span style="color: blue;">வானம் தனக்கொரு போதிமரமென்றான் </span><br />
<span style="color: blue;">வானம் பார்த்துக் கிடக்கிறது பூமி</span><br />
<span style="color: blue;">பரந்த பூமியில் காண்பதெல்லாம் பாடம்</span><br />
<span style="color: blue;">நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள் </span><br />
<span style="color: blue;">அவற்றைக் கிளறும் மனிதக் கரங்கள்</span><br />
<span style="color: blue;">தெருவிளக்கின் ஓரத்தில் </span><br />
<span style="color: blue;">போர்வைக்குள் சுருண்டிருக்கும் உடல்கள்</span><br />
<span style="color: blue;">தானாக வெளிச்சத்தை தேடிச்சென்று </span><br />
<span style="color: blue;">ஒரு நொடியில் செத்துமடியும் ஈசல்கள்</span><br />
<span style="color: blue;">ஒவ்வொரு காட்சியும் தனித்துவமானவை</span><br />
<span style="color: blue;">ஞானமடைவதற்கு அரசமரத்தை</span><br />
<span style="color: blue;">தேடிக்கொண்டிருக்காதீர்கள்! </span><br />
<span style="color: blue;">அருகிலிருக்கும் ஒவ்வொன்றும்</span><br />
<span style="color: blue;">ஏதோவொன்றைச் சொல்கின்றதே</span><br />
<span style="color: blue;">புரிந்து கொள்ள முயற்சியெடுப்போம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
என்னை எனது பலங்களோடும் பலவீனங்களோடும் ஏற்றுக்கொண்டேன். எனக்காக பெருமைப்பட்டேன். எனது சுயமரியாதையை மதித்தேன். இதற்கு பல காலங்களைக் கடக்க வேண்டியிருந்தது. சிறுமைப்பட வேண்டியிருந்தது பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகளிற்குள் சிக்கி வெளியில் வரவேண்டியிருந்தது சுற்றியிருந்த மனிதர்களின் அழகான அழகற்ற குணங்களை விழிப்புணர்வுடன் கற்க வேண்டியிருந்தது. ஓவ்வொன்றையும் குதூகலிக்கும் மனசோடு அனுபவிக்கக் கற்றுக்கொண்டதால் தன்னுணர்வோடு நிலையாக தொடரமுடிகின்றது. <br />
<br />
<span style="color: blue;">தொலைத்துவிட்ட என்னை </span><br />
<span style="color: blue;">மீண்டும் பெற்றுக்கொண்டேன்</span><br />
<span style="color: blue;">தொலைந்த 'நான்' மீண்டும் சேராதவரை</span><br />
<span style="color: blue;">உலகம் எனக்கு கிடைக்கவில்லை</span><br />
<span style="color: blue;">எனதும் உனதும் அவர்களதும்</span><br />
<span style="color: blue;">ஒவ்வொரு நிகழ்வும் அனுபவமானது</span><br />
<span style="color: blue;">ஒவ்வொரு மனிதனும் போதிமரமானான்</span><br />
<span style="color: blue;">பட்டுப்பட்டு படிக்கும் பள்ளிக்கூடமானான் </span><br />
<span style="color: blue;">இன்று என்னைச்சுற்றிப் பல வண்ணச்சிறகுகள் </span><br />
<span style="color: blue;">பறப்பதற்கான வல்லமையோடும் </span><br />
<span style="color: blue;">சாதிக்கத் துடிக்கும் தேடலோடும்!</span><br />
<br />
<br />
<strong><span style="color: red;">சௌந்தரி</span></strong></div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-62220251281544204702011-08-15T08:37:00.002+10:002011-11-08T19:28:16.472+11:00சின்ன சின்ன ஆசை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAy5msWcl35LtNiCa2UPk9pcTeMg4wWWGUEiUEM6PjW516pxYCyzRlyl2W8Up6bEA8vNsfQYIQJfNxebvqFa6GZHLOXPgVy-sIamXbUIXQHfy-j24qvbGfm3DXXAmVp0OilGJGG5A1NLc/s1600/VKWishes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="393px" naa="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAy5msWcl35LtNiCa2UPk9pcTeMg4wWWGUEiUEM6PjW516pxYCyzRlyl2W8Up6bEA8vNsfQYIQJfNxebvqFa6GZHLOXPgVy-sIamXbUIXQHfy-j24qvbGfm3DXXAmVp0OilGJGG5A1NLc/s400/VKWishes.jpg" width="400px" /></a></div><br />
<br />
<div closure_uid_j9j3id="131"><div closure_uid_if9w4i="162">ஆசை இல்லாமல் வாழ்க்கையில்லை. சின்ன சின்ன ஆசைகளோ பெரிய பெரிய ஆசைகளோ ஆசை இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இல்லை. நிறைவேறிய ஆசைகள் நிறைவேறாத ஆசைகள் என்று பல விதமான ஆசைகளை தமக்குள் மறைத்தும் மறையாமலும் வைத்திருக்கின்றார்கள் மனிதர்கள். அந்தந்த வயசில் அவ்வப்போது எழும் ஆசைகளை மனதிற்குள் பூட்டி வைக்காது அவற்றை அனுபவிக்க முயற்சியெடுப்பதே சிறந்தது. முயற்சியில்லாத எதுவுமே பலனளிக்காது. </div></div><br />
<br />
இவர் இப்படியெல்லாம் ஆசைப்படுகின்றார் அவர் தகுதிக்குமீறி ஆசைப்படுகின்றார் என்று மற்றவர்களைப் பார்த்துக் குறை கூறுகின்றவர்கள்கூட சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது அவற்றிற்காக ஆசைப்படுவார்கள். ஆசைப்படுவது ஒன்றும் தப்பில்லை. ஆசை என்பது இல்லாது போனால்தான் அவன் சவத்திற்கு ஒப்பாவான்<br />
<br />
<div closure_uid_if9w4i="292">ஒரு மனிதன் சட்டத்தின், சமயத்தின், சமூகத்தின் வரையறைக்குட்பட்டு தனது தேவைகளிற்காக ஆசைப்படும்போதும் புதியவற்றை அறிந்து கொள்வதற்குரிய முயற்சிகளை ஏற்படுத்திக் கொள்ளும் போதும்தான் பலவிதமான அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்றான். அனுபவங்கள்மூலம்தான் மனிதன் தன்னை வளர்த்துக்கொள்கின்றான். </div><br />
ஆசைகள் நியாயமானவையாக இருக்குமென்றால் அவை நிறைவேறுமென்றும் நியாயமற்ற ஆசைகள் குற்றங்களிற்கும் துன்பங்களிற்குமான அஸ்திவாரமென்றும் கூறப்படுகின்றது. மனித மனங்கள் மலர ஆசைப்படுவது நியாயமானதென்றும் ஒருவரது ஆசைகள் மற்றயவர்களின் மனங்களை துன்பப்படுத்தும் என்றால் அவை நியாயமற்றவை என்றும் எடுத்துக் கொள்ளலாமா?<br />
<br />
ஆசைக்கென்று ஓர் அளவுகோல் இருக்கின்றதா? இருந்தால் அந்த அளவுகோல் எல்லோருக்கும் பொதுவானதாக அமைகின்றதா? இல்லை ஆளாளுக்கு வேறுபடுகின்றதா? வேறுபடுகின்றதென்றால் அந்த அளவுகோல் எதற்காக? இவையெல்லாம் கேள்விகளாகவே இருக்கின்றன. <br />
<br />
<br />
இதோ ஆசைபற்றி மு மேத்தாவின் கவிதையொன்று<br />
<br />
<div class="separator" closure_uid_j9j3id="173" style="clear: both; text-align: center;"></div><div closure_uid_j9j3id="165"></div><div style="text-align: left;"><span style="color: #274e13;">எத்தனை கோடி மலர்கள் மலர்ந்தன</span></div><div closure_uid_if9w4i="170" style="text-align: left;"><span style="color: #274e13;">இதயச் சோலையிலே - இதில்</span></div><div closure_uid_if9w4i="171" style="text-align: left;"><span style="color: #274e13;">எத்தனை எத்தனை வாடி உதிர்ந்தன</span></div><div closure_uid_if9w4i="172" style="text-align: left;"><span style="color: #274e13;">எந்தன் வாழ்வினிலே</span></div><div closure_uid_if9w4i="173" style="text-align: left;"><span style="color: #274e13;">எத்தனை பாதைகள் எதிரே தெரிந்தன</span></div><div closure_uid_if9w4i="174" style="text-align: left;"><span style="color: #274e13;">எனது கண்களிலே - அதில்</span></div><div closure_uid_if9w4i="175" style="text-align: left;"><span style="color: #274e13;">எத்தனை எத்தனை இருண்டு மறைந்தன</span></div><div closure_uid_if9w4i="176" style="text-align: left;"><span style="color: #274e13;">எந்தன் வாழ்க்கையிலே</span></div><div closure_uid_if9w4i="177" style="text-align: left;"><span style="color: #274e13;">பாசமும் ஆசையும் பற்றிப் படர்ந்தன</span></div><div closure_uid_if9w4i="185" style="text-align: left;"><span style="color: #274e13;">பாழும் மனதினிலே - அதில்</span></div><div closure_uid_if9w4i="186" style="text-align: left;"><span style="color: #274e13;">ஓசையில்லாமல் ஓய்ந்தவை பற்பல</span></div><div closure_uid_if9w4i="187" style="text-align: left;"><span style="color: #274e13;">உலக வாழ்க்கையிலே</span></div><div closure_uid_if9w4i="188" style="text-align: left;"><span style="color: #274e13;">கொள்கையும் நேர்மையும் உண்மையும்</span></div><div closure_uid_if9w4i="189" style="text-align: left;"><span style="color: #274e13;">பூத்துக் குலுங்கின நெஞ்சினிலே – அதில்</span></div><div closure_uid_if9w4i="190" style="text-align: left;"><span style="color: #274e13;">கல்லால் அடித்த கனிபோல் உதிர்ந்தவை</span></div><div closure_uid_if9w4i="191" style="text-align: left;"><span style="color: #274e13;">கணக்கில வாழ்க்கையிலே</span></div><br />
<br />
<div closure_uid_if9w4i="192">கோடுகள் போட்டு அதற்குள் வாழ்க்கையை வாழ நினைக்கின்றோம் ஆனால் அப்படியே வாழமுடிகின்றதா. இல்லையே! கல்லால் அடித்த கனிபோல் அல்லவா உதிர்ந்து போகின்றது. அதற்காக சூடுகண்ட பூனைபோல் அடுப்பங்கரைப்பக்கம் எட்டிப் பார்க்காமலா விடுகின்றோம். அதுவும் இல்லையே! ஆகவே ஆனது ஆகட்டும் நீ ஆசைப்படு என்பது சரிபோல் தோன்றுகின்றது.</div><div closure_uid_j9j3id="174"><br />
</div>வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்படுவதற்கான மூலகாரணம் ஆசை. மண்ணென்றாலென்ன பெண்ணென்றால் என்ன பொன்னென்றாலென்ன எதற்கும் ஆசைதானே அடிப்படைக் காரணம். ஆனால் ஆசை பேராசையாகின்றபோது அங்கே சீரழிவுதான் என்பதை இந்தக் கவிதை கூறும். <br />
<br />
<div closure_uid_j9j3id="175"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><span style="color: #274e13;">ஆசைப்படு ஆபத்தில்லை</span><br />
<div closure_uid_if9w4i="194" style="text-align: left;"><span style="color: #274e13;">ஆசை பேராசையானால்</span></div><div closure_uid_if9w4i="195" style="text-align: left;"><span style="color: #274e13;">அழிவுதான் உலகநியதி </span></div><div closure_uid_if9w4i="196" style="text-align: left;"><span style="color: #274e13;">அரசியல்வாதியின் பேராசை</span></div><div closure_uid_if9w4i="197" style="text-align: left;"><span style="color: #274e13;">நாட்டு மக்களைப் பாதிக்கும்</span></div><div closure_uid_if9w4i="199" style="text-align: left;"><span style="color: #274e13;">ஆக்கிரமிப்பாளனின் பேராசை</span></div><div closure_uid_if9w4i="200" style="text-align: left;"><span style="color: #274e13;">நாடு நகரங்களைப் பாதிக்கும்</span></div><div closure_uid_if9w4i="201" style="text-align: left;"><span style="color: #274e13;">மதங்களின் பேராசை</span></div><div closure_uid_if9w4i="202" style="text-align: left;"><span style="color: #274e13;">மரணத்தைக் கொடுக்கும்</span></div><div closure_uid_if9w4i="203" style="text-align: left;"><span style="color: #274e13;">மனங்களின் பேராசை</span></div><div closure_uid_if9w4i="204" style="text-align: left;"><span style="color: #274e13;">மகிழ்ச்சியைக் கெடுக்கும்</span></div><div closure_uid_if9w4i="205" style="text-align: left;"><span style="color: #274e13;">தேவைக்குப் போராடு </span></div><div closure_uid_if9w4i="206" style="text-align: left;"><span style="color: #274e13;">நீ போற்றப்படுவாய்</span></div><div closure_uid_if9w4i="207" style="text-align: left;"><span style="color: #274e13;">காலமறிந்து கைகொடு</span></div><div closure_uid_if9w4i="208" style="text-align: left;"><span style="color: #274e13;">நீ வாழ்த்தப்படுவாய்</span></div><div closure_uid_if9w4i="210" style="text-align: left;"><span style="color: #274e13;">தகுதிக்குள் ஆசைப்படு</span></div><div closure_uid_if9w4i="212" style="text-align: left;"><span style="color: #274e13;">தரமாக வாழ்வாய்</span></div><div closure_uid_if9w4i="213" style="text-align: left;"><span style="color: #274e13;">ஆசைப்படு</span></div><div closure_uid_if9w4i="214" style="text-align: left;"><span style="color: #274e13;">அனைத்துக்கும் ஆசைப்படு </span></div><div closure_uid_if9w4i="215" style="text-align: left;"><span style="color: #274e13;">அதுகூடத் தவறில்லை</span></div><div closure_uid_if9w4i="216" style="text-align: left;"><span style="color: #274e13;">ஆனால் அடுத்தவன் </span></div><div closure_uid_if9w4i="217" style="text-align: left;"><span style="color: #274e13;">சொத்துக்கு ஆசைப்பட்டால் </span></div><div closure_uid_if9w4i="218" style="text-align: left;"><span style="color: #274e13;">அது முறையில்லை </span></div><div closure_uid_if9w4i="219" style="text-align: left;"><span style="color: #274e13;">பேராசை என்பது பேரழிவு</span></div><div closure_uid_if9w4i="220" style="text-align: left;"><span style="color: #274e13;">வராலாறு கூறும் பாடமிது</span></div><div closure_uid_if9w4i="221" style="text-align: left;"><span style="color: #274e13;">கற்றுக் கொள் </span></div><div closure_uid_if9w4i="222" style="text-align: left;"><span style="color: #274e13;">காலம் கடந்தாவது கற்றுக்கொள்</span></div><div style="text-align: left;"><span style="color: #274e13;"><br />
</span></div><div closure_uid_if9w4i="223" style="text-align: left;"><span style="color: red;">சௌந்தரி</span></div><div style="text-align: left;"><span style="color: #274e13;"><br />
</span></div><br />
சின்னச்சின்ன ஆசைகள் எத்தனையோ இருக்கும். பகிர்;ந்து கொள்ளக்கூடியவை மிக சொற்பமானவையே<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<span style="color: #274e13;">தாய்மடியில் தலைவைத்து கண்ணுறங்க ஆசை</span><br />
<div closure_uid_if9w4i="254"><span style="color: #274e13;">தைபிறந்தால் வழிபிறக்கும் காத்திருக்க ஆசை</span></div><div closure_uid_if9w4i="255"><span style="color: #274e13;">பெற்றவர்கள் பெருமைதனை பேசிவர ஆசை</span></div><div closure_uid_if9w4i="256"><span style="color: #274e13;">பேராசைப் பெரும்படியை தாண்டிவர ஆசை</span></div><div closure_uid_if9w4i="257"><span style="color: #274e13;">ஆர்ப்பாட்டமில்லாத அன்பு கொள்ள ஆசை</span></div><span style="color: #274e13;">போராட்டமில்லாத வாழ்வுகாண ஆசை</span><br />
<span style="color: #274e13;">உலகத்தின் அமைதிக்கு தூது செல்ல ஆசை</span><br />
<div closure_uid_if9w4i="258"><span style="color: #274e13;">ஈழத்தில் இளைப்பாறி சேவை செய்ய ஆசை</span></div><div closure_uid_if9w4i="259"><span style="color: #274e13;">தலைவரண்ணா தங்கையென்று உறவு கொள்ள ஆசை</span></div><div closure_uid_if9w4i="260"><span style="color: #274e13;">தலைதூக்கும் பாம்புகளை தலையடிக்க ஆசை</span></div><div closure_uid_if9w4i="261"><span style="color: #274e13;">பச்சிளம் குழந்தையொன்றை தத்தெடுக்க ஆசை</span></div><div closure_uid_if9w4i="262"><span style="color: #274e13;">இளம்பிறையின் சிரிப்பதனை ரசித்திருக்க ஆசை</span></div><div closure_uid_if9w4i="263"><span style="color: #274e13;">சேவலைப்போல் காலையிலே குரல் கொடுக்க ஆசை</span></div><span style="color: #274e13;">காவலாக வாசலிலே காத்துநிற்க ஆசை</span><br />
<div closure_uid_if9w4i="264"><span style="color: #274e13;">கந்தனைப்போல் சூரனை வதம் செய்ய ஆசை</span></div><div closure_uid_if9w4i="265"><span style="color: #274e13;">சந்திரனின் குளிர்மையை கடன் வாங்க ஆசை</span></div><div closure_uid_if9w4i="266"><span style="color: #274e13;">அமைதிக்கு பெயர்போன பெண்ணாக ஆசை</span></div><div closure_uid_if9w4i="267"><span style="color: #274e13;">ஆசானாய் துணிந்துநின்று அறிவுறுத்த ஆசை</span></div><div closure_uid_if9w4i="268"><span style="color: #274e13;">வம்பளக்கும் மனிதர்களை மாட்டிவிட ஆசை</span></div><div closure_uid_if9w4i="269"><span style="color: #274e13;">சிங்களத்தின் முகத்திரையை கிழித்துவிட ஆசை</span></div><div closure_uid_if9w4i="270"><span style="color: #274e13;">புலத்தினிலே வன்முறையை ஒழித்துவிட ஆசை</span></div><div closure_uid_if9w4i="271" style="text-align: left;"><span style="color: #274e13;">காதலோடு கைகோர்த்து கதைபேச ஆசை </span></div><div closure_uid_if9w4i="272"><span style="color: #274e13;">வள்ளியம்மை மணவாளன் துதிபாட ஆசை</span></div><div closure_uid_if9w4i="273"><span style="color: #274e13;">தெள்ளுதமிழ் தேன்மொழியில் கவிபாட ஆசை</span></div><div closure_uid_if9w4i="273" style="text-align: left;"><span style="color: #274e13;">பள்ளிசென்று மீண்டும் படித்துவர ஆசை</span></div><div closure_uid_if9w4i="284"><span style="color: #274e13;">உள்ளமதில் உள்ளதை உரத்துக்கூற ஆசை</span></div><div closure_uid_if9w4i="285"><span style="color: #274e13;">வன்சொல் தவிர்த்து வதம்செய்ய ஆசை</span></div><div closure_uid_if9w4i="286"><span style="color: #274e13;">இன்சொல் இணைத்து மகிழ்விக்க ஆசை</span></div><div closure_uid_if9w4i="287"><span style="color: #274e13;">நானாக நானென்றும் வாழ்ந்துவிட ஆசை</span></div><div closure_uid_if9w4i="288"><span style="color: #274e13;">பேனாவைப் பிடித்து புரட்சி செய்ய ஆசை</span></div><span style="color: #274e13;">அளவில்லா ஆசைகள் அகத்திலும் புறத்திலும் </span><br />
<div closure_uid_if9w4i="289"><span style="color: #274e13;">அத்தனையும் இறப்பதற்குள் அனுபவிக்க ஆசை</span></div><div closure_uid_if9w4i="290"><span style="color: #274e13;">இறந்தாலும் மீண்டும் பிறப்பதற்கும் ஆசை</span></div><div closure_uid_if9w4i="291"><span style="color: #274e13;">நிறைவேறா ஆசைகளைத் தொடர்வதற்கும் ஆசை</span></div><br />
<br />
<span style="color: red;">சௌந்தரி</span><br />
<br />
ஆசைகளற்ற மனிதர்கள் யார். அவர் திட்டுவார் இவர் கோவிப்பார் அவருக்காக இவருக்காக என்று துளிர்விடும் சின்ன சின்ன ஆசைகளை ஏக்கங்களைக்கூட தியாகம் என்ற பெயரிலும் ஏமாற்றம் என்ற பெயரிலும் நிறைவேற்றாது கருக்கிவிடுகின்றோம். <br />
<br />
<div closure_uid_j9j3id="227">இதோ தனது தேவைகளை தான் விரும்பியபடியே நிறைவேற்ற ஓர் நாள் வராமலா போய்விடும் என்று காத்திருக்கின்றது ஓர் குரல் </div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div closure_uid_j9j3id="209"><br />
</div><span style="color: #274e13;">அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்</span><br />
<br />
<span style="color: #274e13;">தலை சீவினேன்</span><br />
<br />
<span style="color: #274e13;">சில நண்பர்களைத் தவித்தேன்</span><br />
<br />
<span style="color: #274e13;">சட்டை போட்டுக் கொண்டேன்</span><br />
<br />
<span style="color: #274e13;">பல் துலக்கினேன்</span><br />
<br />
<span style="color: #274e13;">வழிபட்டேன்</span><br />
<br />
<span style="color: #274e13;">கல்யாணம்கூட கட்டிக் கொண்டேன்</span><br />
<br />
<span style="color: #274e13;">காத்திருக்கின்றேன்</span><br />
<br />
<span style="color: #274e13;">என் முறை வருமென்று</span><br />
<br />
<div closure_uid_j9j3id="213" style="text-align: left;">இது எல்லோருக்கும் பொருந்தும் அல்லவா? ஆசையை அடக்கிக் கொள்ளும் முறை எமது சமூகத்தில் அதிகம். சிறிதும் பெரிதுமான எத்தனை ஆசைகளை நாம் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கின்றோம். எமது ஆசைகளை சாகடித்துவிட்டு அப்பா அம்மா அக்கா அத்தான் என்று மற்றவர்களுக்காக வாழுகின்ற மனிதர்கள் எத்தனையெத்தனை</div></div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-33231240275027928682011-06-23T15:46:00.001+10:002011-06-23T23:41:44.771+10:00நான் அனுப்புவது கடிதம் அல்ல......<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw5MGDF0dOfM-Yfm0ZUSjNjw7P_4-qSeDtkk1BX_OzBr9T3YWenNir4D5hdW8T96sg0Od2Yy9hmklv6myusWXZtq7PTU1OieeGz1gkQWC3n85F6Mi9-Q7fIzAOwt51xavIt_rjTGUYnQk/s1600/Dec1-Dec5-Letters.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320px" i$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw5MGDF0dOfM-Yfm0ZUSjNjw7P_4-qSeDtkk1BX_OzBr9T3YWenNir4D5hdW8T96sg0Od2Yy9hmklv6myusWXZtq7PTU1OieeGz1gkQWC3n85F6Mi9-Q7fIzAOwt51xavIt_rjTGUYnQk/s320/Dec1-Dec5-Letters.jpg" width="280px" /></a></div>கடிதம் எழுதுவதால் தகவல்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. கடிதம் என்கின்ற இலக்கிய மொழியினூடாக ஆழமான மனித உணர்வுகளும் சேர்ந்து பயணிக்கின்றன. கடிதம் என்பது மிகவும் அழகான ஓர் தொடர்பாடல் முறை. கடிதம் எழுதுவதன் மூலம் எமது மொழியின் வளம் மேலும் செம்மைப் படுத்தப்படுகின்றது. புதிய புதிய சொற்றொடர்களை பயன்படுத்தி அழகான வாக்கியங்களை உருவாக்கி தரமான கடிதங்களை எழுத பழகிக் கொண்டோமென்றால் கதை கட்டுரை நாவல் என்று எமது சிந்தனையும் விரிவடையும். <br />
<br />
ஆனால் இன்று கடிதம் எழுதும் பழக்கம் மருவி வருகின்றது. மனித ஆசைகளை ஆதங்கங்களை அழுகையை ஆளுமையை பகிர்ந்து கொண்ட ஓர் ஊடகத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகின்றது. கடிதத் தொடர்பாடல் மூலம் உருவாகும் உணர்வு ரீதியான தொடர்பு இன்று காணாமல் போய்விட்டது. தொழில்நுட்ப முன்னேற்றம் எமது வாழ்கை முறையை சுலபமாக்கியிருப்பது ஒரு விதத்தில் சந்தோசமாக இருந்தாலும் அன்றாடம் பரிமாறிக்கொண்ட ஆத்மார்த்தமான உணர்வுகளை மழுங்கடிக்கப் பண்ணியது வேதனையான விடயமாகும். <br />
<br />
முன்பெல்லாம் பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவேன். இப்போது எனது தாய்க்கு கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்தாலே எதை எழுதுவது என்ற யோசனை. தொலைபேசியில் இரண்டு வார்த்தைகளைப் பேசுவது சுலபமாகத் தெரிகின்றது. அதுவும் வேலையில் இருந்து வீடு திரும்புகின்றபோது காருக்குள் இருந்து மொபைல் தொலைபேசியில் அழைப்பெடுத்து கதைத்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்று பெருமையாக நினைக்கத் தோன்றுகின்றது. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguScYNOl9lOqJgkBjAIhb-Cand2Llb7Inud8x4y_JvZdq9ne2y7cp75F50Eh_nLY3ILIPTFguOCVndK4-BTPEBv43Yls0Xp3iGkSCxE1Dpu-xRVMKyMvJh7qvCxUcan2yyNdz6Xwgriko/s1600/letters2.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320px" i$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguScYNOl9lOqJgkBjAIhb-Cand2Llb7Inud8x4y_JvZdq9ne2y7cp75F50Eh_nLY3ILIPTFguOCVndK4-BTPEBv43Yls0Xp3iGkSCxE1Dpu-xRVMKyMvJh7qvCxUcan2yyNdz6Xwgriko/s320/letters2.gif" width="223px" /></a></div><br />
அவசரமான உலகத்தில் வாழ்வதால் எத்தனை அரிய விடயங்களை இழந்து கொண்டிருக்கின்றோம். எங்கு பார்த்தாலும் அவசரம். ஆலயத்திற்கு சென்றாலென்ன மருத்துவமனைக்கு சென்றாலென்ன விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு சென்றாலென்ன எதிலும் எப்போதும் அவசரம்தான் பொங்கி வழிகின்றது. சிறியவர்கள் பெரியவர்கள் என்ற பேதமின்றி எல்லோரும் அவசரமென்ற பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றோம். <br />
<br />
ருசித்து சுவைக்க வேண்டிய வாழ்க்கையை நஞ்சை விழுங்குவது போன்று மென்றி விழுங்கிக் கொண்டிருக்கின்றோம். ஏன் இந்த மாற்றம் எதை அடைவதற்காக இத்தனை இழப்புகள். இழப்புக்களென்று தெரிந்தும் அவற்றை ஏற்றுக்கொண்டு சலனமற்றிருக்கின்றோம்<br />
<br />
பக்கம் பக்கமாக கடிதம் எழுதிய காலம் மாறி வாழ்த்து அட்டைகளை கைபடத் திறந்து குதூகலித்த காலம் மாறி குறும் செய்திகளும் தொலைபேசிக் குறிப்புகளுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. பொறுமையாக கடிதமெழுதி அழகான கையெழுத்தில் முகவரி எழுதி முத்திரை ஒட்டி பக்குவமாக அஞ்சல் செய்யும் நிலைமை இன்று காணாமலே போய்விட்டது. <br />
<br />
காகிதத்தில் எழுதிய வார்த்தைகளை அனுபவிக்கின்ற சுகம் இப்போது பாவனையில் இருக்கின்ற மின் அஞ்சல் மூலமாக கிடைக்கின்றதா? முன்பெல்லாம் பிறந்தநாள் திருமணநாள் பொங்கல் தீபாவளி போன்ற தினங்களுக்கு நண்பர்கள் உறவினர்களிடமிருந்து வாழ்த்து அட்டைகள் வீடுவந்து சேரும். அவற்றிற்கு நாம் கொடுத்த முக்கியத்துவம் மதிப்பு என்பனவற்றை வார்த்தைகளால் சொல்லி முடியுமா? <br />
<br />
இன்று நாம் எதற்கும் முக்கியத்துவம் தருவதில்லை. நேசம் பாசம் நட்பு காதல் என்று எதைப்பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. எல்லாமே நிலையற்றது என்ற உணர்வு சிந்தனையில் பதிந்துவிட்டதோ என்னவோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில்தான் வாழ்க்கை ஓடுகின்றது. <br />
<br />
உறவுகளோடு தொடர்பு கொள்வதற்குக்கூட காரணத்தைத் தேடுகின்றோம். தேவை ஏற்படாத பட்சத்தில் யாரும் யாரையும் பார்க்கவோ பேசவோ விரும்புவதில்லை. இந்த பக்கம் வந்தேன் உங்களையும் ஒருக்கால் எட்டிப் பார்த்துவிட்டுப் போவோம் என்று உரிமையோடு கூறிக்கொண்டு யாரும் யார் வீட்டிற்கும் செல்வது கிடையாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்ற சிந்தனையில் ஒருவரையொருவர் நினைத்துக் கூடப் பார்க்காது அவரவர் தத்தமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இயந்திரத்தனமாக நாம் மாறிவிட்டோம். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl8kyTr4MlpDyUuzUMoe7uRoaKxY_CWUdW93GYt4bvyL09mAUWi4HiSe-c2QHE6aZi4BcAPMDehy3HHWyseDmZqOW8gXncxi-6krNV3isshQ1kyfiijxpfTzbGvVe7DG6zl3tECSKfcQU/s1600/1272237672.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="210px" i$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl8kyTr4MlpDyUuzUMoe7uRoaKxY_CWUdW93GYt4bvyL09mAUWi4HiSe-c2QHE6aZi4BcAPMDehy3HHWyseDmZqOW8gXncxi-6krNV3isshQ1kyfiijxpfTzbGvVe7DG6zl3tECSKfcQU/s320/1272237672.jpg" width="320px" /></a></div>எத்தனை வகையான கடிதங்கள். தாய் தனது பிள்ளைகளுக்கு எழுதும் கடிதம் பாசத்தை வெளிப்படுத்துவதாகவும் தந்தை தனது மகனுக்கு அறிவுரைகளை எழுதிக் குவிப்பதாகவும் நண்பர்கள் அந்தரங்க விடயங்களை உரிமையோடு பரிமாறிக்கொள்வது போன்றும் காதலர்கள் கடிதங்கள் மூலமாக தமது இச்சைகளை, வாக்குறுதிகளை, பொய்களை, பெருமைகளை பரிமாறிக்கொள்வதாகவும் எத்தனை எத்தனை வகையான கடிதங்கள். <br />
<br />
அன்புள்ள என்று ஆரம்பித்து நீ நலமா நான் நலம் என்று தொடர்ந்து இலக்கண இலக்கியத்துடன் கடிதங்கள் எழுதப்படவேண்டும் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுவயதில் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இப்போது நான் காகிதத்தில் கடிதம் எழுதுவதேயில்லை. கணணியில் நேரடியாகவே தமிழில் எதை எழுதவேண்டுமோ அதை எழுதிவிடுவேன். பேனாவினால் காகிதத்தில் எழுதாமல்விட்டு எனது எழுத்துக்கள்கூட ஒழுங்காக வருவதில்லை. எத்தனை வருடங்களாகி விட்டன அன்பான ஓர் கடிதம் எழுதி. <br />
<br />
புலம்பெயர்ந்தபோது கொடூரமான கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அலுமாரியின் மேல்தட்டிலும் கட்டிலுக்கு அடியிலும் ஒளித்து வைத்த சில கடிதங்களையும் வாழ்த்து அட்டைகளையும் புகைப்படங்களையும் கவனமாக என்னோடு எடுத்துக்கொண்டு வந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றைத் திரும்பவும் எடுத்து வாசிக்கின்றபோது மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அவற்றை வாசிப்பதன் மூலம் அன்பைத் தெரிவித்தவர்களின் வாசத்தை மீண்டும் சுவாசிக்கக் கூடியதாக இருந்தது. இன்று அந்தக் கடிதங்களும் என்னோடு இல்லை நிகழ்கால இறுக்கங்களை தளர்த்துவதற்கு அந்த நினைவுகளும் என்னோடு இல்லை. காலம் எப்படி மாறிப்போய்விட்டது.<br />
<br />
சிறுவயதில் எனது மாமாமார் என்னை அடிக்கின்றபோது அவர்களைத் திட்டித்தீர்க்கும் வகையில் கடிதம் கடிதமாக எழுதுவேன். அதன்பின்பு அவற்றை கட்டில் மெத்தைக்கு கீழ் வைத்துவிடுவேன். பின்பு நீண்ட நாட்களுக்குப்பின் அவற்றை மீண்டும் எடுத்து வாசித்து சிரித்துக் கொள்வேன். <br />
<br />
நீங்கள் முன்பு எழுதிய கடிதங்கள் உங்கள் கைவசம் இருந்தால் அவற்றை மீண்டும் தூசிதட்டி வாசித்துப்பாருங்கள். பல சுவாரசியமான விடயங்களை அவை உங்களோடு பேசும். நீங்கள் அனுபவித்த அழகான நாட்களை மீண்டும் உங்கள் மனதில் மலரச் செய்யும். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfrYPdQXR1tTsy2NYGbBXDZ7Rol1dy6RCli54VcmnRqxHWJjjzIooxzMaeBMQO539AnrZ-HdyQJvWzLFUJZa734TJK2sL5N7-1yxkQ2ylDTJjP6dWxAiMF1xEdyw2o4nwWAqqb7SVXENg/s1600/imagesCA33VLYU.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" i$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfrYPdQXR1tTsy2NYGbBXDZ7Rol1dy6RCli54VcmnRqxHWJjjzIooxzMaeBMQO539AnrZ-HdyQJvWzLFUJZa734TJK2sL5N7-1yxkQ2ylDTJjP6dWxAiMF1xEdyw2o4nwWAqqb7SVXENg/s1600/imagesCA33VLYU.jpg" /></a></div>தொடர்பாடல்கள் மிகவும் துரிதமாகவும் பல்வேறு வடிவங்களிலும் எளிதாகவும் கிடைக்கின்றபோது கடிதம் எழுதுகின்ற தேவை குறைந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் கடிதம் எழுதுவது அறவே நின்றுவிட்டது என்றே கூறலாம். <br />
<br />
இன்று என்ன சமையல் அம்மா என்று ஈழத்தில் இருக்கும் எனது தயாருடன் நினைத்த மாத்திரத்தில் பேசக்கூடியதாக இருக்கின்றபோது கடிதம் ஏன் எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. <br />
<br />
பொதுவாக வெளிநாட்டில் இருந்து மகளிடம் இருந்து வருகின்ற கடிதம் ஒரு தாய்க்கு தனது மகளாகவே தோன்றும். அந்த கடிதங்களை வருடுகின்றபோது வாசிக்கின்றபோது தனது மகளின் தலையை கோருவது போன்ற உணர்வை ஓர் தாய்க்கு கொடுக்கும். <br />
<br />
கடந்த சில வருடங்களுக்கு முன்புகூட எனது தாயார் எனக்கு தனது கைபட கடிதம் எழுதுவார். நானும் ஆசையோடு அவருக்கு பதில் எழுதுவேன். இப்போது வீட்டில் தொலைபேசி இணைப்பு வந்துவிட்ட காரணத்தால் கடிதப் பரிமாற்றம் நின்றுபோய்விட்டது. இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அழைப்பெடுத்து பேசிக்கொள்வேன். நேரடியாக சில விடயத்தை சொல்லமுடியாமல் இருக்கும். அவை என்றுமே சொல்லப்படாதவையாகவே இருந்து அழிந்துவிடும். <br />
<br />
எனக்கு அழுகின்ற மனிதர்களைப் பிடிக்காது. அம்மாவோ இரு பிள்ளைகளும் தன்னோடு இல்லை என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றா, அவருக்கு தனது மனக்குறைகளையெல்லாம் சொல்லி ஆறவேண்டும் போல் தோன்றும் ஆனாலும் கொஞ்ச நேரம் பேசப்போகும் தொலைபேசியில் அவற்றை சொல்லிவிடமுடியாது என்று நினைப்பதாலோ என்னவோ எல்லாவற்றையும் மனசுக்குள்ளேயே வைத்து மேலோட்டமாக பேசுவா. அம்மா சும்மா இருக்கிற நேரத்தில் எனக்கு கடிதம் எழுதுங்கோ என்று கேட்டாலும் எழுதமாட்டா, ஏன் என்று புரியவில்லை. <br />
<br />
இப்படியாக மனிதர்கள் தேக்கி வைத்திருக்கும் அன்பும் பாசமும் பகிரப்படாமலே தொலைந்து போய்விடப்போகின்றதே என்ற ஏக்கம் கால ஓட்டத்தோடு அதிகரித்துக் கொண்டே போகின்றது. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
கடிதம் எழுதுவதற்கு ஒரு தனியான மனநிலை தேவை என்று சிலர் சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரையில் சில மணிநேரங்கள் எனக்கு கிடைக்குமென்றால் அழகான ஒரு கடிதம் என்னால் எழுதமுடியும். அந்த நேரத்தில் உள்ள மனநிலையைப் பொறுத்து அக் கடிதத்தின் வடிவம் உருவம் எடுக்கும். அநேகமாக புலம்பெயர்ந்தபின்பு கடிதம் எழுதுகின்றபோது ஏக்கம்தான் அதிகமாக பிரதிபலிக்கும்.<br />
<br />
காதல் கடிதங்களை வாசித்து அனுபவித்தவர்கள் அந்த கடிதங்கள் மூலம் பரிமாறிக்கொண்ட ஸ்பரிச உணர்வுகளை வார்தைகளால் வகைப்படுத்திவிடமுடியாது. நான் அதிகமாக எழுதியது காதல் கடிதங்களே, அழகான காதல் கடிதங்கள், நேரம் போவது தெரியாமலே எழுதிக் கொண்டிருப்பேன். அன்பும் பாசமும் கலந்த எனது கடிதங்களை வாசித்தால் எனக்கே என்மீது காதல் அதிகமாகும். வெறும் புகழ்ச்சிக்காகவோ உண்மைக்கு புறம்பாகவோ எதையும் எழுதுவதில்லை. அந்த நேரத்தில் நான் எதை அனுபவிக்கின்றேனோ அதை எழுதுவேன். எழுதிய காலத்தில் அவை உண்மையானவை. பின்பு கால ஓட்டத்தில் நான் நினைத்தவை கணித்தவை பொய்யாகியதும் உண்டு. ஆனால் அதற்காக நான் வருத்தப்பட்டதில்லை. சந்தர்ப்பங்களை சந்திக்கும்வரை யாரையும் முழுமையாக புரிந்து கொள்ளமுடியாதல்லவா. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCAfB_d9T0VU-TlHLMWjBJHU0DMo_OPdUBsC2ouR2E1P7ScKYRmQBPcA4bOmDninC9gXeOeNSqMY4AMHj18MDO4uzIqvXkjx0tccNDLb7SrywLI9UDMh3kc2vD569451KjYeMShFG2SZ0/s1600/postman.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" i$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCAfB_d9T0VU-TlHLMWjBJHU0DMo_OPdUBsC2ouR2E1P7ScKYRmQBPcA4bOmDninC9gXeOeNSqMY4AMHj18MDO4uzIqvXkjx0tccNDLb7SrywLI9UDMh3kc2vD569451KjYeMShFG2SZ0/s1600/postman.jpg" /></a></div>எனது தந்தையார் பாடசாலை அதிபராக இருந்தார் அதனால் அவருக்கு தவறாமல் ஒவ்வொரு நாளும் கடிதங்கள் வந்த வண்ணமே இருக்கும். வீட்டில் எனக்கு எந்த வேலையும் ஒதுக்கப்படவுமில்லை யாரும் என்னை வேலை செய்யும்படி கேட்பதுமில்லை ஆனால் நானாக தேர்ந்தெடுத்த வேலை தபால்காரன் மணியடித்ததும் ஓடிச்சென்று கடிதங்களை பெற்றுக்கொள்வது. மணிச்சத்தம் கேட்டால் யாரும் வீட்டு வாசலுக்கு செல்லமாட்டார்கள். நான் வாசலுக்கு சென்று கடிதம் வாங்கும் வரை தபால்காரனும் மணியடித்துக் கொண்டேயிருப்பார். Register Post ல் வரும் கடிதங்களுக்கு கையெழுத்திட்டு அவற்றைப் பெற்றுக்கொள்வது என்பது பெரியவிடயமாகத் தோன்றும். <br />
<br />
பின்பு ஆளும் வளர்ந்து வயசும் வளர்ந்து ஆசைகளும் வளர எனக்காக வரும் கடிதங்களுக்காக காத்திருக்கின்ற நிலையேற்பட்டது. எனக்கு வரும் கடிதங்களை சுலபமாக மற்றவர்கள் கைகளுக்கு செல்லாது என்னால் காப்பாற்றிக் கொள்ளமுடிந்தது. வருகின்ற கடிதங்களை பலமுறை திரும்பத் திரும்ப வாசிப்பது சில நாட்கள் கடிதம் வராமல் போனால் ஏமாற்றத்தை தாங்கமுடியாமல் தவிப்பது மறுநாள் காலை தபால்காரன் மணியடிக்கும் வரை ஏதோவொன்றை இழந்ததுபோல் இருப்பது இவற்றை இப்போது நினைக்கையில் எல்லாமே கடந்தகாலத்தின் அழகிய சுவடுகளாகவே தோன்றுகின்றன. <br />
<br />
அப்பாவின் மேசையில் கடிதங்களை வைப்பதெற்கென்று அழகான ஒரு சிறிய பெட்டி இருக்கும். அவற்றுக்குள் சில கடிதங்கள் திறக்கப்படாமலே இருக்கும். அப்பாவிற்கு வரும் கடிதங்கள் அநேகமாக வேலை சம்பந்தமான கடிதங்கள் என்று எல்லோருக்கும் தெரியும் அதனால் அதை திறந்து அதற்குள் என்ன இருக்கின்றது என்று பார்க்கவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. சில கடிதங்களை பார்த்தவுடன் அப்பாவுக்கும் தெரிந்துவிடும் எங்கிருந்து வருகின்றதென்று அவரும் அவற்றை வாசிப்பதற்கு முயற்சி எடுக்கமாட்டார். அவை சில வேளைகளில் நிறம்; வெளிறி எழுத்து மங்கி காய்ந்து கொண்டிருக்கும் அதை நினைக்கும் போது இப்போது எனது தாபால் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் மின்சாரம் தண்ணீர் தொலைபேசி மற்றும் இதர பில்லுகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றது.<br />
<br />
இப்போதெல்லாம் நான் கடிதங்களை எதிர்பார்ப்பதேயில்லை. வருகின்ற கடிதங்கள் கூட கட்டணங்களை ஞாபகப்படுத்துவதாகவும் தமது பொருட்களை விற்பதற்கான வியாபார விளம்பரங்களாகவும்தான் இருக்கின்றன. <br />
<br />
கடிதம் எழுதும் போது அழுது கொண்டு எழுதுவதும் பிடிக்கும். அப்படியாக எழுதி முடித்ததும் பெரிய ஆறுதலாகவிருக்கும். திரும்பவும் அந்த கடிதத்தை வாசித்தேன் என்றால் அனுப்ப மனம் வராது கிழித்துவிடுவேன். சில வேளைகளில் வாசித்துப் பார்க்காமல் அப்படியே அனுப்பிவிட்டு பின்பு கவலைப்படுவேன். இப்படியாக எழுதிவிட்டேனே இதன் விளைவுகள் எப்படி இருக்கப்போகின்றனவோ என்று வேதனைப்;படுவேன்.<br />
<br />
சொல்வதற்கு ஏகப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. ஒன்று மட்டும் உண்மை கடிதம் தரும் அந்தரங்க உணர்வை நாம் இன்று இழந்துவிட்டோம். இப்போதெல்லாம் தொலைபேசி மூலம் உறவுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு எங்கள் வேலையில் கவனத்தை செலுத்துகின்றோம். பிரிவுத் துயரோ அதன் மூலம் ஏற்படுகின்ற ஏக்கமோ இன்று இல்லவேயில்லை. இ மெயிலின் மூலம் உடனுக்குடன் தொடர்பு கொள்கின்றோம். சிறிது தாமதம் ஏற்பட்டால் உடனே தொலைபேசியில் அழைப்பெடுத்து விசாரித்துக் கொள்கின்றோம். அதுவுமில்லை என்றால் உடனே குறுஞ்செய்தி பேஸ்புக் ருவிட்டர் என்று எத்தனையோ. <br />
<br />
இன்றெல்லாம் யாரும் யாருக்காகவும் காத்திருக்கவே தேவையில்லை. காத்திருப்பே இல்லாதபோது எதற்காக கவலைப்படவேண்டும். ஒருவருக்காக கவலைப்படுவது அவரைக் காணாமல் ஏக்கம் கொள்வது பிரிவையெண்ணி கண்ணீர் விடுவது எல்லாமே ஒரு உணர்வு பூர்வமான செய்கைகள் அல்லவா? அவற்றை மீண்டும் அனுபவிக்கவேண்டும் என்ற ஏக்கம் இப்போது மிஞ்சியிருப்பதும் உண்மையல்லவா? <br />
<br />
எமக்கு விருப்பானவர்களை பிரிந்து தனியாக இருக்கும் போதுதானே அவர்களைப்பற்றி அதிகமாக நினைத்து அவர்களது அருமையை உணர்ந்து கொள்ளமுடியும். ஆனால் அந்த பிரிவுக்கான சந்தர்ப்பமே இப்போது கிடைப்பதில்லையே. 5 நிமிடத்திற்கு ஒரு தடவை தொலைபேசியில் அழைப்பெடுத்து என்ன செய்கிறாய் எங்கேயிருக்கிறாய் என்று கேட்கின்றபோது இது என்ன பொலீஸ் வேலையா எதற்காக இப்படிக் கண்காணிக்கின்றோம் என்று எரிச்சல்படத் தோன்றுகின்றது. <br />
<br />
முன்பெல்லாம் நெருங்கிய உறவினர்கள் ஊர்விட்டு ஊர் போகும் போது அவரோடு ரயில் நிலையங்களுக்கோ பஸ்தரிப்பு இடங்களுக்கோ சென்று அவரை வழியனுப்பி கண்ணீரோடு திரும்பும் எத்தனையோ நிகழ்வுகள் ஏற்பட்டதுண்டு. இப்போது காரிலேயே கொண்டு சென்று விமான நிலையத்தில் இறக்கிவிட்டு காருக்குள் இருந்தபடியே Have a Safe Trip என்ற வாழ்த்திவிட்டு அப்படியே U Turn எடுத்து வீடு நோக்கி சென்று கொண்டிருப்பேன். சில நிமிடங்களின்பின் அழைப்பெடுத்து எல்லாம் சரியா என்று கேள்விவேறு. தொழில் நுட்பத்துடன் சேர்ந்து நாமும் நன்றாக வளர்ந்துவிட்டோம். நெருக்கமும் உறவும் கசப்பும் வெறுப்பும் விரோதமும் பகைமையும் எல்லாமும் குறைவாகவும் நிறைவாகவும் வளர்ந்துவிட்டன. <br />
<br />
இப்போதெல்லாம் மனிதர்கள் தமது சகமனிதர்களின் உறவுகளை நேசத்தை பாசத்தை புறக்கணிப்பதால் அவர்கள் வெறுமைக்குள் வாழ்வதை காணக்கூடியதாகவிருக்கின்றது. அதுமட்டுமல்ல இன்றைய காலத்தில் பிரிவு ஏக்கம் போன்ற உணர்வுகளை அனுபவிக்காத காரணத்தாலோ என்னவோ தொடர்ந்து சேர்ந்திருப்பது போன்ற உணர்வும் தொடர்ந்து சந்தித்துக் கொள்வது போன்ற உணர்வும் அதிகரிப்பதினால் மிக விரைவில் உறவுகளிற்கிடையில் சலிப்புத் தட்டுகின்ற தன்மையும் ஏற்படுகின்றது. <br />
<br />
முன்பு என்னோடு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நிறைய கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். அதுமட்டுமல்ல பேனா நண்பர்களும் இருந்தார்கள். எனது கையெழுத்தும் நன்றாக இருந்ததாலோ என்னவோ பக்கத்துவீட்டுத் தாத்தா தனக்கு கடிதம் எழுதித்தரும்படி என்னை அடிக்கடி கூப்பிடுவார். கடிதத்தின் மீது முத்திரை ஒட்டும் போது முத்திரைக்கு எச்சில் போட்டு ஒட்டக்கூடாது என்று தாத்தா கூறுவார். முத்திரைக்கு பின்னால் தடவியிருக்கும் பிசின் போன்ற பசை உடல்நலத்திற்கு கெடுதல் விளைவிக்குமென்றும் தண்ணீரில் தடவி ஒட்டும்படியும் கூறுவார். அதை நான் செவிமடுத்ததாக எனக்கு ஞாபகமில்லை. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEio5ompgNOVjBcBjCrrpNk_rwCFJuJYScIfbImbPcUaLyFWAu_6inX3Z2MVit_3B5-4QbjO_plkEbRPP5-CufzkiPULIjdftOBO_uEOX12VUorktWJWjaPjZSu_TT4mHU9BEcdMQnTZEWI/s1600/checking_mail.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="206px" i$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEio5ompgNOVjBcBjCrrpNk_rwCFJuJYScIfbImbPcUaLyFWAu_6inX3Z2MVit_3B5-4QbjO_plkEbRPP5-CufzkiPULIjdftOBO_uEOX12VUorktWJWjaPjZSu_TT4mHU9BEcdMQnTZEWI/s320/checking_mail.gif" width="320px" /></a></div>இன்று எல்லாம் கடிதங்கள் என்பது வெறும் விண்ணப்பங்களாகவும் வேலை சார்ந்தவையாகவும் தேவை கருதியும் மாறிவிட்டன. கடிதம் எழுதும் கலையானது எமது தலைமுறைபோடு இல்லாதொழிந்து அடுத்த தலைமுறைக்கு வெறும் காட்சிப்பொருளாக மாறிவிடும் என்ற நிலையை எண்ணும்போது வருத்தமாக இருக்கின்றது<br />
<br />
சில கடிதங்களை ஒருதடவை படித்து செய்தியை அறிந்துவிட்டு பின்பு நேரம் கிடைக்கும் போது ஆறுதலாக இருந்து மீண்டும் வாசித்து இரைமீட்பது என்பது மனநிறைவையும் அளவில்லா ஆனந்தத்தையும் அள்ளித்தரும். வரிவரியாக அழகான கையெழுத்துக்களில் உள்ளத்தில் உள்ளதையெல்லாம் வார்த்தைகளாக கொட்டி எழுதிய காலங்கள் கரையேறிப்போய்விட்டன. இப்போது உயிரற்ற நான்கு வார்த்தைகளை மின் அஞ்சலில் எழுதிவிட்டு Take Care Bye என்று முடித்துவிடுகின்றோம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
முகம் தெரிய விரும்பாத புரிந்துணர்வுடைய பரந்த சிந்தனையுடைய ஒரு நண்பருடன் என் மனதில் இருக்கின்ற எல்லாவற்றையும் கடிதமூலம் எழுதவேண்டும் அவரது பதில் எனக்குள் இருக்கின்ற ஏக்கங்களை ஏதாவது ஒரு வகையில் நிரப்புகின்றதா என்று பார்க்கவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் சரியாக இன்னும் அமையவில்லை.<br />
முன்பெல்லாம் எனது தந்தையார் வீட்டிற்குள் நுழையும்போதே எனக்கு ஏதாவது கடிதம் வந்ததா என்று கேட்டவண்ணமே வருவார். இப்போது எந்த எதிர்பார்ப்புமே இருப்பதில்லை. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGxWe00nTdQiVU3WwgE3Zr36HR_4oGZ6npHAr4csWnjGPXNOEWxRjxBildxQiySmPw1IRVNxO1G_GbaHhY7VOX2sWZTbKHGnc0lAMfe6ww1XXZSaVGKGp8szLs1i8KkK6-SdOGSUA6dBk/s1600/untitled.bmp" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="254px" i$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGxWe00nTdQiVU3WwgE3Zr36HR_4oGZ6npHAr4csWnjGPXNOEWxRjxBildxQiySmPw1IRVNxO1G_GbaHhY7VOX2sWZTbKHGnc0lAMfe6ww1XXZSaVGKGp8szLs1i8KkK6-SdOGSUA6dBk/s320/untitled.bmp" width="320px" /></a></div><br />
நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது. எனக்கும் ஓர் கடிதம் வரவேண்டும் அவற்றை இரண்டு மூன்று தடவை வாசித்து மகிழவேண்டும். நானும் எனது அழகிய கையெழுத்தில் அந்தக் கடிதத்திற்கு பதில் அனுப்பவேண்டும் என்பது எனது சின்ன சின்ன ஆசைகளில் ஒன்று. ஏன் இந்த விபரீத ஆசை என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கின்றது. </div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-85528366211556951922011-03-09T22:48:00.001+11:002011-03-09T22:52:23.024+11:00தேடல் என்பது............<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இந்த வாரம் தேடல் என்பது எனது எழுத்தின் கருவாக அமைகின்றது. அதை நீங்களும் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் புன்னகையில் இணைத்துள்ளேன். வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடாது உங்களது கருத்துக்களையும் கூறிவிட்டுச் செல்லவேண்டும். <br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEf0-d0LRm9AIt_kJjQhcHrCwC7vlOOL8tqXt-Hz65j7zJwkOuzGG-EUbgXgDFQ2727zgDiUCAjX4_2nYBt7ymEm0abhPV_rtbDckaPPn8-nWz5rqKgk6DvXNaXYJa7faJWFzVvGGG_V0/s1600/imagesCAW7GEJJ.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" q6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEf0-d0LRm9AIt_kJjQhcHrCwC7vlOOL8tqXt-Hz65j7zJwkOuzGG-EUbgXgDFQ2727zgDiUCAjX4_2nYBt7ymEm0abhPV_rtbDckaPPn8-nWz5rqKgk6DvXNaXYJa7faJWFzVvGGG_V0/s320/imagesCAW7GEJJ.jpg" width="315" /></a><br />
இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஏதோவொரு வகையில் தேடலை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன. தேடலற்ற வாழ்க்கை என்பது வெறுமையானது. போதும் என்ற திருப்தியில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை விரைவில் சலித்துவிடும். அப்படிப்பட்ட சலிப்புநிலை வராது காக்க வேண்டியது வாழவிரும்பும் ஒவ்வொருவரினதும் கடமையாகும். <br />
<br />
சிந்திக்கவும் செயல்படவும் தெரிந்தவர்கள்கூட தம்மைச் சுற்றியிருக்கும் எல்லைகளைத் தாண்டுவதற்கு முயற்சிப்பதில்லை. இருப்பதில் நிறைவைக் காண்கின்றனர். அது ஒன்றும் தவறில்லை ஆனால் இன்னும் இன்னும் என்ற ஆர்வமுள்ளவர்கள் அதிகமாக சாதிக்கமுடியும். வாழ்க்கையை சுவாரசியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க முடியும். <br />
<br />
புதியவிடயங்களில் அக்கறை காட்டாமல் முயற்சி எடுக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் மனதில் தோன்றுகின்ற பயம். இருப்பதை இழந்து விடுவோமென்ற பயம், கசப்பான அனுபவங்களை எதிர்நோக்கப் பயம், சுயத்தின்மீது பயம், சமூகத்தின்மீது பயம் இப்படி பலவிதமான பயங்களினால் பீடிக்கப்படுவதனால் போதுமென்ற எண்ணத்தில் மனிதன் இருந்துவிட்டுப் போகின்றான். <br />
<br />
மனதில் குடிகொண்ட அச்சம் காரணமாக வாழ்க்கையை தொலைக்காமல் வாழ்வதற்கு தொடர்ச்சியான தேடல் மிக அவசியம். முன்னோர்களது வரலாறும் அறிஞர்களது கதைகளும் தேடல் மூலம் அவர்களடைந்த வளர்ச்சி, புகழ், பெருமைகள் பற்றி கூறும். வலியின்றி வாழ்க்கையில்லை. தேடலின்றி இயக்கமில்லை. <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgenI4x-ivqAi-oV3_j2JCwo1yzeuXHy3Qi7IKFF6YCJ-6FJDn9aRGlXNQf-hw0YYLSjvWYGOYWtI6QGbNEymJtBXjn1SbqTySw9WOqTbaFJfYgb5p8y4wdFQz-ahnAWXE9MQzih_5DoQs/s1600/imagesCAUZKTBK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="201" q6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgenI4x-ivqAi-oV3_j2JCwo1yzeuXHy3Qi7IKFF6YCJ-6FJDn9aRGlXNQf-hw0YYLSjvWYGOYWtI6QGbNEymJtBXjn1SbqTySw9WOqTbaFJfYgb5p8y4wdFQz-ahnAWXE9MQzih_5DoQs/s320/imagesCAUZKTBK.jpg" width="320" /></a></div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">தேடலின்றி இருந்தாலெப்படி?</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">தட்டியோ முட்டியோ</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">வாசல்கதவைத் திறவுங்கள்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">போதுமென்ற மனமே</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">பொன் செய்யுமென்று</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">சும்மா இருக்காதீர்கள்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">சுற்றியுள்ள வட்டங்கள்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">அத்தனையும் பொய்கள்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">அச்சத்தின் வட்டங்கள்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">வாழ்க்கை வாழ்வதற்கே</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">சிகரத்தை நோக்கி </div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">வானத்தின் எல்லைவரை</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">துணிவாக நகருங்கள்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">வாழ்வென்பது உயிர்வாழ்தலன்று</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">தொடர்ச்சியான அறிதல்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">தேடலுடன் இணையுங்கள்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">துணையாக வளைந்து கொடுங்கள்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">ஒவ்வொரு தேடலின் நிறைவும்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">புதியதோர் தேடலின் ஐனனம்</div><br />
<br />
ஒருவரைப் பார்த்து இவர் அவரைப்போல் இருக்கின்றாரே என்று பலர் கூறுவதை பல தடவைகள் கேட்டிருப்பீர்கள். வேண்டியவர்களை, விட்டுப் பிரிந்தவர்களை, கிடைக்காமல் போனவர்களை, தவறவிட்டவர்களை ஏதோவொரு தளத்தில் யார்யாரிடமோ தேடுகின்றோம். <br />
<br />
எனது தந்தையாரின் நிறைந்த அன்பில் நனைந்த பெண்ணாக வளர்ந்ததனால் தந்தையின் அன்பை நெருங்கிப் பழகுபவர்களிடம் தேடுவேன். ஒருவர் இன்னொருவராக முடியாது என்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது போனாலும் தேடல் தொடர்கிறது.<br />
<br />
அதேபோல் எம்மிடமும் மற்றவர்கள் தமது நேசத்திற்குரியவர்களை தேடலாம். அவர்கள் தேடும் யாராகவோ அவர்கள் கனவில் நிழலாடும் நினைவுகளாகவோ நாம் இருக்கக்கூடும். அவர்கள் விரும்பும் யாரோவாக இருப்பதில்கூட ஓர் சுகம் கிடைக்கும். இன்னுமொருவரது தேடல் நிஐமாகின்றதே என்ற மனநிறைவு கிடைக்கும். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt8lpsPr2HofJ3x9lAAHR9tAxPS7DtN71Feg64ALldWLMPoKsoU66K9XIvES1FKsVUGOmF5X4np4ak0TM8oXfQ2AmD-nkW_yztnccIZfoV6NHhk4jaUgCxBvuNI75hlm5ttnleTBi9gpw/s1600/soulmates.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" q6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt8lpsPr2HofJ3x9lAAHR9tAxPS7DtN71Feg64ALldWLMPoKsoU66K9XIvES1FKsVUGOmF5X4np4ak0TM8oXfQ2AmD-nkW_yztnccIZfoV6NHhk4jaUgCxBvuNI75hlm5ttnleTBi9gpw/s320/soulmates.jpg" width="320" /></a></div>இயற்கை எப்போதும் வெற்றிடங்களை விடுவதில்லை. தேடல் என்றும் வீண்போகாது. நம்பிக்கையுடன் தேடினால் தேடியது கிடைக்கும். <br />
<br />
தேடலுடன் வேகமும் சுறுசுறுப்பும் தானாகவே அதிகரிக்கும். தேடுவதை அடையும்வரை உடலும் உயிரும் சிந்தாமல் சிதறாமல் இயங்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தி என்றும் இளமையாக மனிதனை வாழவைப்பது தேடல்தான். <br />
<br />
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கும் ரசனையுடையவர்களுக்கும் சினனச் சின்ன விடயங்களில்கூட சுகமான அனுபவங்கள் கிட்டும். ஏதோவொன்று அவர்களது தேடலின் புள்ளியோடு இணைந்து கொள்ளும். அந்த அனுபவத்தை உணர்வதற்கு மனதில் ஆசையிருக்கவேண்டும் எதிர்பார்ப்பிருக்கவேண்டும். எந்தவிதமான எதிர்பார்ப்புகளோ ஆசைகளோ இன்றி ஏதோ விதிப்படி நடக்கின்றது, நடக்கட்டும் என்று இருப்பவர்கள் புத்துணர்ச்சியின்றி உற்சாகமின்றி எதைச் செய்தாலும் வெறும் கடமையாகவே செய்வார்கள். அதுமட்டுமன்றி அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியற்றவர்களாக்கி விடுவார்கள். <br />
<br />
பொறுமை அவசியம் என்பது பெரியோர்களது வாக்கு. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதும்கூட பெரியோரது வாக்குத்தான். பொறுமையின் எல்லைகள் ஆளுக்கு ஆள் வேறுபடும். விரும்பிய ஒரு பொருளிற்காக பொறுமையாக காத்திருப்பதும் ஒருவித சுகம்தான். ஆனால் வெறும் காத்திருப்பென்பது மனிதமனத்தை அமைதி படுத்துமா என்பதும் கேள்வியாகத்தான் தெரிகிறது. காத்திருப்பதனால் ஏற்படுகின்ற அமைதியின்மைதான் தேடலை ஆரம்பித்து வைக்கின்றது என்றும் கூறலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6fv-3fzidP7ZR15WFB7Ceoe0xaozrTe4QmCRWG3d49zlQH3EIj_h_f6iDpRvpMYqgJqPRn0TkhEk49UZw5qCYlIoslu3RwqhaHfOMCa-2Qd-LArZnMtWT8Pj3EZZ2ZE1gKYW_qbKSk68/s1600/imagesCA9RVV9H.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="211" q6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6fv-3fzidP7ZR15WFB7Ceoe0xaozrTe4QmCRWG3d49zlQH3EIj_h_f6iDpRvpMYqgJqPRn0TkhEk49UZw5qCYlIoslu3RwqhaHfOMCa-2Qd-LArZnMtWT8Pj3EZZ2ZE1gKYW_qbKSk68/s320/imagesCA9RVV9H.jpg" width="320" /></a></div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">இந்த மண்ணில் பிறக்கும்போது எல்லோரும் நல்லவர்கள்தான். அவரவர் சூழ்நிலை, வளர்க்கப்பட்டவிதம் போன்றவை மனிதனை மாற்றுகின்றது மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகின்றது. நல்லவர் கெட்டவர் என்பதை சுலபமாக தீர்மானித்துக் கொள்ளமுடியாது. சந்தர்ப்பங்கள் உருவாகி அவற்றை சந்திக்கும்வரை எல்லோருமே நல்லவர்கள்தான். ஒருவன் நல்லவன் இல்லையென்று தெரிந்தவுடன் உறவைவிட்டு மீண்டும் உறவுக்கான தேடலை ஆரம்பிக்கின்றோம். இன்னுமோர் சந்தர்ப்பம் இன்னுமோர் தேடல் என்று தொடர் சங்கிலிபோன்று நீண்டு கொண்டேயிருக்கும். </div><br />
அதற்கேற்றாற்போல் மனித உறவுகள் உலகெங்கிலும் பரந்திருக்கின்றன. வாழ்க்கைப் பயணத்தை கடக்கின்றபோது புதிய புதிய உறவுகளை சந்திக்கும் வாய்ப்புக்களும் அதிகம். சேர்ந்து பழகும் காலங்களில் அன்பைக் கொடுத்து அவர்களிடமிருந்தும் கொஞ்ச அன்பைப் பெற்று பண்டமாற்று அடிப்படையில் பாசத்தை வளர்த்துக் கொள்கின்றோம். எந்த உறவுகளின் எந்த அன்பு எம்மோடு இறுதிவரை கூடவரும் என்பது யாருக்கும் தெரியாது. <br />
<br />
பலரது அறிமுகம் கிடைத்திருக்கலாம். பலரோடு ஆழமான உறவும் இருந்திருக்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த உறவு மிக முக்கியமானதாகக்கூட இருந்திருக்கும். ஆனால் காலமாற்றத்தோடு, இடமாற்றத்தோடு, நிலை மாற்றத்தோடு அந்த உறவுகள்கூட கடந்தகால அறிமுகமாக போய்விடுகின்றன. அந்தந்த நேரங்களில் நம்மைச் சுற்றியிருக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கையில் <br />
<br />
உறவுகளது கனமும் குறைகின்றது. 'இதுவும் கடந்து போகும்' 'காலம் காயத்தை ஆற்றும்' என்ற தத்துவங்களும் இதைத்தான் கூறுகின்றன. உலகில் நிலையானவையென்று எதுவுமே கிடையாது. மாற்றங்கள் மட்டுமே மாறாதவையாக இருக்கும். <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJRcsY8Dq8yz63dWNKLb2yhsHRQMTxfNoXI0m68GVOEzI537LPT1l_26tMQmwUIaPufMJV578IuPgqvFBbPRivgvgH5yyP1J_8Kw3cbkPWdWqPVjLfMw45id8xI7so8Z-mYMbpAstnSRc/s1600/loveyourself.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" q6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJRcsY8Dq8yz63dWNKLb2yhsHRQMTxfNoXI0m68GVOEzI537LPT1l_26tMQmwUIaPufMJV578IuPgqvFBbPRivgvgH5yyP1J_8Kw3cbkPWdWqPVjLfMw45id8xI7so8Z-mYMbpAstnSRc/s320/loveyourself.jpg" width="320" /></a></div><br />
<div style="text-align: center;">வலிகள் நிறைந்த வாழ்க்கையில்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">தேடல் என்பது தீராத தாகம்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">வாழ்ந்து பார்த்தேன் </div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">பழகப்பழக முற்றியது பாசம்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">நெருங்கிப் பார்த்தேன்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">வலி ஓய்ந்து பற்றியது இன்பம்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">தேட முயன்றேன்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">சிறகுகட்டிப் பறந்தது எண்ணம்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">எல்லையை நெருங்கிவிட்ட ஆனந்தம்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">கடவுளை கண்டுகொண்ட சுவாரசியம்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">காணும் மனிதரில் கண்டேன் கடவுளை</div><br />
தேடலில் காலத்தைக் கழித்து வாழ்க்கையை வாழாமலே முடித்துக்கொண்ட மனிதர்களும் இருக்கின்றனர். அவ்வகையான தேடல்களால் என்ன பயன்? தேடியதில் சிலவற்றையாவது அந்தந்த நேரங்களில் அனுபவிக்க வேண்டாமா? அனுபவத்தின் நிறைவில் அல்லது முடிவில்தானே இன்னுமோர் தேடல் உருவாகும்.<br />
<br />
அதேவேளை தேடல் என்பது மட்டுப்படுத்தப்பட்டு சமநிலையற்று ஒன்றை மட்டும் நோக்கிய தேடலாக இருப்பது சரியா என்ற கேள்வியுமுண்டு. அன்பைத்தேடி அறிவை கோட்டைவிடுவதும், பணத்தைத்தேடி பாசத்தை மறந்துவிடுவதும், புதுமையைத்தேடி பழமையை கைவிடுவதும் ஆரோக்கியமான தேடல்களாகாது. <br />
<br />
ஆறறிவுமுதல் ஐந்தறிவுவரை மண்ணில் எதையெதையோ தேடித்தேடி இறுதிவரை அலைகின்றனர். நாம் பிறந்ததன் நோக்கம் ஏனென்று தெரியாமலே எதைத்தேடவது என்ற விழிப்புணர்வின்றி எதையோதேடி எதையும் அடையாமல் என்றோ ஒரு நாளில் மடிந்து போகின்ற கூட்டமும் இருக்கின்றனர். <br />
<br />
தேடலின் மூலம்தான் மனிதன் துக்கம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, கோபம், பொறாமை, பாசம், நட்பு, காதல் போன்ற ஏகப்பட்ட புரிதல்களை அறிந்துகொள்கிறான் அவற்றை அனுபவிக்கின்றான்.<br />
<br />
யாருக்குமே கிடைக்காத; யாருமே கண்டுபிடிக்காத; யாருமே சிந்திக்காத ஒன்றை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்ற சிந்தனையும் ஆசையும் ஏற்படுகின்றபோதுதான் தேடல் மேலும் வலுப்பெறுகின்றது. மனிதமனம் எந்தவிடயத்திலும் சுலபமாக நிறைவை அடையாது. மீண்டும் மீண்டும் வேண்டுமென்ற ஏக்கமும்; துடிப்பும்; ஆர்வமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div>சிலர் அச்சம் காரணமாக பல வட்டங்களை தம்மைச்சுற்றி உருவாக்கி தம்மை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். சிலர் எல்லைகளை விரிவாக்கி உயர உயரச் சென்று கொண்டிருக்கின்றனர். இருப்பது போதும் இதில் நிம்மதியடைவோமென்று சோம்பலுடன் இருப்பவர்கள் வாழ்க்கையை வாழவில்லையென்றே அர்த்தப்படும். அவர்கள் ஏதோ இருந்துவிட்டுப் போகின்றார்கள். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjygtkfDAIezLeL2LVkk18E2lEbfuawEJgSHll6kJOrw2aF5OcbHhSj2e0u9g0AFSwasuO6CxNXmI4vTA2JThktgd7QCnyFMGJCemx84T6NoOF3GJnPDLRB47Jwd2Ef0QGoaQpM6gKj9bw/s1600/expectations1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" q6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjygtkfDAIezLeL2LVkk18E2lEbfuawEJgSHll6kJOrw2aF5OcbHhSj2e0u9g0AFSwasuO6CxNXmI4vTA2JThktgd7QCnyFMGJCemx84T6NoOF3GJnPDLRB47Jwd2Ef0QGoaQpM6gKj9bw/s320/expectations1.jpg" width="320" /></a></div><br />
<br />
<div style="text-align: center;">நினைப்பவை எல்லாம் நடப்பதுமில்லை</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">நடந்தவை எல்லாம் நினைத்தவையல்ல</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">இதுவரை நடந்தவை தீர்வுமல்ல</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">நாளை வருவது தொடர்ச்சியுமல்ல</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">ஒவ்வொன்றும் வேறுவேறு</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">உண்மை எதுவென்று நீ தேடு</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">மாற்றம் ஒன்றே மாறாதது</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">எத்தனை கோடி இன்பம் உண்டு</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">என்று சொன்னான் பாரதி அன்று</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">இருளகற்றி வெளிச்சத்தில் நின்று</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">இன்பம் தேடி நிறைவதே நன்று</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">தடைகள் தகர்ப்புகள்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">நிறைந்ததே வாழ்க்கை</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">தீர்வைக் கண்டுகொள்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">தடைகளைத் தாண்டு</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">முட்களின் நடுவே ரோஜா</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">என்ற பார்வை தவிர்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">ரோஜாக்கள் நடுவே</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">முள்ளொன்று காண்</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">நன்மையை பறைசாற்று</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">தீயவை தானாக மாறும்</div><div style="text-align: center;"><br />
</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjokwp7EO4WYReCsu3Q53PJTrFzt5kxUtmBPsiEq8xWE37mTRtkTvmFtEhV_kTcf48lsYESuLVDu1UkyBR4Aav8PUOOjsZjdHB7i9kLrun2yDpDo8nl7RyNvr7k2uemdvXQ4Qd8gzo5Gt0/s1600/2038075453_65b965fb97.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="238" q6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjokwp7EO4WYReCsu3Q53PJTrFzt5kxUtmBPsiEq8xWE37mTRtkTvmFtEhV_kTcf48lsYESuLVDu1UkyBR4Aav8PUOOjsZjdHB7i9kLrun2yDpDo8nl7RyNvr7k2uemdvXQ4Qd8gzo5Gt0/s320/2038075453_65b965fb97.jpg" width="320" /></a></div>கருவறையிலிருந்து தேடல் ஆரம்பிக்கின்றது. பிறந்தவுடன் குழந்தை தாயின்மடியை தேடுகிறது. தேடலின்போது அன்பு, பாசம் போன்றவை ஊட்டப்படுகின்றது. பின்பு இளமைக் காலங்களில் நட்பு, காதல் போன்ற உறவுகளை தேடுகின்றான். அவற்றை அனுபவித்து உலகை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றான். அப்போது வெற்றி தோல்விகளையும்; கோபம், பொறாமை, வலி போன்றவற்றையும் உணர்ந்து கொள்கிறான். பின் இருத்தலுக்காக பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக தனக்கென வேலையைத் தேடுகின்றான். இறுதியில் உலகத்தைப் புரிந்து கொண்டு மாற்றங்களை அனுசரித்து அமைதியைத்தேடி வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றான். இவை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.</div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-14853210182173317962011-03-02T22:34:00.000+11:002011-03-02T22:34:58.931+11:00கருத்துச் சுதந்திரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">கடந்த வாரம் கருத்துச் சுதந்திரம் எது வரை என்ற தலைப்பின் கீழ் உறவுகளுடன் இணைந்து மூன்று மணிநேரம் கலந்துரையாடினேன். அதன் சாராம்சத்தை உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன். <br />
<br />
<br />
கருத்துச் சுதந்திரம் என்பது ஒருவர் தனது எண்ணத்தில் தோன்றுகின்ற சிந்தனைகளை சொல்வதற்கு எடுத்துக் கொள்ளும் உரிமை என்று கூறியபோது இல்லை எண்ணத்தில் தோன்றும் அனைத்தையும் சொல்வது கருத்துச் சுதந்திரமாகாது, சொன்னதோடு மட்டும் நிற்காமல் சொல்வதை சரியென்று நியாயப்படுத்துகின்ற போக்கும் எம்மில் பலருக்குண்டு என்றவாறே ஆரம்பிக்கப்பட்டது எமது கலந்துரையாடல்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9wTpZRiZoiK4xZpeK92WKyyPwJlmaRBLy45_9VPYdwqinIgOY5JT68vv9XIYssKPTY-M40r3-vHejQEUuj7IvLRRwRIlYCI8fu6ekoUrbadg0m6nO9zcDSWzyKMtqttSojEjABd7mgAY/s1600/free+Speech.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" l6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9wTpZRiZoiK4xZpeK92WKyyPwJlmaRBLy45_9VPYdwqinIgOY5JT68vv9XIYssKPTY-M40r3-vHejQEUuj7IvLRRwRIlYCI8fu6ekoUrbadg0m6nO9zcDSWzyKMtqttSojEjABd7mgAY/s320/free+Speech.jpg" width="270" /></a></div><br />
எந்தவித இடையூறுகளும் அச்சமுமின்றி கருத்தை வெளியிடுவதற்கு கிடைக்கின்ற சுதந்திரமே கருத்துச் சுதந்திரம் ஆகும். கருத்தை வெளியிடுவதற்கு எத்தனையோ விதமான தளங்கள் இருக்கின்றன. பேச்சு எழுத்து கலை போன்ற சில வடிவங்களும் அவற்றில் அடங்கும். <br />
<br />
தகவல்கள் செய்திவடிவில் கூறப்படுகின்ற போது அவற்றிற்குள் ஒளிந்திருக்கும் பல விடயங்களை அறிந்து கொள்ள கருத்துப் பரிமாற்றம் மிகவும் அவசியம். பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அலசல் ஓர் உண்மையை நோக்கிய தேடலாக அமையும். <br />
<br />
மனிதர்கள் பல விதமானவர்கள் அவர்களது விருப்பு வெறுப்புகளின் தளங்கள் வேறுவேறானவையாக இருக்கும். அவர்களது சிந்தனைகள் நம்பிக்கைகள் வாழ்க்கை முறைகள் வேறுபட்டவையாக இருக்கும். அவர்களது பார்வைகளும் அதன் விளைவாக வெளிப்படும் கருத்துக்களும் வேறுபட்டவையாகவே இருக்கும். <br />
<br />
ஒரு கலந்துரையாடல் நடக்கும்போது அங்கே மாற்றுக் கருத்துக்கள் தோன்றுவது தவிர்க்கமுடியாது. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை சொல்வார்கள். கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். எல்லோரும் ஒரே கருத்தை தெரிவித்திருந்தார்கள் என்றால் ஏகமனதாக முடிவெடுக்கப்படும். எதிர்க் கருத்தைக் கூறியவர்களும் முடிவான முடிவை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு அக்கருத்தில் ஒப்புதல் இல்லை என்றாலும் பொது நலன் கருதியோ அல்லது குழுநலன் கருதியோ அம்முடிவிற்கு உடன்படுவார்கள். இது ஆரோக்கியமான கருத்துப்பகிர்வில் நடைபெறுவது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX0Ge3ZUb8gTcOPeSA55MfcRWmfILd5q9AauhI17bRYwyCSfeG6EWFjmH9B_8JYtB7iXc4RKSdzWMXK8EGB_x8hrRgbnjb-0AtYEZZT0chJeY2Yf7lkD52uKSUTQNsLuaN9P_ELm6imkk/s1600/disagree.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="270" l6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX0Ge3ZUb8gTcOPeSA55MfcRWmfILd5q9AauhI17bRYwyCSfeG6EWFjmH9B_8JYtB7iXc4RKSdzWMXK8EGB_x8hrRgbnjb-0AtYEZZT0chJeY2Yf7lkD52uKSUTQNsLuaN9P_ELm6imkk/s320/disagree.jpg" width="320" /></a></div>ஆனால் நம்மவர்களது கருத்துப் பகிர்வுகளில், கலந்துரையாடல்களில் முடிவு வேறுவிதமாக இருக்கும்.<br />
<br />
எதிர்க்கருத்துக் கூறியவர்கள் அக்குழுவிலிருந்து வெளியேறி வேறோர் குழுவை அமைத்துக் கொள்வார்கள் அல்லது அக்குழுவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள். இதற்கான காரணங்களாக பதவியாசை, புகழாசை, பொருளாசை,தன்மானப்பிரச்சனை என்பனவற்றைக் கூறலாம். <br />
<br />
ஆரோக்கியமான பயனுள்ள பல விடயங்களைப்பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் முன்வரவேண்டும். எவருடைய அச்சுறுத்தலும் குறுக்கீடும் இல்லாமல் அவற்றை வெளியிடுவதற்கு உரிமைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அறிவதற்கும் கேட்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் பலர் காத்திருக்கின்றனர்.<br />
<br />
ஒருவரது கருத்துக்கு மறுப்பாக அல்லது எதிராக இன்னொருவர் கருத்தை முன்வைத்தால் அவற்றை முழுமையாக கிரகித்து மறுபரிசீலனை செய்து திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஒருவரிடம் போதியளவு பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருக்கவேண்டும்.<br />
<br />
ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உரிமையுண்டு. அவற்றை வெளிப்படுத்துகின்றபோது அவர்களுக்கு சில கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன. <br />
<br />
மற்றயவர்களின் உரிமைக்கும் உணர்வுக்கும் மதிப்புக்கு கொடுத்து சமூகம், தேசம் போன்றவற்றின் நலன்களுக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனிமனிதனது அந்தரங்கங்களை அம்பலப்படுத்துவது, மானபங்கப்படுத்துவது, அமைதியைக் குலைப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi1_3Fgojpk3ws7Pw9_q0U3CQ6IUaEA9yfEGJwb2aZtAobQFd-87I9ZuqSd1B-PAr6xjfyKetVxpmT8e38jKoHP1pn_b_vdpYx0IEn_xtGMqN26ZU-L5-aYl3IkmDPwivRb3WLDoE5Q0o/s1600/imagesCAX0EUY8.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" l6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi1_3Fgojpk3ws7Pw9_q0U3CQ6IUaEA9yfEGJwb2aZtAobQFd-87I9ZuqSd1B-PAr6xjfyKetVxpmT8e38jKoHP1pn_b_vdpYx0IEn_xtGMqN26ZU-L5-aYl3IkmDPwivRb3WLDoE5Q0o/s1600/imagesCAX0EUY8.jpg" /></a></div>ஆனால் எம்மில் பலர் தமது கருத்தை எதிர்ப்பவர்களை சும்மா விடமாட்டார்கள். உடனடியாக அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து எதிர்கருத்துக் கூறியவர்களை வசைபாடுவார்கள். வன்முறையில் ஈடுபட்டு ஒருவரையொருவர் துன்புறுத்தி காயப்படுத்தி நிரந்தர பகையாளியாக்கி விடுவார்கள். இவர்கள் துணிவாக நின்று எதிராளியின் கருத்தோடு மோதும் பக்குவத்தை வளர்க்காமல் கருத்தைக் கூறியவர்களுடன் மோதும் பலத்தைத்தான் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.<br />
<br />
அதேவேளை எதை எப்படி யார் செய்தாலும் பார்த்துக் கொண்டு இருப்பது என்பதும் சரியல்ல. அது கோழைத்தனம். பகுத்தறிவைப் பாவித்து சொல்ல வேண்டியவற்றை சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்ல வேண்டிய விதத்தில் எடுத்துச் சொல்லவேணடும். <br />
<br />
சில நாடுகளில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஏதாவது பேசிவிட்டால் எதிர் கருத்துக் கூறியவர் மரணத்தையும் தழுவநேரிடும். ஆதலால் கருத்துக்களை கூறும்போது இடம் பொருள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஐனநாயக தேர்தல் நடைபெறுகின்ற நாடுகளில் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்று கூறிவிடமுடியாது. அந்தத் தேர்தல் முறையானது கருத்துச் சுதந்திர மற்றும் அனைத்து சுதந்திரங்களுக்கான மறுப்புக்களை மறைப்பதற்காக தேர்தல் நடக்கின்ற முறையை கவசமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கை போன்ற நாடுகள் அதற்கான சிறந்த உதாரணமாக கூறலாம். <br />
<br />
நான் விரும்பிய கருத்தைச் சொல்வதற்கு எனக்கு பூரண உரிமை இருக்கின்றது என்பதற்காக சமயோசிதமற்று எழுந்தமானமாக விளக்கமற்று ஒருவரது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்களை வெளிப்படுத்துகின்றபோது எதிராளிகளை அதிகமாக சம்பாதித்துக் கொள்கின்றோம். தெளிவான ஆதாரங்களின்றி உண்மைத் தன்மைக்கு புறம்பாக சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் விமர்சிக்கக்கூடாது. <br />
<br />
முக்கியமாக பக்கச்சார்பின்றி நடுநிலமையில் கருத்துக்களை முன்வைப்பவர்களை எமது கருத்துக்கு ஒத்துவராத ஒரு காரணத்துக்காக எதிர் விமர்சனங்களை கொட்டித்தீர்த்தால் அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தமது தொடர்ச்சியான இருத்தலுக்காகவும் எமது எதிராளிகளை நாடி செல்வதற்கு வழிவகுக்கின்றோம்.<br />
<br />
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் மக்களை திசை திருப்புவர்கள் மக்களது உணர்வுகளை தட்டும் வகையில் அவர்களை சுலபமாக நம்பவைக்கும் வகையில் விடயங்களை தெரிவு செய்வார்கள். உதாரணமாக தாய்நிலம், வர்க்கபேதம், மதம் போன்ற விடயங்களை கையாண்டு கேட்பவர்களை மூளைச் சலவைக்கு உட்படுத்தி தாம் நினைப்பதை அவர்களது எண்ணங்களில் திணித்து விடுவார்கள். <br />
<br />
அதன்பின்பு தாம் நினைத்தபடி அவர்களை ஆட்டிக்கொண்டிருப்பார்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்களும் கட்டுண்டிருப்பவர்களும் தாமாக விழித்துக் கொள்ளும் வரை கருத்துப்பகிர்வு என்ற போர்வையில் அவர்களை பாவித்துக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் மூலமாக தாம் நினைப்பதை நிறைவேற்றிக் கொண்டிருப்பார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4pM-kLoKjtyD9vlyDvudC2OWDjKxJYmNRZTdhf-QbRMDNpV4ozMaw1wXjd-jTX_4HIVD_-ODiLclzw6dlwNrGsMZdqH_qs6GluSHo-R9MO2kwxbupxri0JKjzaZsETyjHU9XsQhuQmjY/s1600/no_free_speech.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="207" l6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4pM-kLoKjtyD9vlyDvudC2OWDjKxJYmNRZTdhf-QbRMDNpV4ozMaw1wXjd-jTX_4HIVD_-ODiLclzw6dlwNrGsMZdqH_qs6GluSHo-R9MO2kwxbupxri0JKjzaZsETyjHU9XsQhuQmjY/s320/no_free_speech.jpg" width="320" /></a></div>மனிதர்கள் சகமனிதர்களை அடக்குவதிலும் அவர்களை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கவுமே விரும்புவர். தமது கருத்துக்கு எதிராக எழும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தைரியமும் மனப்பக்குவமும் அவர்களுக்கு கிடையாது. அதனால் மாற்றுக் கருத்துக்களை தந்திரமாக அடக்குவதற்கான வழிமுறைகளையே அவர்கள் தேடுவார்கள்.<br />
<br />
புலம்பெயர் நாடுகளில் ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இன்னொருவரை மானபங்கப்படுத்துதல் துன்புறுத்துதல் அடக்குமுறைக்கு உள்ளாக்குதல் போன்றவற்றுக்கு சட்டத்தின் உதவியை அனைவரும் சுலபமாக நாடலாம். பொறுப்பற்ற கருத்துச் சுதந்திரத்தை தட்டிக்கேட்க இந்த நாடுகளிலுள்ள சட்டங்கள் ஒருபோதும் பின்னிற்பதில்லை.<br />
<br />
சமூகத்திற்குள் பிளவுகளை தூண்டும் விதமாகவும் மற்றவர்கள் மீது திணிக்கும் விதமாகவும் தமது கருத்துக்களை விதைப்பவர்கள் எமது சமூகத்தில் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் யாரும் தமது நேரத்தையோ பணத்தையோ சட்ட வல்லுனர்களோடு செலவளிக்க தயாரக இல்லை என்பதே காரணம். <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL-IrRboPPFdy73i6g3EXVw_04xeZIiPw2feZznjMYHPasrsnbmTOsx2404YJt_l_PUP_xlXOSbLqzNyGYD6X20FQVG_fOuVpKYX2eJ_pt0RKRbMsFM-b9-KUO1PNTsO0wlOZrEOY2kfw/s1600/Portrait-of-a-boy-covering-his-mouth-12441688-0.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" l6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL-IrRboPPFdy73i6g3EXVw_04xeZIiPw2feZznjMYHPasrsnbmTOsx2404YJt_l_PUP_xlXOSbLqzNyGYD6X20FQVG_fOuVpKYX2eJ_pt0RKRbMsFM-b9-KUO1PNTsO0wlOZrEOY2kfw/s320/Portrait-of-a-boy-covering-his-mouth-12441688-0.jpg" width="213" /></a></div>கருத்து திணிப்பென்பது குடும்பத்திற்குள்ளேயே அன்பென்ற போர்வையில் ஆரம்பமாகின்றது. அதே போல் கிடைக்கின்ற சுதந்திரத்தை முறையாக பாவிக்காமலும் கண்ணியமாக கையாளாமலும் கோட்டை விடுவதும் நிகழ்கின்றது. <br />
<br />
கருத்தை கூறிவிட்டு கருத்தில் உள்ள நியாயத்தன்மையை கேட்பவர்களோ பயன்படுத்துபவர்களோ தீர்மானிக்கட்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. <br />
<br />
கேட்பவரது சுதந்திரத்தைப் பறித்து தனது கருத்தை நிலைநிறுத்த முனைவது திணிப்பாகும். கருத்து சுதந்திரம் என்பது எழுதுபவருக்கு அல்லது பேசுபவருக்கு மட்டுமல்ல அதைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் இருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. <br />
<br />
சிலருக்கு இடம் பொருள் ஏவல் பார்த்து கருத்துக்களை முன்வைக்கும் பழக்கம் கிடையாது மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடுவார்கள். ஒளிவு மறைவு இல்லாமல் நினைத்தவற்றை நினைத்தவுடன் பேசுகின்றவர்களுக்கு எதிரிகள் அதிகம். நெளிந்து வளைந்து குழைந்து மற்றவர்களுக்கு ஏற்றவகையில் அவர்களுக்கு சாதகமான கருத்துக்களை முன்வைப்பவர்களைத்தான் இன்று பலருக்கும் பிடிக்கும். <br />
<br />
எப்போதும் யார் பக்கம் நியாயமோ அவருக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும். இரண்டு பேரும் வேண்டியவர்கள் என்ற நிலை ஏற்படும் வேளையில்கூட கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பதென்பது அநியாயத்திற்கு துணை போகின்ற செயலாகும். <br />
<br />
ஒரு நிகழ்வை அல்லது ஒரு தகவலை அடிப்படையாக வைத்து வெளிப்படையாக தெரிகின்றவற்றை மட்டும் கணக்கிலெடுத்து ஓர் உணர்வு வேகத்தில் கருத்தைக் கூறுவதென்பது ஒரு சாதாரண பார்வையாகும் அல்லது பாமரப் பார்வையாகும். <br />
<br />
அந்த நிகழ்வு எதனால் நிகழ்ந்தது அதன் பின்னணி என்ன நடந்த விதம் எப்படி அதன் தொடக்கம் என்ன இவற்றிற்கு தீர்வு என்ன மீண்டும் இந்நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் என்ன என்ற வகையில் ஆராய்ந்து கருத்துக்களை முன்வைப்பதே ஆரோக்கியமான பார்வையாகும்.<br />
<br />
சில சம்பவங்கள் பேசப்படுகின்றபோது முன்வைக்கப்டும் கருத்துக்கள் சிலருக்கு கசப்பாகவும் சிலருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் இருக்கும். ஒரு காலத்தில் சரியென்று நம்பியவை கால மாற்றத்தில் மாற்றமடைந்து மதிப்பீடுகளிற்கு ஏற்றவாறு உருமாற்றங்களை உள்வாங்கி வேறுபடும் நிலையும் உண்டு. ஆதலால் ஆரோக்கியமான கருத்துக்களை வேறுபாடுகள் மறந்து எப்போதும் வரவேற்கவேண்டும். அவற்றை மீள்பார்வைக்கு உட்படுத்தி சேர்த்துக் கொள்ளவேண்டும். <br />
<br />
எதிர்க்கருத்துக்கள் என்றாலென்ன எதிர்விமர்சனங்கள் என்றாலென்ன அவை சொல்லப்பட்ட கருத்துக்கள் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டும் கருத்துக்கள் சொல்பவரைப் பற்றியதாக இருத்தல் அநாகரீகமான செய்கையாகும். எமது கருத்துக்களை வெளியிடும்போது கண்ணியம் காக்கும் நாகரீகத்தை பழகிக்கொள்ளவேண்டும். <br />
<br />
வெளியிடப்படும் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்து அவை ஆராயப்பட்டு எதிர்க்கருத்துக்கள் இருப்பின் அவற்றையும் சேர்த்து மறுபரிசீலனை செய்து முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் அவை சிறந்த முடிவாக அமையும். <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicuyo4LkP-LNRmQD5wO7ceNM6K745uNRORhD8z68bEw_7k5ZhPKvwT8Uk8xJXDGErJiDmC2A2gM0e_jyv86Pyun8SSEdU2BletPC5S5_8-Va3UKWxHq6yG2LqAWyBcxDe3Ngv00ueTL58/s1600/speak.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" l6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicuyo4LkP-LNRmQD5wO7ceNM6K745uNRORhD8z68bEw_7k5ZhPKvwT8Uk8xJXDGErJiDmC2A2gM0e_jyv86Pyun8SSEdU2BletPC5S5_8-Va3UKWxHq6yG2LqAWyBcxDe3Ngv00ueTL58/s320/speak.jpg" width="239" /></a></div>சமூகத்தின் தேசத்தின் முன்னேற்றத்திற்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியமானது. இவற்றினால்தான் ஆரோக்கியமான திருத்தங்களும் மாற்றங்களும் சாத்தியமாகின்றன. <br />
<br />
கருத்து சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற அடிப்படை உரிமை. அந்த உரிமை மீறப்படும்போது கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்ற போது அவன் அடிமையாக்கப்படுகின்றான்<br />
<br />
</div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-46088886124244959252011-01-29T23:18:00.002+11:002011-01-29T23:24:14.318+11:00கவிதை பேசும் நேரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">அவுஸ்திரேலியாவில் 24 மணிநேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ் வானொலி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். எனக்கும் இந்த வானொலிக்கும் மிக நெருங்கிய உறவு இருக்கின்றது. கடந்த 9 வருடங்களாக சிறுகச் சிறுக எமக்கிடையேயுள்ள பிணைப்பு வலுப்பெற்று இன்று இறுக்கமான பிணைப்பாகிவிட்டது. வானொலியும், வானொலியைச் சார்ந்த நண்பர்களும், அன்பான நேயர்களும்தான் புலம்பெயர்ந்த வாழ்வில் என் உறவுகள் என்றே கூறலாம்.<br />
<br />
<br />
'ATBC' என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழர்களுக்கான பிரத்தியேக வானொலியில் வாரம் தோறும் சனிக்கிழமை காலை 10 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இரு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகின்றேன்.<br />
<br />
இணையத்தளத்தில் எமது வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழலாம். என்னோடும் சக அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுடனும் நீங்களும் அழைப்பெடுத்து பேசலாம். அதற்கான இணையத்தளம் http://www.atbc.net.au/ மற்றும் தொலைபேசி இலக்கம் 02 9688 3188.<br />
<br />
சனிக்கிழமை காலை 10 மணிக்கு கவிதை பேசும் நேரம் என்ற நிகழ்ச்சியில் நாம் வாசித்து ரசித்த கவிதைகளையும் உணர்ந்து எழுதிய கவிதைகளையும் வானலைகளில் பகிர்ந்து கொள்வோம். அந்த வகையில் இன்று மழை என்ற தலைப்பில் கவிதைகளை பரிமாறிக்கொண்டோம். <br />
<br />
சிட்னியில் கடந்த சில நாட்களாக கொதிக்கும் வெய்யில் அதே நேரம் அவுஸ்திரேலியாவின் இன்னுமோர் பகுதியாகிய பிறிஸ்பேர்ணில் வெள்ளத்தினால் பெரும் இழப்பு. வெயிலில் தகிக்கும் போது மழை என்ற சொல்லே குளிரவைக்கும் அல்லவா? இதோ மழை பற்றிய எனது கவிதையொன்று<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRa3m3KB-tB25DFOD2t-wg4SV0tVVNh-3LR4BVBVBy2kWWk4YVSnHofYkU7-1ZkqOYZfRIyOPYy-NmS0kIoMWPbu0V-7jxSAzPxEML3Lyt3VXmMtxcnACROr5LaL9OQYHMdxJ4VE3YYnM/s1600/rain_photo_5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRa3m3KB-tB25DFOD2t-wg4SV0tVVNh-3LR4BVBVBy2kWWk4YVSnHofYkU7-1ZkqOYZfRIyOPYy-NmS0kIoMWPbu0V-7jxSAzPxEML3Lyt3VXmMtxcnACROr5LaL9OQYHMdxJ4VE3YYnM/s400/rain_photo_5.jpg" width="265" /></a></div><br />
ஒன்றின் மறைவில் <br />
மற்றொன்றின் உற்பத்தி<br />
சுடுகின்ற வெய்யில் <br />
பொழிகின்ற மழை<br />
ஒன்று மாறியொன்று<br />
<br />
ஒன்றையொன்று துரத்தும்<br />
மழையோடு நீராடி <br />
மணலோடு விளையாட<br />
சிறுவயதில் ஆசை<br />
பெண்ணாக பிறந்ததனால்<br />
மழையோடும் பேதம்<br />
நடுமுற்றத்தில் <br />
குதித்துக் கூச்சலிட்டு<br />
விளையாடும் தருணம்<br />
அம்மாவின் கூச்சலில்<br />
என் உற்சாகம் கரையும்<br />
பொதுவான மழைக்கு<br />
ஆண் என்ன? பெண் என்ன?<br />
ஆனாலும் என்ன<br />
அம்மாவின் எதிர்ப்பில்<br />
என்னோடு மழையும் <br />
சோவென்று அழுதது<br />
<br />
இன்றும் மழை<br />
கட்டுப்பாடுகள் ஏதுமில்லை<br />
விரும்பியபடி நனையலாம் <br />
விதம்விதமாய் கைகுலுக்கலாம்<br />
என் கனவுகளை நிறைவேற்ற<br />
காற்றோடு போராடி<br />
காத்திருக்கின்றது கனமழை <br />
<br />
வேலைக்குப் போகும் நேரம் மழை<br />
நனைந்தால் போவதெப்படி<br />
வேலை முடியும் நேரமும் மழை<br />
நனைந்தால் வீடு சேருவதெப்படி <br />
வீட்டில் இருக்கும் போதும் மழை<br />
வெளியில் நின்று நனைந்தால்<br />
வெகுளிப்பெண் என்ற வீண்பழி <br />
மழையில் நனைவதென்பது <br />
அத்தனை சுலபமானதல்ல <br />
தாழ்வாரத்தில் ஒதுங்கி<br />
தலைகுனியும் எனைப்பார்த்து<br />
அழுகின்றது பேய் மழை<br />
<br />
வரிவரியாக வந்துவிழும் <br />
வண்ணத்துளிகளை <br />
ரசிப்பதோடு நிற்கின்றது<br />
மழையோடு தொடர்ந்த<br />
என் மானசீகக் காதல்<br />
மழையும் நானும் - இன்று <br />
கடந்தகால உறவுகள்<br />
ஆனாலும் தருணம் பார்த்து<br />
கண்களைமூடி <br />
கதகதப்பில் உணர்கின்றேன்<br />
கொட்டும் மழையில்<br />
நான் நனைந்த காலங்களை<br />
<span style="color: #990000;">ஆக்கம் சௌந்தரி</span><br />
<br />
கவிதை எழுதுவது எனது ஆர்வங்களில் ஒன்று. எனக்குள் ஏற்படும் சோகம் மகிழ்ச்சி இரண்டையும் சமநிலைப்படுத்துவதற்காக நான் பாவிக்கின்ற ஆயுதம் கவிதை. எனது அனுபவங்கள் எனது விருப்பங்கள் எனது சிந்தனைகள் இவற்றை எனக்குத் தெரிந்த வடிவில் விரும்பியபோதெல்லாம் எழுதுவேன். எனது கவிதையை வானலைகளில் கேட்டவுடன் எனது உறவுகளும் தமது கவிதைகளுடன் அழைப்பெடுத்தனர். அவர்களது திடீர் ஆக்கங்களையும் இத்துடன் இணைக்கின்றேன் வாசித்துப்பாருங்கள்.<br />
<br />
எனது குரலைக் கேட்டவுடன் உற்சாகம் அடைபவர்களில் செல்வி முக்கியமானவர். ஆரம்பத்தில் வானலைகளில் கதைப்பதற்கே கூச்சப்படுவார். இப்போதெல்லாம் கவிதை வரிகளைக் கோர்க்கத் தொடங்கிவிட்டார். மழை பற்றிய அவரது கவிதையொன்று<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrDpw03mGP_WzBmEc4WbbqQJEehyphenhyphenLIhQlWYcdruiznhd97o9tdkuRB_lfgHtmav2lUIwrqCfi8lu_kcWBLW-LZPkf1khIiw5s_lNik-I5YMO18-9ojR-61gVKSBzBq6PoXgBjp9qY_IWc/s1600/rain21.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrDpw03mGP_WzBmEc4WbbqQJEehyphenhyphenLIhQlWYcdruiznhd97o9tdkuRB_lfgHtmav2lUIwrqCfi8lu_kcWBLW-LZPkf1khIiw5s_lNik-I5YMO18-9ojR-61gVKSBzBq6PoXgBjp9qY_IWc/s400/rain21.jpg" width="400" /></a></div><br />
மழை…..<br />
வெய்யிலைவிட உன்னை<br />
எனக்கு மிகவும் பிடிக்கும்<br />
நீ அதிகமாக பொழிந்து <br />
அழிவை ஏற்படுத்துகையில்<br />
உன்னைத் திட்டுவார்கள்<br />
அதே மக்கள் <br />
தண்ணீர் தண்ணீரென்று<br />
பாலைவனம் கொண்ட <br />
வறண்ட இடங்களில்<br />
உன்னைத் தேடுவார்கள் <br />
பல பூசைகள் வைத்து…..<br />
<br />
<span style="color: #990000;">ஆக்கம் செல்வி</span><br />
<br />
ஓயாமல் பெய்யும் மழை ஏற்படுத்தும் அழிவுகளால் பாதிப்படைந்து மழையை திட்டுகிறார்கள் ஆனால் மழை வராதபோது வறட்சியின் தாக்கத்தால் வாடி வதங்கி எத்தனை சடங்குகள், யாகங்கள், காணிக்கைகள் என்று வேண்டி நிற்கின்றார்கள். <br />
<br />
மழை பெய்தால்<br />
<br />
நிலம் நனையும்<br />
நிலம் நனைந்தால்<br />
பயிர் துளிர்க்கும்<br />
பயிர் துளிர்த்தால்<br />
<br />
பசி நீங்கும்<br />
பசி நீங்கினால்<br />
பூமி மகிழும்<br />
மழையின் மகள்தான்<br />
மகிழ்ச்சியோ….<br />
<span style="color: #990000;">ஆக்கம் மேர்ளின்</span><br />
<br />
மழைப் பெண்ணின் மகள்தான் மகிழ்ச்சியோ, கோபமும் இன்னுமோர் பெண் போலும். <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz2CSOGy0Q7wFx1YH4487LufbUcOyNXTbGTJSfXMh03dXrNShrbLQfu94k4082UXDFUFANzb_xCLxccvNIUSdOT8JFz45-l2p9BimJe3Px-phDss9G31nIevCy01m8Ap9mkZ85liSdVeo/s1600/original_heavy-rains_47282ba8158ce.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="242" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz2CSOGy0Q7wFx1YH4487LufbUcOyNXTbGTJSfXMh03dXrNShrbLQfu94k4082UXDFUFANzb_xCLxccvNIUSdOT8JFz45-l2p9BimJe3Px-phDss9G31nIevCy01m8Ap9mkZ85liSdVeo/s400/original_heavy-rains_47282ba8158ce.jpg" width="400" /></a></div><br />
மழைக் கவிதை கொண்டு வந்த<br />
கவிதை மலைகளே<br />
மழையைத் திட்டாதீர்கள்<br />
இயற்கை தன் வேலையை<br />
சரியாகத்தான் செய்கிறாள்<br />
மனிதன்தான்<br />
பிழையான இடத்தில்<br />
வீடுகளும் சாலைகளும் <br />
வீம்போடு கட்டுகிறான்<br />
வானம் இழுத்த நீரை<br />
வைத்திருக்க முடியுமா<br />
கொட்டித் தீர்க்கத்தானே வேண்டும்<br />
<br />
இயற்கை தன் தொழிலை<br />
மில்லியன்ஸ் பில்லியன்ஸ்<br />
ஆண்டுகளாக செய்கிறாள்<br />
மனிதா நீ<br />
200 வருடங்கள்தான்<br />
வீடுகள் அமைக்கிறாய்<br />
சாலைகள் அமைக்கிறாய்<br />
மனிதர்களை சாடுங்கள்<br />
மழையை சாடாதீர்கள்<br />
அவள் கண்ணீரை<br />
கொட்டித் தீர்க்க விடுங்கள்<br />
<br />
மனிதா<br />
இயற்கையுடன் முண்டாதே<br />
தடைகளை போடாதே<br />
அவளை சுதந்திரமாக ஓடவிடு<br />
கடலைச் சேரவிடு<br />
இது மழைக்கு மட்டுமல்ல<br />
இயற்கையனைத்துக்கும் பொதுவானது<br />
<br />
<span style="color: #990000;">ஆக்கம் சிறீதரன்</span><br />
<br />
இயற்கையை சீற்றம் கொள்ள வைப்பது மனிதர்களே. இயற்கை அனர்த்தங்களை குறைப்பதற்கு மனிதர்கள் முயற்சிக்க வேண்டும். மரங்களை வெட்டுதல், நச்சு வாயுக்களின் உற்பத்தி, அணுஆலைகளின் ஆக்கிரமிப்பு இவையெல்லாம் இயற்கையின் சீரை குலைக்கின்றன. <br />
<br />
அதுமட்டுமல்ல அணைக்கட்டுக்கள் அதிக வெள்ளத்தால் உடையக்கூடும் என்று தெரிந்தும் அதற்கு அண்மித்த பகுதியில் மாட மாளிகைகளை கட்டுபவர்களையும் காடுகள் எரியும் என்று தெரிந்தும் அந்தப்பகுதியில் வலிந்து சென்று குடியிருப்பவர்களையும் என்னவென்று சொல்வது என்று தனது வருத்தத்தை தெரியப்படுத்தினார் சிறீதரன். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgla4giELIG4iZ8R83JCI-jgRlBif49xQKAn8PfOfxGgrPzgS9XAO50_K7f5VsK-r88E8BJ0iCJEINWP3YRoEbKB09KpxTiXtZKeXQLofRFxj3EJZr_76blaU-ePc234tkDZfUoSiMamUo/s1600/mad.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgla4giELIG4iZ8R83JCI-jgRlBif49xQKAn8PfOfxGgrPzgS9XAO50_K7f5VsK-r88E8BJ0iCJEINWP3YRoEbKB09KpxTiXtZKeXQLofRFxj3EJZr_76blaU-ePc234tkDZfUoSiMamUo/s400/mad.jpg" width="400" /></a></div><br />
காரிருள் தோன்ற<br />
கீற்றான மின்னொளியில்<br />
உன்வழி கண்டு<br />
கண்டிடும் வழியில்<br />
கேட்டிடும் முழக்கத்தில் <br />
முத்துக்களாய் மூடிடுவாய்<br />
மாநிலம் மகிழ….<br />
<br />
ஆக்கமும் நீ<br />
அழிவும் நீ<br />
இனம்புரியா அமைதியும் நீ<br />
நின் வரவின்பின்னால்<br />
புரிந்தன இவை எமக்கு<br />
<br />
உன்னிடம் ஓர் கேள்வியொன்று<br />
இருளில் ஒழிந்து இறங்கும் போது<br />
ஒளி போன்ற வெண்மையாய் பொழிவதேனோ?<br />
<br />
மனிதா<br />
இருளில் ஒழிந்த உள்ளத்தில்<br />
மின்னல் தோன்றவிடு<br />
சிந்தனை மழை சீராகும்<br />
சீராகும் சிந்தையில் <br />
சிந்திடு சிரிப்பெனும் மழையை<br />
சிரிப்பெனும் மழையில் <br />
உறவுகள் வாழும்<br />
உறவுகள் வாழ <br />
உலகு வாழும்<br />
நட்பெனும் மழையில்<br />
<br />
முடிவில் <br />
உண்டு வாழு நீ<br />
மழையெனும் என்னால்<br />
மானிலத்தில்<br />
உண்டு வாழ்வு<br />
நல்மன மழையென <br />
பொழியவிடும் <br />
மனிதனாம் உன்னால்<br />
<span style="color: #990000;">ஆக்கம் மெர்சி</span><br />
<br />
மழை எல்லோருக்குமாகத்தான் பொழிகின்றது. மழை பெய்வது குறித்து சிலர் கவலைப்பட்டும் சிலர் கவலையற்றும் இன்னும் சிலர் நனைந்து மகிழ்ந்தும் இன்னும் சிலர் கவனமாக நனையாமல் குடைக்குள் ஒளிந்தும் சென்று கொண்டிருக்கின்றார்கள். <br />
<br />
மழை எந்தப் பெரிய போராட்டத்தோடு வந்தாலும் வெண்மையாகத்தான் வருகின்றது. அது என்றுமே நிறம் மாறுவதில்லை. மனிதன் மட்டும்தான் அடிக்கடி நிறம் மாறி குணம் மாறி தடுமாறுகின்றான். இயற்கையின் ஆக்கமான மழை மானிட வாழ்க்கைற்கு பல படிப்பினைகளைக் கூறுகின்றது அவற்றின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டால் மாநிலத்தில் உண்டு வாழ்வு என்று கூறியிருந்தார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOH9O6WmJOvi0AygVGhhiwX61iob5qmRl6h40oF8HClwh9wKymSMlHxIi4AKklGxNFWMkDoZm6KhhA52XFzoKQsLbXcEkpL0_DkNH3gVmG7aYRz3k47v0ZIhlRZZh8j5zdqKg8Vdn40cU/s1600/imagesCA9RY8PS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="283" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOH9O6WmJOvi0AygVGhhiwX61iob5qmRl6h40oF8HClwh9wKymSMlHxIi4AKklGxNFWMkDoZm6KhhA52XFzoKQsLbXcEkpL0_DkNH3gVmG7aYRz3k47v0ZIhlRZZh8j5zdqKg8Vdn40cU/s400/imagesCA9RY8PS.jpg" width="400" /></a></div><br />
மேகமே<br />
ஏனின்று சோகமாய் நீ அழுகின்றாய்<br />
தெருவெங்கும் பூவாய் நீ விழுகின்றாய்<br />
<br />
இருபத்தியொன்பதாம் (29) நாளிகையின்று<br />
<br />
கருவுற்றிருந்த நீயின்று<br />
கருமேகம் சூழ <br />
சூழுரைத்து<br />
பகை வேரறுக்க <br />
<br />
இடிமின்னலாய் உறுமி<br />
நீ உருகுகின்றாயா…..<br />
<br />
இது தமிழ்மானம் சுமந்த மழைக் காலம்<br />
<br />
தெருவெங்கும் கருகுகின்ற வேளை<br />
விடிவுவரும் நேரமென <br />
இடிமின்னல் <br />
வானைக் கிழிக்கிறதே<br />
பகை ஓடி ஒழிக்கிறதே<br />
ஏனென்று நான் அறியலாமா?<br />
<br />
இன்று முத்துக்குமரன் <br />
தீயில் எரிந்தநாளென்று<br />
கண்ணீர் தூவுகின்றாயா…..<br />
<br />
<span style="color: #990000;">ஆக்கம் கௌத்தம்</span><br />
<br />
இன்று தைமாதம் 29 ம் திகதி தமிழர்களின் நலன் வேண்டி தன்னையே எரித்துக்கொண்ட முத்துக்குமாரின் நினைவுநாள். கணணீர் மழையை தூவிவிட்டு சென்றார் கௌதம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT5HqoEk9rjvwhrKF1-YrDqzpLzWAWUWTQrp7G4jg2c5DuIaNP7uA68H3C8W9wIPaSfXhCVExhbhyzLd3xjuB0TIps0F8kXiEupzUwi6_rAM6p10qH2TmF8zp5h11uCNslT8i8Dw3Ikok/s1600/imagesCAUO60HI.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="299" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT5HqoEk9rjvwhrKF1-YrDqzpLzWAWUWTQrp7G4jg2c5DuIaNP7uA68H3C8W9wIPaSfXhCVExhbhyzLd3xjuB0TIps0F8kXiEupzUwi6_rAM6p10qH2TmF8zp5h11uCNslT8i8Dw3Ikok/s400/imagesCAUO60HI.jpg" width="400" /></a></div><br />
மழையைப் பாடும் மனிதா<br />
மனதில் நினைத்துப் பார்<br />
மழை எங்கிருந்து வருகிறது<br />
மண்ணுக்காய் போராடும் மனிதா<br />
மழை இல்லையென்றால் <br />
மண்ணில் வாழத்தான் முடியுமா<br />
மழை வேண்டுமென்றால்<br />
மண் வேண்டுமென்றால்<br />
மழையைத் தந்து <br />
வளமூட்டும் மண்ணில் <br />
வாழ நமக்கு<br />
கடல் வேண்டுமல்லவா<br />
அதற்கும் போராடு……<br />
<br />
<span style="color: #990000;">ஆக்கம் சோனா</span><br />
<br />
மழையின் ஆரம்பம் என்ன என்பதை நினைத்துப் பாருங்கள் என்று கூறி மழையின் உற்பத்திக்கு கைகொடுக்கும் கடலின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தி கடலுக்காகவும் போராடுவோம் என்று கவிதையில் கூறினார் சோனா. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div>இப்படியாக பல உறவுகள் தங்களது சிந்தனைகளில் துளிர்க்கும் எண்ணங்களை வார்த்தைகளில் கொண்டு வந்து வானலைகளில் தவழவிட்டார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrYjD2EhxQ6H5nHbLQaahDrz067ui9L7vupy1foqo0buV1P9JQ-XgTZYd6b4fyr8SQuUogyZDAxTlYlh_KCnv2WQkC1l3pn1kdjpxIrnRbQ2FaqkXvp09mNvMnu6sxah8F82F_sV5wzuI/s1600/istockphoto_6715814-go-green-save-the-environment.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrYjD2EhxQ6H5nHbLQaahDrz067ui9L7vupy1foqo0buV1P9JQ-XgTZYd6b4fyr8SQuUogyZDAxTlYlh_KCnv2WQkC1l3pn1kdjpxIrnRbQ2FaqkXvp09mNvMnu6sxah8F82F_sV5wzuI/s400/istockphoto_6715814-go-green-save-the-environment.jpg" width="400" /></a></div><br />
கரு மேகத்தை கண்டவுடன் எனக்குள் சோகம் தொற்றிக்கொள்ளும். மழைத் துளிகளோடு என் கண்ணீர்த்துளிகளும் வழிந்தோடும். ஆனால் சோவென்று பொழியும் மழையைக் கண்டவுடன் உற்சாகம் பொங்கும். அதுவும் வெப்பகாலத்தில் மழை வந்தால் பெரிய வரவேற்புத்தான். வேண்டிய நேரத்தில் வேண்டாமலே வந்த சுகமல்லவா. குறிப்பாக இரவு நேரத்தில் இன்பக் களிப்பில் கட்டியணைத்த வண்ணம் கொட்டும் மழையில் கிட்டும் குதூகலம் சொற்களுக்குள் அடக்கலாமா? <br />
<br />
அளவோடு வந்தால் அழகாக பூக்கும் பூக்கள் போல் எல்லாமே அற்புதமாகத்தான் இருக்கும். ஆக்ரோசமாக வருகின்ற மழையால் எத்தனை அழிவு. வாழுகின்ற இடத்திலும் வாழ்ந்து வந்த இடத்திலும் கடும் மழையின் பாதிப்பை கண்கூடாக பார்க்கின்றோம். <br />
<br />
மழையால் பாதிப்படைந்த இடங்களில் தெருவெல்லாம் வெள்ளம் தேங்கிக் கிடக்கிறது. தண்ணீர் படையெடுப்பினால் அழிந்த உயிர்களின் வரவு செலவுகள் கணக்கெடுக்கப்படுகின்றன. படிப்பதற்கு செல்லும் பாடசாலைகளில் மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தாகத்தை தீர்ப்பதற்கு நீருக்காக ஏங்கிய மக்கள் தண்ணீரைக் கண்டாலே பயத்தோடு தள்ளி நிற்கின்றார்கள். இயற்கையின் சீற்றத்தை என்னவென்று சொல்வது?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBi6BYPzCj6UkqXD4XefnrreH5Hki2Yya4QTmbPIM2OIwYK4faRNPkOiA879dr9jA7EPhTB8uf4htLC_N0FbFqC8VvgHzbxXaWEfR4ICPnTU1q_mVPEvem-4N4westcvFLSuOloiieuA8/s1600/raining.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBi6BYPzCj6UkqXD4XefnrreH5Hki2Yya4QTmbPIM2OIwYK4faRNPkOiA879dr9jA7EPhTB8uf4htLC_N0FbFqC8VvgHzbxXaWEfR4ICPnTU1q_mVPEvem-4N4westcvFLSuOloiieuA8/s400/raining.jpg" width="400" /></a></div><br />
மழைமேகம் கறுத்து<br />
மழைத் தூறலொன்று<br />
மெதுவாக முத்தமிட<br />
முத்தத்தின் தித்திப்பில்<br />
மணம்வீசி வரவேற்றது மண்<br />
பூமியெங்கும் துளித்துளியாய் மழை….<br />
<br />
மழைப்பெண்ணே<br />
நீ கண்ணீர் விடுவது எதற்காக<br />
உன் காதலனும்<br />
உன்னை விட்டுச் சென்றானோ?<br />
மழை மொழி புரிந்தால்<br />
காரணத்தை எனக்கும் சொல்வாயோ?<br />
ஆனாலும் என்ன<br />
உன் கலங்கிய மனதின்<br />
இலவசக் கசிவு<br />
பூமியின் தாகத்தை<br />
இதமாக தணிக்கிறதே!<br />
<br />
மேகத்தை துளைத்து <br />
படபடவென பொழிகிறாய் <br />
கனத்த மனசோடு அழுதாலும் <br />
உன் சுகமான குளிர் பட்டு<br />
உலகெங்கும் பரவசம் <br />
கும்மென்ற இருட்டில்<br />
சில்லென்ற காற்றோடு <br />
சிணுங்கியபடி நீ வந்தால்<br />
மகிழ்ச்சிக்கு எல்லையேது<br />
<br />
மழைப் பெண்ணே<br />
உன் குறும்புக்கும் அளவில்லை<br />
உன் நடிப்புக்கும் குறைவில்லை<br />
உன் வரவுக்கு தவமிருந்து<br />
திட்டித் தீர்த்து சண்டையிட்டு<br />
விட்டு ஒதுங்கும் நேரம் <br />
சமாதானப் புறாவாகி <br />
சமரசம் செய்வதற்கு <br />
அதிசயமாய் நீ வருவாய் <br />
அன்று நீ நாயகிதான்<br />
வந்தவழி செல்லாது<br />
தொடர்ந்து நீ சிணுங்கினால்<br />
என்றும் நீ வில்லிதான்<br />
அறிவிப்புக் கொடுக்காமலே <br />
நினைத்தநேரம் வருகிறாய்<br />
வறட்சியில் வாடும் போது<br />
வராமலே போகிறாய்<br />
நீ நல்லவளா கெட்டவளா<br />
பிழைப்பும் கொடுக்கிறாய்<br />
பிழைப்பையும் கெடுக்கிறாய்<br />
யாரின் துண்டுதலில்<br />
இப்படி நீ செய்கிறாய்<br />
<br />
மாரி மழை கண்டால் <br />
வாண்டுகளின் அட்டகாசம் <br />
வண்ணக் குடைகளுக்கு மவுசு<br />
தவளைகளின் கச்சேரி<br />
உன் பார்வை பட்டு<br />
பயிர்கள் பளபளக்கும்<br />
உன் பாதம்பட்டு <br />
பாதைகள் பழுதாகும்<br />
<br />
மழைப் பெண்ணே <br />
உன் மண்ணை மறக்காமல்<br />
ஒருமுறையாவது வருவதனால்<br />
உன்னிடம் ஈரம் இருக்கிறது<br />
வறண்ட நிலத்தை வளமாக்குவதால்<br />
உன்னிடம் நல்ல மனசும் இருக்கிறது<br />
அடிக்கடி பூமியை முத்தமிடுவதால்<br />
உனக்குள் காதலும் இருக்கிறது<br />
உனக்கு கண்கள் மட்டும் இல்லையோ<br />
சிலவேளைகளில் <br />
அளவோடு நிறுத்தாமல்<br />
அழுது கொண்டேயிருக்கிறாய்<br />
உன் அழுகையில் <br />
நானும் அல்லவா நனைகிறேன் <br />
தொல்லை தரும் பெண்ணே<br />
உன்னோடு பேசவேண்டும்<br />
உன் தொலைபேசி இலக்கம்தான் என்ன?<br />
<br />
<span style="color: #990000;">ஆக்கம் சௌந்தரி</span><br />
<br />
இது எனது சிந்தனையில் உருவான மழைக் கவிதை. <br />
<br />
கவிதைகள் தரமானவை என்று கூறமுடியாது போனாலும் எங்கள் மனங்களை பிணைக்கின்ற உயிர்ப்பு இந்த வார்த்தைகளுக்குள் இருக்கின்றது. வாராவாரம் ஒரு மணி நேரம் முகம் தெரயாத பல உறவுகளை குரல் வழியாக சந்தித்து சிந்தனைகளை பகிர்ந்து அன்பு பாராட்டுவதற்கு கிடைக்கின்ற சந்தர்ப்பம் என்பது பெரிய விடயமல்லவா? <br />
<br />
அடுத்த வாரம் கலை என்ற பொருளில் கவிதைகள் கூறுவோம். நீங்களும் உங்களது சிந்தனை ஊற்றுக்களை கவிதை மொழியில் எழுதி இணைத்துவிடுங்கள். அவற்றை எனது உறவுகளுடன் மகிழ்வோடு பரிமாறிக்கொள்வேன். எங்களது கதம்ப மாலையில் நீங்களும் ஓர் அழகிய மலராக இணைந்து கொள்ளுங்கள். <br />
<br />
சௌந்தரி</div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-70546817746892054652011-01-26T22:14:00.000+11:002011-01-26T22:14:57.884+11:00தஸ்லீமா நஷ்ரீன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">நான் விரும்பி வாசித்த கவிதைகளிவை. விரும்புவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமானது எனது எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் ஒத்துப் போகின்றவையாக இருப்பது. அந்த வகையில் என்னைக் கவர்ந்த ஒரு ஆளுமை மிக்க பெண்ணின் எழுத்துக்கள் இவை.<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPVEeBhyphenhyphen3rK14mqk2WpZ20gvA0peUcfgNMuk__7AJAC0eCCRDUXWSMPhOyhGxUGRSZCAZN87JJXnOHGyP09xrJ6RZtZNpypVFgptWBm-BnMocQ_yQy1q7VfnpCGhNB_sWWHZkjObxnYbw/s1600/taslima.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="255" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPVEeBhyphenhyphen3rK14mqk2WpZ20gvA0peUcfgNMuk__7AJAC0eCCRDUXWSMPhOyhGxUGRSZCAZN87JJXnOHGyP09xrJ6RZtZNpypVFgptWBm-BnMocQ_yQy1q7VfnpCGhNB_sWWHZkjObxnYbw/s400/taslima.jpg" width="400" /></a></div><br />
<br />
தஸ்லீமா நஷ்ரீனின் கவிதைகள் மிகவும் புலமை வாய்ந்தவை என்று சொல்வதைவிட வாசிப்பவர்களை மீண்டும் வாசிக்கத் தூண்டும் வசீகரம் கொண்டவை என்றே கூறத்தோன்றுகின்றது. <br />
<br />
வெகு சாதாரணமாக தனது உணர்வுகளையும் வலிகளின் ஓசைகளையும் அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் சோகத்தின் இழைகளையும் அவரது எழுத்துக்கள் பறைசாற்றுகின்றன.<br />
<br />
*********************************************<br />
<br />
<strong>அடக்குமுறை</strong><br />
<br />
<br />
மனித சுபாவம் அப்படி<br />
<br />
நீங்கள் உட்கார்ந்தால் அவர்கள் சொல்வார்கள்<br />
<br />
உட்காராதே<br />
<br />
<br />
நின்றால் சொல்வார்கள்<br />
<br />
உனக்கு என்ன பிரச்சனை<br />
<br />
நடக்கக்கூடாதா?<br />
<br />
<br />
நடந்தால் சொல்வார்கள்<br />
<br />
அவமானம்<br />
<br />
உட்கார் நீ<br />
<br />
<br />
நீங்கள் தாளமுடியாமல்<br />
<br />
படுத்தால் சொல்வார்கள்<br />
<br />
எழுந்து நில்<br />
<br />
<br />
நீங்கள் <br />
<br />
படுக்கவில்லையானால் சொல்வார்கள்<br />
<br />
கொஞ்சம் படுக்கலாமில்லையா?<br />
<br />
<br />
விழிப்பதும் தூங்குதுமாக என் வாழ்வை<br />
<br />
நான் வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்<br />
<br />
<br />
நான் இக்கணமே இறந்து போனால்<br />
<br />
அவர்கள் சொல்வார்கள்<br />
<br />
நீ வாழ வேண்டும்<br />
<br />
<br />
நான் வாழ்வதைப் பார்த்தார்களானால்<br />
<br />
யாருக்குத் தெரியும்<br />
<br />
அவர்கள் சொல்வார்கள்<br />
<br />
நீ இருப்பதே அவமானம்<br />
<br />
செத்துத் தொலை<br />
<br />
<br />
அதீத பயத்துடன்<br />
<br />
ரகசியமாக<br />
<br />
நான் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்<br />
<br />
*************************************************<br />
<br />
<br />
மற்றவர்களை திருப்திப் படுத்துவதற்காக அவர்கள் விரும்பும் வகையில் செயல்பட முயற்சித்தாலும் எல்லோரையும் எல்லா சந்தர்ப்பத்திலும் திருப்திப்படுத்த முடியாது என்பதை அழகாக உணர வைக்கின்றது அந்தக் கவிதை. எதைச் செய்தாலும் குற்றம் கூறுபவர்களுக்கு மத்தியிலும் வேண்டா வெறுப்பாக தனது வாழ்க்கையை வாழ விரும்பாது அதீதமான பயத்திற்கு மத்தியிலும் ரகசியமாக தனக்குள்ளே தனக்காக தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYKmWfxP-SB1oikXv8byKCb2zwefN7z9r-C3ffunh5dGe2jCZfZpsDAnU9YDf41s_X6K0ARAL0L2idFzNvSTf43pRqiRrTipqLmHbljrquBWo3VDLcT8ujfu-eydn1VtPlwaYO5m4kxRs/s1600/11892995_1a12013f5e.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="238" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYKmWfxP-SB1oikXv8byKCb2zwefN7z9r-C3ffunh5dGe2jCZfZpsDAnU9YDf41s_X6K0ARAL0L2idFzNvSTf43pRqiRrTipqLmHbljrquBWo3VDLcT8ujfu-eydn1VtPlwaYO5m4kxRs/s320/11892995_1a12013f5e.jpg" width="320" /></a></div><br />
1962 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வங்காள தேசத்தில் பிறந்த தஸ்லீமா நஷ்ரீன் ஒரு குழந்தைப்பேறு நிபுணராக இருந்தபோதும் இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதிக் கொண்டிருந்தார். <br />
<br />
அவரது பெயரைக்கொண்டே அவரது மதம் என்ன என்பதை கண்டுபிடித்துவிட முடியும். ஆம், மிகவும் கட்டுப்பாடு மிக்க முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர்தான் தஸ்லீமா.<br />
<br />
<br />
பெண்களிற்கெதிரான அடக்குமுறைகள், மதம் என்ற போர்வையில் திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பெண்களின் உடல்சார்ந்த வன்முறைகள் போன்றவற்றை கருப்பொருளாக வைத்து கடுமையாகவும் ஆழமாகவும் தர்க்கபூர்வமாகவும் எழுதிவந்தார். <br />
<br />
<br />
உலகம் முழுவதும் இவரது எழுத்துக்கள் பேசப்பட்டு பலவிருதுகளைப் பெற்றுக் கொண்டபோதும் அவரது சொந்த நாட்டிலும் இஸ்லாமிய மதவாதிகள் மத்தியிலும் அவரது எழுத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகின, சிலர் விரும்பினார்கள் பலர் வெறுத்தார்கள்.<br />
<br />
<br />
முஸ்லீம் பெண்ணாக இருந்தும் தனது இனத்தையும் மதத்தையும் விமர்சித்த இவரது எழுத்துக்களால் எழுச்சியுற்ற அமைப்புக்கள் இவர்மீது வழக்குக்கள் தொடர்ந்தன. பலதடவைகள் இவரை பொது இடங்களில் வைத்து தாக்கியிருந்தன. அது மட்டுமல்ல இவரது உயிருக்கே விலை பேசியதால் பல நாடுகளிலும் தலைமறைவாக ஓர் நாடோடி போன்று வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மதத்தைவிட மனிதத்தை விரும்பிய இந்தப் பெண்ணுக்கு இன்றுவரை எதிர்ப்புக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. <br />
<br />
***************<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSIPidGwxS1i1x1Z3gUEPnxqINTY8uG-xuBCsfD56l8nQOodJjwSw7rM_LPC1FonRylzUVWVgf2TPWJ0_6bH4xFokjIwjcHDuTLrZ0GeaRusorz1KxCsy02AFvDrVdVbKYxluZ4SqTTb4/s1600/Religious+Intolerance.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSIPidGwxS1i1x1Z3gUEPnxqINTY8uG-xuBCsfD56l8nQOodJjwSw7rM_LPC1FonRylzUVWVgf2TPWJ0_6bH4xFokjIwjcHDuTLrZ0GeaRusorz1KxCsy02AFvDrVdVbKYxluZ4SqTTb4/s320/Religious+Intolerance.jpg" width="297" /></a></div><br />
<strong>மதம்</strong><br />
<br />
<br />
கோபுரங்களைத் தரைமட்டமாக்குங்கள்<br />
<br />
கோயில்களின் <br />
<br />
மசூதிகளின்<br />
<br />
குருத்துவாராக்களின்<br />
<br />
சர்ச்சுக்களின் கட்டிடங்கள்<br />
<br />
கொழுந்துவிடும் தீயில் எரியட்டும்<br />
<br />
<br />
அந்த அழிவிலிருந்து<br />
<br />
நறுமணத்தைப் பரப்பிக்கொண்டு<br />
<br />
அழகான மலர்த் தோட்டங்கள் எழட்டும்<br />
<br />
குழந்தைப்பள்ளிகளும்<br />
<br />
படிப்பகங்களும் அதிலிருந்து எழட்டும்<br />
<br />
<br />
மனிதகுல நலனின் பொருட்டு<br />
<br />
பிரார்த்தனை மண்டபங்கள்<br />
<br />
மருத்துவமனைகள் அனாதை விடுதிகள்<br />
<br />
பள்ளிக்கூடங்கள் பல்கலைக்கழகங்கள் ஆக்கப்படட்டும்<br />
<br />
<br />
கலைக்கூடங்களாக<br />
<br />
கண்காட்சி மையங்களாக<br />
<br />
விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்களாக<br />
<br />
பிரார்த்தனை மண்டபங்கள்<br />
<br />
அதிகாலைப் பிரகாசத்தில் <br />
<br />
பொன்னரிசி விளையும் வயல்களாக ஆகட்டும்<br />
<br />
<br />
திறந்தவெளிகளாக நதிகளாக<br />
<br />
ஆரவாரிக்கும் அமைதியற்ற சமுத்திரங்களாக<br />
<br />
<br />
இன்றுமுதல் <br />
<br />
மதத்தின் மறுபெயர் <br />
<br />
மனிதம் என்றாகட்டும்<br />
<br />
*************************<br />
<br />
மதத்தைப்பற்றி எழுதினாலோ பேசினாலோ சூழுரைத்துக்கொண்டு சண்டைபோடவென்றே ஒரு கூட்டம் வந்துவிடும். ஆரோக்கியமான விமர்சனங்களை கருத்தில் கொண்டு மதச் சடங்குகளையோ கொள்கைகளையோ மறுஆய்வு செய்வதற்கு யாருமே தயாராக இல்லை. சொல்லப்பட்ட கருத்து உண்மைக்கு புறம்பானதாக இருக்கும் பட்சத்தில் உண்மையானவற்றை அதன் பொருட்கூற்றை மேற்கோள் காட்டி விளக்கம் கொடுப்பதற்கு யாரும் முன்வருவதுமில்லை. <br />
<br />
<br />
மதத்தின் பேரில் எதைச் செய்தாலும் அது சரியானதே என்ற நம்பிக்கையால் பல ஆண்டுகளுக்கு முன்பாக எமது சந்ததியினர் கற்றுத்தந்த சடங்குகளும் உட்புகுத்திய முறைகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றமடையவேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் சமூக சீர்திருத்த கருத்துக்களுக்கும் எழுத்துக்களுக்கும் சாட்டையடி கொடுப்பது எந்த விதத்தில் ஞாயமாகும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaLZLi-7zy0eTq4YPuR1E0LcTMWA-6tb7O03Q3H6xdYsykHAlDGb2jRbIM-YUTbRMUt21liZpW5063IpVmS4F7HnqY2s7Y3MD3PLCQHwbKED3z1U8GyhaH5M3_2Z5SVsAiwLY6zBulWf4/s1600/_41138283_taslimaprotest_afp.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaLZLi-7zy0eTq4YPuR1E0LcTMWA-6tb7O03Q3H6xdYsykHAlDGb2jRbIM-YUTbRMUt21liZpW5063IpVmS4F7HnqY2s7Y3MD3PLCQHwbKED3z1U8GyhaH5M3_2Z5SVsAiwLY6zBulWf4/s320/_41138283_taslimaprotest_afp.jpg" width="320" /></a></div><br />
<br />
தனது சமூகத்தையும் மதத்தையும் தஸ்லீமா ஆழமாக நேசித்தார். தான் சார்ந்த சமூகத்தோடுதான் தனது தொடர்புகளும் உறவுகளும் வளரவேண்டுமென்ற ஆர்வத்தோடு தான் துரத்தியடிக்கப்பட்டபோதும் மீண்டும் மீண்டும் அவர்களை நோக்கியே சென்றார். அதற்காக தனக்கு ஒவ்வாத கருத்துக்கள் தோன்றுகின்றபோது மௌனிக்கவோ ஒத்தகருத்து என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவோ அவரால் முடியவில்லை. <br />
<br />
***************************************************************************<br />
<br />
<br />
<strong>நடத்தை</strong><br />
<br />
<br />
நீ ஒரு பெண்<br />
<br />
இதை நீ ஒருபோதும் மறவாதே<br />
<br />
உனது வீட்டின் நிலைப்படியை நீ தாண்டினால்<br />
<br />
ஆண்கள் உடனடியாக உன்னைக் கவனிப்பர்<br />
<br />
<br />
தெருவில் நீ நடக்கத் தொடங்கினால்<br />
<br />
ஆண்கள்<br />
<br />
உன்னைத் தொடர்ந்து வந்து விசிலடிப்பார்கள்<br />
<br />
தெருமுனை தாண்டிப்<br />
<br />
பிரதான சாலையில் நீ அடியெடுத்து வைக்கும்போது<br />
<br />
ஆண்கள்<br />
<br />
உன்னைக் கேவலமாகப் பார்ப்பார்கள்<br />
<br />
<br />
நடத்தை சரியில்லாதவள் என்பார்கள்<br />
<br />
<br />
உனக்கு ஆளுமை இல்லையென்றால்<br />
<br />
நீ திரும்பிப் பார்ப்பாய்<br />
<br />
<br />
அப்படியில்லையெனில் நீ <br />
<br />
தொடர்ந்து போய்க்கொண்டேயிருப்பாய்<br />
<br />
இப்போது போய்கொண்டிருப்பதைப்போல<br />
<br />
*********************************************<br />
<br />
ஒரு எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் கண்ணாடி என்பதன் உண்மையை தஸ்லீமா நஷ்ரீனின் கவிதைகள் பறைசாற்றும். இவருடைய கவிதைகளை வாசிக்கும் போது எனக்குள்ளும் இதே கேள்விகள் இருக்கின்றதே என்று நினைக்கத் தோன்றும். ஆக பலருக்கு பதிலாக தஸ்லீமா நஷ்ரீன் பேசுகின்றார். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5D7xUHaDu3QX-cUSA4nKog5UFxt7Ob6OnQzj23_DJCiIZeAHGytP60ZObgUMQo_1hsXJlSaB0EZFBnq5yhkzLKAjyOplMdhNbCm3_O7G6kACBdaIVp7Iyb2xgRoy0qVZ8IY1yvUZCLZg/s1600/women_and_freedom_645915.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5D7xUHaDu3QX-cUSA4nKog5UFxt7Ob6OnQzj23_DJCiIZeAHGytP60ZObgUMQo_1hsXJlSaB0EZFBnq5yhkzLKAjyOplMdhNbCm3_O7G6kACBdaIVp7Iyb2xgRoy0qVZ8IY1yvUZCLZg/s320/women_and_freedom_645915.jpg" width="268" /></a></div><br />
<br />
தஸ்லீமா ஒருபோதும் தனது மதத்தை இழிவு செய்யவில்லை. விமர்சனம்தான் செய்தார். ஆழமாக சென்று ஆராய்ச்சி செய்து மதத்தின் கோட்பாடுகளை அவர் விமர்சிக்கவில்லை. மதம் என்ற போர்வையில் சமூகத்தில் நடைபெறுகின்ற அடக்கு முறைகள் வேண்டாம் என்று கூர்மையாக எழுதினார். ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இவரது எழுத்துக்கள் ஆத்திரத்தைக் கிளம்புகின்றது. பதிலளிக்கத் தெரியாதபோது அநாகரீகமாக அவதூறு கிளப்பிவிட்டு தப்பித்துச் செல்கின்றார்கள். <br />
<br />
இவரது கவிதைகளில் சமூக அனுபவங்களுடன் தனது அனுபவங்களும் அதிகமாக சொல்லப்பட்டிருக்கும். <br />
<br />
மாறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதமோ சமூகமோ அவமதிப்பது தவறு, பெண்களை அடிமைப்படுத்தும் கொள்கைகளை பரப்புவது தவறு, அறியாமை என்னும் மாயைக்குள் மனிதர்களை கட்டி வைத்திருப்பது தவறு என்பதைப் பற்றித்தான் இவர் அதிகமாக எழுதியிருக்கின்றார். <br />
<br />
ஒரு தனி மனிதனின் நிம்மதியையும் சுதந்திரத்தையும் சிந்தனையையும் குலைக்கும் எவருடனும் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது. தங்களது அதிகாரம் பறிபோய்விடும் என்கின்ற பயத்தினாலும் தாம் காணாமலே போய்விடுவோம் என்ற பயத்தினாலும் சீர்திருத்தவாதிகளை சாடிக்கொள்வது புதியவிடயமல்ல.<br />
<br />
<div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRpzYWNoi7IcjFRWlB_ycFxKBvLgMnUqIOZIbHqnKeY24Sh4RWfuA-1b1UoqUW-68YyKF9UfQc3xSxcYPvd2aLZnujXY72kJsNmvko5RtXYQT6iqfGDeGypESkUq_OriFhLKbrdHS9xSU/s1600/50263_333009253424_7022224_q.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" s5="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRpzYWNoi7IcjFRWlB_ycFxKBvLgMnUqIOZIbHqnKeY24Sh4RWfuA-1b1UoqUW-68YyKF9UfQc3xSxcYPvd2aLZnujXY72kJsNmvko5RtXYQT6iqfGDeGypESkUq_OriFhLKbrdHS9xSU/s200/50263_333009253424_7022224_q.jpg" width="200" /></a></div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"><br />
</div>எந்தவோர் புரட்சியான கருத்தும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒரு காலத்தில் முடியாதவையாகவும் புரட்சியானவையாகவும் பலரது எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்ட எத்தனையோ பல கருத்துக்கள் இன்று சாதரணமாக பலராலும் பயன் படுத்தப்படுகின்றன. ஆதலால் தஸ்லீமா நஷ்ரீனின் பேனாவின் கூர்மை மக்களை சிந்திக்க வைக்கும் காலத்தால் போற்றப்படும். <br />
</div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-76416111913478766572010-01-20T23:56:00.014+11:002011-01-21T10:06:06.939+11:00அகிம்சை வெற்றிகரமான ஓர் போராட்ட வடிவமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">நீண்ட இடைவெளியின் பின்பு மீண்டும் எழுதுகின்றேன். நினைத்த நேரத்தில் வருவதும் போவதற்கும் சுலபமான தளமாக இது அமைந்துவிட்டது. எழுதவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பலதோணியில் காலை வைப்பதால் போதியளவு நேரம் கிடைக்காமல் போய்விடுகின்றது. அஹிம்சை பற்றி பலரோடும் பேசிய அனுபவத்தை வைத்து இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். <br />
<br />
<br />
<br />
<br />
அஹிம்சைவழி என்றால் ஹிம்சை செய்யாத அல்லது ஹிம்சையை அகற்றுகின்ற ஒரு பாதை என்று கூறலாம். அஹிம்சைவாதிகள் மற்றவர்களின் மனதையோ உடலையோ காயப்படுத்தாது தங்களைத் தாங்களே ஹிம்சைப்படுத்துவர். அஹிம்சை என்பது கோழைத்தனம் அல்ல, அஹிம்சை வழியில் செயல்பாடுகளை முன்னெடுப்பவருக்கு அதிக வீரம், சகிப்புத்தன்மை, மன உறுதி போன்றவை அமையவேண்டும். எல்லா மதங்களினதும் அடிப்படையான போதனை அஹிம்சைதான். காந்தி, புத்தர், யேசு இவர்கள் அகிம்சையைப்பற்றி பேசும்போது முக்கியமாக பேசப்படுவார்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
அஹிம்சைவழி செயல்பாடுகள் அரசியல் போராட்டங்களில் மட்டுமல்ல, குடும்ப உறவுகளில், சமூகத்துடனான உறவுகளில், நண்பர்களுடனான உறவுகளில் என்று எப்பேற்பட்ட உறவுகளிலும் ஏற்படும் சிக்கல்களை முரண்பாடுகளை சீர்ப்படுத்தும்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwVYv8NdX4AX6FJRjWZG32E9MtZAbGs50CWGq8TcyzP9-XW51TSJwXt2iWu203-sWsuQd_v0CjJqi8sQY4ICyUMpTpMMlcarxL1nwh6w2CtZS7udsVNPlsWYMqbK5Q2MJsZi35K-eEPBE/s1600-h/AngelofPeace.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwVYv8NdX4AX6FJRjWZG32E9MtZAbGs50CWGq8TcyzP9-XW51TSJwXt2iWu203-sWsuQd_v0CjJqi8sQY4ICyUMpTpMMlcarxL1nwh6w2CtZS7udsVNPlsWYMqbK5Q2MJsZi35K-eEPBE/s320/AngelofPeace.jpg" /></a><br />
<br />
அஹிம்சை பயன்படுத்தப்படும்போது சுயஹிம்சையாக மாறுகிறது. அது எதிராளியின் ஆன்மாவை மிக வன்மையாகக் காயப்படுத்தும், ஹிம்சைப்படுத்தும். அதை எதிராளி தாங்கிக் கொள்ள முடியாத நிலைவரும்போது அவன் அஹிம்சைப் போராளியிடம் தோற்று விடுகின்றான். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது எதிராளிக்கு ஆன்மா இருக்க வேண்டும், மெல்லுணர்வும் மனிதமும் இருக்கவேண்டும். இதை ஆளுபவன் ஆளப்படுபவன் என்ற கோணத்தில் கருதினால் இவர்களில் அதிகம் பாதிக்கப்படுபவன் ஆளப்படுபவனே. ஆளப்படுபவன் தொடர்ச்சியாக பாதிக்கப்படும்போது வன்முறை வெடிக்கின்றது. வன்முறை இன்றி அஹிம்சைவழியில் செயலபடவேண்டும் என்றால் ஆளுபவன் அஹிம்சையை ஏற்றுக்கொள்ளும் உணர்வு கொண்டவனாக இருக்க வேண்டும். இங்கே எதிராளி என்பவன் ஒரு தனிமனிதனாகவோ, இனமாகவோ, மதக் குழுவாகவோ அல்லது ஒரு நாடாகவோ இருக்கலாம். <br />
<br />
<br />
<br />
<br />
ஆளப்படுபவர்கள் அல்லது அதிகாரம் செய்பவர்களை வெல்ல வேண்டுமாயின் அவர்களது மேன்மையை குறைப்பதற்குரிய வழிவகைகளை கருத்தில் கொள்ளவேண்டும். இதற்கு தொகையும் அளவும் முக்கியமானது. இன மத ரீதியில் இதை எதிர்கொள்வது மிகவும் கடினம். ஏனென்றால் சமூகத்தில் பல தளங்கள் பல இயக்கங்கள் என்று பிளவுபட்டு இருக்கும்போது சீரான இயக்கத்தையோ தனித்துவமான செயல்பாட்டையோ நடைமுறைப்படுத்துவது கடினமானது. இதனால்தான் பெரும்பான்மைச் சமூகங்களால் சிறுபான்மைச் சமூகங்கள் அழிக்கப்படுகின்றன. <br />
<br />
<br />
<br />
<br />
அஹிம்சை ஒரு போராட்ட வடிவமாக மாறும்போது வன்முறை போராட்ட வடிவத்தை விட ஒப்பீட்டளவில் இழப்புக்கள் குறைவாகும். ஏற்படுகின்ற இழப்புக்களும் எதிராளியின் ஹிம்சையின் காரணமாகவே பெருமளவில் ஏற்படும். இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தமது விடுதலைப் போரட்டத்தில் அஹிம்சை வடிவங்களையே பெருமளவில் பயன்படுத்தி வெற்றியீட்டின.<br />
<br />
<br />
<br />
<br />
வெறுமனே அஹிம்சை வழி மட்டுமே சமூக, அரசியல், தேச விடுதலைப் போராட்டங்களில் வெற்றியைப் பெற்றுத் தராது. அகிம்சையுடன் அறிவையும் திறமையையும் தந்திரத்தையும் பயன்படுத்தவேண்டும். உதாரணமாக எதிரியை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவனது அரசியல், இராணுவ, பொருளாதார பலத்தையும், அவற்றின் நெறிகளையும், அவனது வரலாற்றையும் தெளிவாக ஆராய வேண்டும். அவற்றில் அவன் நெருக்கடிக்குள்ளாகும் சமயங்களில் எமது போராட்டங்களைத் தீவிரப்படுத்தினால் அஹிம்சை வழிப்போராட்டம் வெற்றி பெறும். <br />
<br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi781raGLqpI2dZKLypbAkthKNee4VwoeFbJCbVS-TQD3sd5ycE3v28b4vIarbWtO8KknAndRmQorjYUa6KsKw5rAR6nb-gIgWzb61TH14v5NtJ_vaIebZso7i7cUDozNeQPpXUgqdhPbQ/s1600-h/4c8d7146-a1fd-475d-a2cf-c3fb3b4edb691.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi781raGLqpI2dZKLypbAkthKNee4VwoeFbJCbVS-TQD3sd5ycE3v28b4vIarbWtO8KknAndRmQorjYUa6KsKw5rAR6nb-gIgWzb61TH14v5NtJ_vaIebZso7i7cUDozNeQPpXUgqdhPbQ/s320/4c8d7146-a1fd-475d-a2cf-c3fb3b4edb691.jpg" /></a><br />
<br />
இந்திய தேசிய விடுதலைப் போராட்டம், மேலைநாட்டவர் இந்தியாவை ஆக்கிரமிக்கும்போதே ஆரம்பித்து விட்டது. மன்னர்களும், குறுநில மன்னர்களும் வன்முறை மூலம் ஆக்கிரமிப்பை எதிர்த்தார்கள். அவர்களது சிறிய இராணுவங்கள் மேலைநாட்டவர்களின் பெரிய இராணுவத்திடம் தோல்வியடைந்தன. அப்போது சிலர் சரணடைந்தார்கள். சிலர் துரோகிகளாக மாறி தாய்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். வீரர்கள் மட்டும் இறுதிவரை போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள். அவர்கள் வரலாற்றில் என்றும் வாழ்வார்கள்.<br />
<br />
<br />
<br />
<br />
சில நூற்றாண்டுகள் சென்ற பின்னர் ஆக்கிரமிப்பாளர்களின் தேசங்கள் நெருக்கடிக்குள்ளாயின. அத்துடன் அந்நாட்டு மக்களது மனிதாபிமானப் பண்;புகள் வளர்ச்ச்சியடைந்து அவர்களது இயல்புகளும் மாற்றமடைந்தன. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய தேசிய விடுதலை இயக்கம் தனது போராட்ட உத்தியை வன்முறையிலிருந்து அஹிம்சைக்கு மாற்றியது. மக்களை ஓரணியில் திரட்டுவதற்குத் தோதான தலைமைத்துவப் பண்புகள் நிரம்பிய ஒரு மனிதர் தோன்றினார். மிகக் குறைந்த இழப்புக்களுடன் ஒரு பெரிய நாடு அந்நிய சக்திகளிடமிருந்து விடுதலை பெற்றது.<br />
<br />
<br />
<br />
<br />
ஆனால் விடுதலை என்பது பல்வேறு தளங்களிலும் பல்வேறு படிமுறைகளிலும் பெறப்படவேண்டியது. இந்திய விடுதலைப் போராட்டம் அந்நியர்கள் வெளியேறியதும் தேக்கமடைந்தது. அது மட்டுமல்லாமல் ஒடுக்கப்படும் தேசமாக இருந்த இந்தியா நேரெதிர் திசையில் பயணித்து ஒடுக்கும் தேசமாக மாறியது. விளைவுகளை நாமும் அண்மையில் அனுபவித்தோம்.<br />
<br />
<br />
<br />
<br />
சில சந்தர்ப்பங்களில் வன்முறையும் அஹிம்சையும் கலந்த போராட்டம் சமாந்தரமாக நிகழ்த்தப்படவேண்டும். குறிக்கோள் ஒன்றாக இருந்து சிலர் அஹிம்சைவழி சிலர் ஹிம்சைவழி என்ற சரியான ஒருங்கிணைப்பான தலைமையின்கீழ் போராட்டம் நடைபெற்றால் வெற்றி கிட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும் <br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbjs9laLZmu-cePxrb7JjZDk9mLb0-Uv-FRc9hkwX_77qanKj1Xf1xauQbaTD-h_nO__jciQVoO_syR5CzMQLSJyHRCk4VX2GqvnTHuu8hnRjewEQ4Wvd6SaA4V4CiD5oMtS21a_pZg60/s1600-h/200px-Mehmooni2.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbjs9laLZmu-cePxrb7JjZDk9mLb0-Uv-FRc9hkwX_77qanKj1Xf1xauQbaTD-h_nO__jciQVoO_syR5CzMQLSJyHRCk4VX2GqvnTHuu8hnRjewEQ4Wvd6SaA4V4CiD5oMtS21a_pZg60/s320/200px-Mehmooni2.jpg" /></a><br />
பெண்களிடம் அஹிம்சை முறை இயல்பாக அமைந்திருக்கின்றது அதனால்தான் அவர்கள் பொதுவாக அன்பானவர்களாகவும் வன்முறையை வெறுப்பவர்களாகவும் இருக்கின்றார்களா என்ற சிந்தனைக்கு இல்லை அப்படி இயல்பாக ஒன்றும் ஏற்படவில்லை பெண்களுக்கு அவை காலம் காலமாக போதிக்கபட்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வந்தவை. <br />
<br />
பெண்களிடம் உள்ள உற்பத்தித்திறன் காரணமாக அதாவது கருத்தரிக்கும் ஆற்றல் காரணமாக ஒரு சமூகத்தின் இருப்பை தக்கவைக்க வன்முறையும் மரணமும் மிகுந்த போராட்டச் சூழலிலிருந்து அவர்கள் ஒதுக்கப்பட்டு சேமிக்கப்பட்டார்கள், சமூகத்தின் சொத்தாக கருதப்பட்டார்கள் என்றும் பதில் அமைந்தது. <br />
<br />
<br />
<br />
<br />
கருணை உள்ளவர்கள் தம்மை மற்றவர்களுக்காக அதிகம் அர்ப்பணிக்கின்றார்கள். துணிந்து துன்பங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். கருணையற்ற தன்னலவாதிகள் வாழ்க்கையுடன் போராடமாட்டார்கள். அவர்களுக்காகவும் அஹிம்சைவாதிகளே போராடுகின்றார்கள், தங்களை வருத்தி தனிமைப்படுத்தி சுயஹிம்சை செய்கிறார்கள். அஹிம்சை ஒரு கட்டத்தில் சுயஹிம்சை கிம்சையாக மாறிவிடுகின்றது.<br />
<br />
<br />
<br />
<br />
அஹிம்சை முறைப் போரட்டவடிவங்களில் முக்கியமானதொன்றாக உண்ணாநோன்பு இருத்தலைக் கூறலாம். தனது கருத்தை, கொள்கையை, கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு தனது உயிரைக்கூட விடுவேன் என்று உணவருந்தாமல் இருப்பது எதிராளியை அல்லது மற்றவரை வற்புறுத்துவது அல்லது வெருட்டுவது போன்றதாகும் என்ற கருத்துக்கு பதிலாக ஒருவரது கொள்கையின் மீதான் பற்றுதலை நிரூபிப்பதற்காக அவர் மற்றவர்களது உயிரைக் கேட்கவோ எடுக்வோ இல்லையே தனது உயிரைத்தானே தருகின்றேன் என்று கூறுகின்றார் என்று சொல்லப்பட்டது. அஹிம்சைப் போரட்டத்தின் மூலம் எதிராளியின் ஆன்மா ஹிம்சைப்பட்டு புத்துயிர்பெற்று கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும் என்றால் யாருக்கும் உடல் வலிக்காமல் மாற்றமொன்றை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
<br />
<br />
<br />
நடைமுறை அரசியலோடு ஒத்துப்போகாத அஹிம்சைவழிப் போராட்டத்தை மேற்கொண்ட காந்தி கொல்லப்பட்டாரே என்ற கேள்வியும் எழாமலில்லை. ஆனால் அஹிம்சைவழியில் போராடிய காந்தி ஒருவரைத்தான் கொல்ல முடிந்தது. ஹிம்சை வழியில் போராடுபவர்களைக் கொல்ல வெளிக்கிட்டால் எங்கே போய் முடியும் என்ற பதிலும் கிடைத்தது. எங்களைச் சார்ந்தவர்களுக்காக கருணையுடன் விட்டுக் கொடுத்து எங்களை சிறுக சிறுக கொல்லும்போது எங்களைச் சார்ந்தவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள் அல்லவா? <br />
<br />
<br />
<br />
<br />
அஹிம்சை என்ற சொல்லிற்கு ஒரே வார்த்தையில் அர்த்தம் கூறிவிடமுடியாது. உடலாலும் மனசாலும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதுவும் காப்பதுவும் அஹிம்சை தான். உறவுகளுக்குள்ளும் அஹிம்சை கவனிக்கப்பட வேண்டியதொன்று. உறவுகள்தானே என்று பல விடயங்களில் அசட்டையாக இருப்பது இயல்பாகிவிட்டது. <br />
<br />
<br />
<br />
<br />
ஒருவரை வார்த்தைகளினால் உணர்ச்சிகளினால் துன்புறுத்துவதுகூட வன்முறையானதுதான். ஒருவர் தவறான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்து திட்டும்போது அவரைவிட மோசமாக போட்டிக்குத் திட்டாமல் அவர் அப்படியான வார்த்தைகளை பிரயோகிப்பது சரியானதல்ல என்பதை அவருக்கு உணரச்செய்தல் வேண்டும். அவர் உடனடியாக திருந்தாமல் போகலாம் ஆனால் காலப்போக்கில் அவர் தனது தவறை உணரக்கூடும். இதுவே பிரச்சனைக்குரிய அணுகுமுறை. <br />
<br />
<br />
<br />
<br />
அதேபோல் நான் ஓர் சாதரண மனிதன் தவறுகள் செய்து திருந்துபவன்தானே மனிதன் என்று கூறிக்கொண்டே தொடர்ந்து தவறுகள் புரிவதும் தெரிந்து கொண்டே பிழைகளைச் செய்துவிட்டு பின்பு அதை நியாயப்படுத்துவதும் முடிவில் அனைத்துமே கைவிட்டுப்போய்விடுமோ என்ற பயத்தில் தொடர் பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்பதுவும் எந்த விதத்திலும் சரியானதல்ல.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt4if4aDbpY6QEpeB1mtkl_Q8mv6BSaLrsl9ni8wryclt6woGvLVRezovznaA7L4gkT1YtzNlxMyfzOmX5beZ_aABfEPMqAsziDypbiOfogBEeoTUZSBeUVmiQil-tolHHVjGZqnbDXGE/s1600-h/WC-OC118.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt4if4aDbpY6QEpeB1mtkl_Q8mv6BSaLrsl9ni8wryclt6woGvLVRezovznaA7L4gkT1YtzNlxMyfzOmX5beZ_aABfEPMqAsziDypbiOfogBEeoTUZSBeUVmiQil-tolHHVjGZqnbDXGE/s320/WC-OC118.jpg" /></a><br />
<br />
இன்று உலகம் முழுவதும் பல்வேறு இன மத மொழி மக்களும் கலந்து வாழ்கின்ற சூழல் உருவாகிவருகின்றது. கலாசாரக் கலப்பு அதிகரித்து வரும்போது சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்பட்டு மோதல்களும் அதிகரிக்கின்றன. வன்முறையின் தீவிரமும் அதிகரிக்கின்றது. இதனால் இன்று உலகம் முழுவதும் அமைதியை நாடி மக்கள் மீண்டும் அஹிம்சைக் கொள்கைகளை சிந்திக்கவும் செயல்படுத்தவும் வேண்டிய முக்கியத்தை உணரத் தொடங்கிவிட்டார்கள். <br />
<br />
<br />
<br />
<br />
அஹிம்சை என்பது பொறுத்துக் கொண்டு போவதோ கையாலாகாத்தனமோ அல்ல எதிராளியின் வன்முறையை விவேகமாக எதிர்கொள்ளத் தெரிந்தவர்களும் எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கக்கூடிய வலிமை உள்ளவர்களும் அஹிம்சையின் பாதையில் துணிந்து செல்லமுடியும். குட்ட குட்ட குனிந்து கொண்டிருப்பது கோழைத்தனம். ஆனால் எதிராளியின் பலம் பலவீனம் ஆகியவற்றை சரியான முறையில் புரிந்துகொண்டு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்து வன்முறை தவிர்த்து எதிர்ப்பதுதான் அஹிம்சைமுறை. இங்கே எதிராளியின் உடலோ பௌதீக உருவோ பாதிக்கப்படாது பாதுகாக்கப்பட்டு அவர்களது ஆன்மா காயப்படுகின்றது. <br />
<br />
<br />
<br />
<br />
அதுமட்டுமல்ல தனியொருவனாக இல்லாது தன்னைச் சார்ந்தவர்களைக்கூட எதிராளியின் வன்முறையை எப்படி அகிம்சை முறையில் எதிர்கொள்ளவேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றது. அதற்கு மிகுந்த சமூக அக்கறையும் பொறுமையும் நற்பண்புகளும் இயல்பாக அமையவேண்டும். கர்வமும் தந்நலமும் இருப்பவர்களிடம் அகிம்சை என்பது இருக்க முடியாது. <br />
<br />
<br />
<br />
<br />
பலரோடு பேசியபோது அஹிம்சை முறை தற்போதைய வாழ்க்கை முறைக்கு சாத்தியப்பட்டுவராது. முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும் என்று வாதிட்டார்கள். ஒருதடவை இல்லை இரண்டு தடவை பொறுத்துக் கொண்டிருக்கலாம் அதன்பின்னும் சித்திரவதை ஓயவில்லையென்றால் போர்தான், வன்முறைதான் சாத்தியமானது என்றார்கள். அப்படிப் பேசுவது தவறு அறிவாற்றல் கொண்டவர்கள் வீரத்தைக்கூட விவேகமாக வெளிக்காட்டவேண்டும் என்று கூறியபோது பறந்து வரும் கழுகிடமிருந்து குஞ்சுகளை காப்பதற்கு கோழி அகிம்சை முறையில் போராடாது என்று கோபப்பட்டார்கள். உங்களுக்குரியதை மற்றவர்கள் தட்டிப்பறிக்கும்போது பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வேறு ஏதோ பெயர் என்று உணர்ச்சிவசப்பட்டார்கள். எந்த வலியையும் வேதனையையும் அனுபவிக்காமல் உணராமல் அஹிம்சைமுறை நல்லது என்று வாய் வலிக்காமல் பேசிவிட்டுப்போகலாம் ஆனால் தளத்தில் நின்று வேதனையை அனுபவித்தவர்களிடமிருந்து அதை எதிர்பார்க்காதீர்கள் என்றும் கூறினார்கள். <br />
<br />
<br />
<br />
<br />
அஹிம்சை பற்றிய அடிப்படை விளக்கத்தை எழுதியிருக்கின்றேன். உங்களது பார்வையில் அஹிம்சைபற்றிய வாத பிரதிவாதங்களை நீங்களும் முன்வைக்கலாம். <br />
<br />
<br />
<br />
<br />
சிந்தனையைத் தூண்டும் விதமாக தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பர் மற்றும் எழுத்தாளர் S ரஞ்சகுமார் அவர்களுக்கு எனது நன்றிகள்</div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-26464769034787249782009-09-25T13:07:00.011+10:002009-09-26T15:58:35.369+10:00பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகள்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJ9K-KYlHrV5OSS5dFfszSjaFX5Amz7mkXgYLgknKOhZvOy6pN1sKtU5oY19Hb9bo-BiT6k0MC-zQQN2SQHAdpMAje06aokWfGWTBYstl_uKlKDd-pjyTLlIKJStnAS2DYQiDtgge3ldo/s1600-h/friendship-3_300.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" iq="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJ9K-KYlHrV5OSS5dFfszSjaFX5Amz7mkXgYLgknKOhZvOy6pN1sKtU5oY19Hb9bo-BiT6k0MC-zQQN2SQHAdpMAje06aokWfGWTBYstl_uKlKDd-pjyTLlIKJStnAS2DYQiDtgge3ldo/s320/friendship-3_300.jpg" /></a><br />
</div><span style="color: #274e13; font-size: x-small;">கரவைக்குரல், குயிலைப்போன்ற உங்களது குரலைத்தான் கேட்டேன். உங்களது கூட்டையோ, முகத்தையோ, முகவரியையோ நீங்கள் அடையாளப்படுத்தவில்லை. </span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13;"><span style="font-size: x-small;">உங்களைப்பற்றி கொஞ்சம் அதிகமாக கூறியிருக்கக் கூடாதா? பெற்றோர்கள், சகோதரர்கள், கரவையில் நீங்கள் எந்த மூலை, அத்துளுக்குளம், சண்டில்குளம் என்று எதைப்பற்றியும் கூறவில்லையே. </span><span style="font-size: x-small;">தண்ணியென்றால் பயமா? கரவையில் பிறந்தவர்களுக்கு அந்தப்பயம் எப்போதும் இருக்காதே? </span></span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13; font-size: x-small;">தங்கம்மா ரீச்சரின் வீட்டிற்கு பக்கம், தங்கம்மா ரீச்சரின் வீடு மறந்துபோய்விட்டது, வயசு போய்க்கொண்டிருக்கின்றது அல்லவா? ஆனாலும் உங்களது வீட்டின் படத்தைப்ப பார்த்ததும் எங்கோ பார்த்ததாக ஞாபகம். மேலும் அறிய ஆவலாக இருக்கின்றேன்.</span><br />
<span style="font-size: x-small;"></span><span style="font-size: x-small;"><br />
<span style="color: #274e13; font-size: x-small;">அவசரமாக அழைத்து விட்டீர்களோ என்ற எண்ணத்தோடு உங்கள் பதிவை சென்று பார்த்தேன். வியந்து போனேன். அதே மாணிக்கவாசகர் வித்தியாலயம்தான் எனது ஆரம்பப்பாடசாலை. ஒரு வித்தியாசம் எனது சித்தப்பா உங்களுக்கு தலைமை ஆசிரியராக இருந்திருக்கின்றார் ஆனால் எனக்கு அவர் ஆசிரியராக இருந்தவர். சித்தப்பா பாலச்சந்திரன் எனது அன்புத் தந்தை பண்டிதர் பொன் கணேசனின் இரண்டாவது தம்பி. </span><span style="font-size: x-small;"><br />
</span><span style="font-size: x-small;"><br />
</span><span style="color: #274e13;"><span style="font-size: x-small;">கோவத்துக்கும் தலைமை ஆசிரியர் பாலச்சந்திரனுக்கும் வெகு தூரம் யதார்த்தமான உண்மை. ஆரம்பக்கல்வியில் இருந்து 5ம் வகுப்புவரை மாணிக்கவாசகரில்தான் நானும் பயின்றேன். குறிப்பிட்டுக் கூறும்படியாக அழகான நினைவுகள் ஏதுமில்லை. அந்த வயசில் கல்வியில் பெரிதாக நாட்டம் இருக்கவில்லை, முழுநேர விளையாட்டுத்தான், விளையாட்டென்று கூறும்போது சும்மா மண் சோறு கறி மற்றும் தாயம், கள்ளன் பொலீஸ், கிந்தித் தொடுதல், கொக்கான் என்று என்னும் எத்தனையோ விளையாட்டுக்கள். ஆக்கபூர்வமாக எதுவும் இல்லை.</span><span style="font-size: x-small;"></span><span style="font-size: x-small;"> </span><br />
<br />
<span style="font-size: x-small;">அந்தக் காலத்து ஆசிரியர்கள் கையில் பிரம்புடன் என்னை நோக்கி வருவதை இன்றும் என்னால் மறக்கமுடியாது. குறிப்பிடும்படியாக எந்த ஆசிரியரும் என்னை கவரவுமில்லை, என்னைப் பாதிக்கவுமில்லை. நீங்கள் கூறியதுபோல் ஆச்சி ரீச்சர் ஞாபகத்தில் நிற்கின்றார். மிகவும் அன்பானவர். மற்றவர்கள் எல்லோரும் வம்பானவர்கள். சித்தப்பா வாய்ப்பாடு கேட்டு தலையில் குட்டுவார், சின்னப்பிள்ளை ரீச்சர் எல்லா இடமும் நுள்ளுவார், நல்லதம்பி மாஸ்டர் பிரம்பால் அடிப்பார், சிவகாமி ரீச்சர் எனது வீட்டிற்கே சென்று சௌந்தரிக்கும் படிப்புக்கும் வெகுதூரம் என்று கோள்மூட்டுவார். அப்பப்பா என்னைச்சுற்றி வில்லன்களும் வில்லிகளும்தான். </span></span><span style="font-size: x-small;"><br />
</span><span style="font-size: x-small;"><br />
</span><span style="color: #274e13;"><span style="font-size: x-small;">இவர்களால் வீட்டிலும் வன்முறை தொடர்ந்தது. எனக்கு இரண்டு (தடியன்கள்) மாமாக்கள் வீட்டில் ஒருவர் மாறி ஒருவர் பாடம் சொல்லித்தருகின்றோம் என்ற நினைப்பில் என்னைக் காயப்படுத்தினர். முற்றத்து மண்ணெல்லாம் விறாந்தையில் கொட்டி எழுத்துச் சொல்லித் தந்தனர். ரோட்டில் உள்ள கல்லெல்லாம் பொறுக்கிவந்து கணக்குச் சொல்லித் தந்தனர். a, b,c,d சொல்லிக் கொடுக்கின்றேன் என்று தனது ஆங்கிலத்திறமையை நிரூபிக்க விரும்பும் எனது நடுவில் மாமா ஆங்கில எழுத்துக்களை நான் தப்புத்தப்பாக மனப்பாடம் செய்து கூறும்போதெல்லாம் தண்டனையாக சுவரில் எனது மூக்கை தொட்டவண்ணம் நகராமல் நிற்கச் சொல்லிவிட்டு ஊர் சுத்தப்போய்விடுவார். அவர் திரும்பி வருமட்டும் நான் அப்படியே நிற்கவேண்டும் கொஞ்சம் நகர்ந்தால்கூட அக்கா மாமாவுக்கு மூட்டிக்கொடுத்துவிடுவாள். என்னைவிட மூன்றுவயது கூடியவள் எனது அக்கா ஆனாலும் நான் அக்காவுக்கு பயமோ பயம், இப்போதும் நான் பயப்படும் ஓர் ஜீவன் எனது அக்காதான். </span><span style="font-size: x-small;">என்னைப் பெற்றவர்களோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் மாமாக்கள் கையில் என்னைத் தத்துக் கொடுத்துவிட்டனர். </span></span></span><br />
<div class="separator" style="clear: both; tt-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS9pWM38z_NibuaCKXYfb1-xIjyiqChf9ec5kofnP0l-p8gS5DyPF-OE18Ji6LSMinEjT5Mdo4dTmYvXVpx7faQnK5QG-D9WqKh-p4b7XtXEOG9FYyDyk_tFgg3ewOHva8e4zkasjzSs4/s1600-h/653365.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><span style="color: #274e13; font-size: x-small;"><img border="0" iq="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS9pWM38z_NibuaCKXYfb1-xIjyiqChf9ec5kofnP0l-p8gS5DyPF-OE18Ji6LSMinEjT5Mdo4dTmYvXVpx7faQnK5QG-D9WqKh-p4b7XtXEOG9FYyDyk_tFgg3ewOHva8e4zkasjzSs4/s320/653365.jpg" /></span></a><br />
</div><span style="color: #274e13; font-size: x-small;">ஆனாலும் தடைகளையும் தாண்டும் வெள்ளாடுபோல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் விளையாடுவது, அத்துளுக்குளத்தில் நீந்தப்போவது, வீட்டில் மாமரம் காய்த்துக் குலுங்கும்போதும் வேறுவீடுகளில் நண்பர்களுடன் மாங்காய் திருடித் தின்பது என்று எனது குறும்புகளுக்கும் ஓய்வேயில்லை. </span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13; font-size: x-small;">எனது குழந்தைப்பருவ வாழ்க்கை குறும்புத்தனமாக இருந்தாலும் ஆரம்பகால கல்வி வாழ்க்கை அனுபவம் ஒன்றும் அழகானதில்லை. ஆனாலும் எனது நண்பர்கள் சிலர் இன்னும் பசுமையாக என் மனசில் நிற்கின்றார்கள்.</span><br />
<span style="font-size: x-small;"><br />
</span><span style="color: #274e13; font-size: x-small;">6ம் வகுப்புமுதல் 10ம் வகுப்புவரை விக்னேஸ்வரா கல்லூரியில் எனது கல்வி தொடர்ந்தது. பலவிதமான பயிற்சிப்பட்டறைகளையும் தாண்டியதாலோ என்னவோ 6 ம் வகுப்பு முதல் எனது கல்வியில் முன்னேற்றம் தோன்றியது. வகுப்பில் எப்போதும் முதலாவது மாணவி, சங்கீதம், நடனம், விளையாட்டு, நாடகம் பேச்சுப்போட்டி என்று எல்லாவற்றிற்கும் முன்னுரிமை கொடுத்தேன் முதன்மையாகவும் விளங்கினேன். இதெல்லாவற்றிற்கும் காரணம் எனது ஆசிரியர்கள் என்மேல் கொண்ட பாசம், அதற்கு இன்னுமோர் காரணம் எனது தந்தையார் பொன் கணேசன் தான் அப்போது விக்னேஷ்வராக் கல்லூரியின் அதிபர். அதிபரின் செல்லப் புத்திரி என்ற பந்தாவும் தந்தையின் அரவணைப்பும் என்னை ஆரோக்கியமாக வளர்த்துக்கொண்டு சென்றது. </span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13; font-size: x-small;">எனக்கு ஆண் சகோதரர்கள் இருக்கவில்லை ஒரே அக்காதான். அதனாலோ என்னவோ ஆண்களோடு பழகுவது பிடிக்கும். ஆனாலும் அன்போடு பழகத் தெரியாது. என்னோடு படித்த ஆண்களுக்கு என்னைப் பிடிக்காது. யாரையும் மதிக்கமாட்டேன், எப்போதும் அவர்களுடன் சண்டைபோடுவேன். சரியான வாயாடி. அவர்கள் பொறுமையிழந்து அப்பாவிடம் சென்று முறையிடுவதும் மீண்டும் சண்டைபோடுவதும் தொடர்கதையானது. எனது தந்தையாருக்கு நான் பெரிய தலைவலியாக இருந்தேன். எனது தந்தை என்மீது கொண்ட அளவுகடந்த அன்பின் காரணமாகவோ என்னவோ பொறுமையுடன் அவர் என்னை சரியான முறையில் நெறிப்படுத்திச் சென்றார். </span><br />
<span style="font-size: x-small;"><br />
</span><span style="color: #274e13; font-size: x-small;">என்வரையில் விக்னேஸ்வராக் கல்லூரி வாழ்க்கை அனுபவம் மிகவும் இனிமையானது. சங்கீத ஆசிரியராக இருந்த பாரதா ரீச்சர் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். என்னைக் கட்டுபடுத்துவதற்காகவே எப்போதும் கண்டிப்பான ஆசிரியரையே எனது வகுப்பாசிரியராக நியமிப்பார் எனது தந்தையார். அவர்களில் குறிப்பிடும்படியாக கூறவிரும்புவது, நாகம்மா ரீச்சர், இரத்தினம் ரீச்சர், நல்லதம்பி மாஸ்டர் போன்றவர்கள். </span><br />
<span style="color: #274e13; font-size: x-small;">10 ம் வகுப்பில் திறமையாக தேர்ச்சிபெற்று பெரிய பெண்ணாகவும் வந்தபின்பு பெண்கள் பாடசாலையில்தான் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலையில் எனக்கு அனுமதிபெற்றுத்தந்தார் அப்பா. ஒரு சிறிய பாடசாலையில் எதிலுமே முதல் மாணவியாக மிளிர்ந்த என்னால் பெரிய பாடசாலையில் போட்டி போடமுடியவில்லை. ஆசிரியர்களின் பாராமுகமும் புதிய மாணவர்களின் அறிமுகமின்மையும் பெரிய தாக்கத்தையும் ஏமாற்றத்தையும் எனக்குள் அளித்தது. மாற்றங்கள் ஏற்படுத்திய இறக்கத்தில் இருந்து மீள்வதற்கு எடுத்த காலங்கள் கொஞ்சம் அதிகம்தான். <br />
<br />
ஆனாலும் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்ற எனது தீராத ஆசையின் தூண்டுதல் நான் விரும்பியபடியே எனது கல்வியைத் தொடரக்கூடியதாக அமைந்தது. யாழ்பல்கலைகழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கணிதத்தில் சிறப்புப்பட்டம் பெற்றேன். எனது பல்கலைக்கழக வாழ்க்கை மிகவும் இனிமையானது. அதைப்பற்றி இன்னுமோர் சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன். யாழ்பல்கலைக்கழக நட்புவட்டம் என்று யாராவது ஓர் தொடரை ஆரம்பிக்காமலா போய்விடப்போகின்றார்கள். <br />
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg57n2mV-elFldR_BqRw-aemx8fvSkXdiGge1-1V0tKmdSc33Xsx_DoXS9E-EFCjlFQm7H_1rqrlfOmnJozfFjfxWoiIUgiX__HnUpQkggb8rAxqgXJTALvXXv5q504nsL8w6vpYUVGSXI/s1600-h/jaffna.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><span style="color: #274e13; font-size: x-small;"><img border="0" iq="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg57n2mV-elFldR_BqRw-aemx8fvSkXdiGge1-1V0tKmdSc33Xsx_DoXS9E-EFCjlFQm7H_1rqrlfOmnJozfFjfxWoiIUgiX__HnUpQkggb8rAxqgXJTALvXXv5q504nsL8w6vpYUVGSXI/s320/jaffna.jpg" /></span></a><br />
</div><span style="font-size: x-small;"></span><span style="color: #274e13;"> <span style="font-size: x-small;">எனது ஊர், எனது மண், எனது மொழி இவை இரத்தத்தில் கலந்தவை. எனது ஊரவன் என்ற உணர்வே கரவைக்குரல் என்ற பதிவைத் தட்டிப்பார்க்கத் தூண்டியது. கரவெட்டி, வடமராட்சி, யாழ்ப்பாணம், ஈழத்துத்தமிழன், இலங்கைத்தமிழன், இந்தியத்தமிழன், உலகத்தமிழன் இது வரிசைகளல்ல வலிகள், புலம்பெயர்வால் ஏற்பட்ட வலிகள். </span></span><br />
<span style="font-size: x-small;"></span><span style="color: #274e13; font-size: x-small;">வலைப்பதிவின் மூலம் என் வலிகளுக்கு வடிகால் கொடுத்த நண்பர்களுக்கு நன்றிகள் கூறி இன்னும் சிலரை அழைக்கவேண்டும் என்ற நிபந்தனையில் யாரை அழைப்பது என்று புரியாமல் ஏனோ மனசுக்கு பிடித்திருக்கின்றது என்ற விதத்தில் இவர்களை தெரிவுசெய்கின்றேன்.</span><br />
<a href="http://www.blogger.com/profile/11970037943261943203"><span style="color: blue;">கோசலன்</span></a><br />
<a href="http://www.blogger.com/profile/04159656921924455334"><span style="color: blue;">வலசு - வேலணை</span></a><span style="color: blue;"> </span><br />
<a href="http://www.blogger.com/profile/17931485885526662680"><span style="color: blue;">இளைஞன் </span></a>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-21927060041222011932009-09-22T14:54:00.019+10:002009-09-23T10:43:12.205+10:00வளர்ச்சி கண்டு மகிழ்ந்தேன்<span id="goog_1253594016096"></span><span id="goog_1253594016097"></span><span id="goog_1253594016098"></span><span id="goog_1253594016099"></span><span id="goog_1253594016092"></span><span id="goog_1253594016093"></span><span id="goog_1253594016088"></span><span id="goog_1253594016089"></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9IOVwHyNm7cimndMoMOxLWsfifBYgqAuEkwvnTwbGGAFtShsEl1LKZcmNzAHrI4gtQ7P7LgKnSkh34to4DT069-yWjGxvCcrvnkSU972DsLREki4F3fxc9gupn0iEfwzeXTY7w4op2E4/s1600-h/brother_and_sister.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><span style="font-size: x-small;"><img border="0" iq="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9IOVwHyNm7cimndMoMOxLWsfifBYgqAuEkwvnTwbGGAFtShsEl1LKZcmNzAHrI4gtQ7P7LgKnSkh34to4DT069-yWjGxvCcrvnkSU972DsLREki4F3fxc9gupn0iEfwzeXTY7w4op2E4/s400/brother_and_sister.jpg" /></span></a><br />
</div><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<span style="color: blue; font-size: x-small;">ஆற்றலெனும் தாகத்திற்கு பாற்கடலாம் </span><br />
<span style="color: blue; font-size: x-small;">உணர்ச்சிக்கவி சகோதரன் கௌதம் </span><br />
<span style="color: blue; font-size: x-small;">தமிழ்த்தாய் பெற்ற இளைய தமிழ்மகன்</span><br />
<span style="color: blue; font-size: x-small;">இவன் வளர்ச்சி கண்டு மகிழ்ந்தேன் </span><br />
<span style="color: blue; font-size: x-small;">மறுமலர்ச்சி கண்டு தலைகுனிந்தேன் </span><br />
<span style="font-size: x-small;"><br />
<span style="color: red;"><span style="font-size: x-small;">கௌதம் ....................</span></span><br />
<span style="color: red;"><br />
</span><span style="color: blue; font-size: x-small;">தோற்றத்தில் நீ இளையவன் <br />
<span style="color: blue; font-size: x-small;">ஏற்றத்தில், மொழியின் சீற்றத்தில் நீ மூத்தவன் </span><br />
<span style="color: blue; font-size: x-small;">உன் ஓவியத்தில் எழில் கண்டேன்</span><br />
<span style="color: blue; font-size: x-small;">உன் கவிதை மொழியில் உயிர் கண்டேன்</span><br />
<span style="color: blue; font-size: x-small;">உன் பேச்சில் வீசும் அனல் கண்டேன்</span><br />
<span style="color: blue; font-size: x-small;">உன் நாவில் தவழும் செந்தமிழின் நாதம்</span><br />
<span style="color: blue; font-size: x-small;">காவும் செய்திகள் எட்டுத் திசையும் எட்டிப்பரவும்</span><br />
<span style="color: blue; font-size: x-small;">உன் வளர்ச்சி தோப்பாக சிறக்கும்</span><br />
<span style="color: blue; font-size: x-small;">உன் செயல் வெற்றியை எட்டும்</span><br />
<span style="color: blue; font-size: x-small;">உன் மொழி இனத்தை வாழ்த்தும்</span><br />
<span style="color: blue; font-size: x-small;">என்றும் வாழ்க என் சகோதரனே!</span><br />
<span style="color: blue; font-size: x-small;"></span><br />
<span style="color: blue; font-size: x-small;">சுழலும் உலகத்தில் சுற்றித்திரியும் பெண்ணே</span><br />
<span style="color: blue; font-size: x-small;">உன் பயணத்தில் நீ கண்டதுதான் என்ன?</span><br />
<span style="color: blue; font-size: x-small;">மலர்ச்சி கண்டு மகிழ்ந்தாயா?<br />
<span style="color: blue; font-size: x-small;">மறுமலர்ச்சி வேண்டுமென்று அழுதாயா?</span><br />
<span style="color: blue; font-size: x-small;">பதில் சொல் </span><br />
<span style="color: blue; font-size: x-small;">எனக்கல்ல என் சகோதரனின் கவிதைக்கு…….</span></span></span><br />
<span style="color: blue; font-size: x-small;"><span style="color: blue; font-size: x-small;"><span style="color: blue; font-size: x-small;"></span><br />
<span style="color: #0c343d;"><span style="font-size: x-small;">அவுஸ்திரேலியாவில் சிட்னியில் ஓர் புதிய கவிஞனை வானலைகளில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த இளம் நண்பனை நேரடியாக சந்திக்கவில்லை ஆனால் அவனது கவித்திறமை, பேச்சுத்திறமை, ஓவியத்திறமை எல்லாவற்றிற்கும் மேலாக மொழிமீதும் தாய் மண்மீதும் அவன் கொண்டுள்ள பற்றுதல் அந்த முகம்தெரியாத சகோதரனைப்பற்றி அறியத்தூண்டியது. </span><br />
</span><span style="font-size: x-small;"><br />
</span><span style="color: #0c343d;"><span style="font-size: x-small;">எனது தேடலில் கௌதம் எழுதிய ஓர் கவிதைத் துளியையும், அவனது ஓவியத்தின் சிறு வண்ணத்தையும் இந்தப் பதிவில் சேர்த்துள்ளேன். அவனைப்பற்றிய தகவல்களை இனிவரும் பதிவுகளில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். </span><br />
</span><span style="font-size: x-small;"><br />
</span></span></span></span><br />
<div style="text-align: left;"><span style="color: #cc0000; font-size: x-small;">கெளதம் எழுதிய கவிதையும் அவன் வரைந்த ஓவியமும் உங்கள் ரசனைக்கு </span><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjak3iJeesBheWo0pnn_-pc7MvAzk_DzSHKnAGJoocA6-WnO4KZuUsovNiTA0kGyN_sxffMDqWiWsWm1PmOPg1KM2UGyy-dKwKYc70cKoNR62mt97zphJdmhGCaM_cmR-wHJu1qh3g1T40/s1600-h/gowtham.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-size: x-small;"><img border="0" iq="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjak3iJeesBheWo0pnn_-pc7MvAzk_DzSHKnAGJoocA6-WnO4KZuUsovNiTA0kGyN_sxffMDqWiWsWm1PmOPg1KM2UGyy-dKwKYc70cKoNR62mt97zphJdmhGCaM_cmR-wHJu1qh3g1T40/s400/gowtham.bmp" /></span></a><br />
</div><span style="font-size: x-small;"><span style="color: #134f5c;"><span style="font-size: x-small;">முன்நாள் புலியடித்து உலகாண்ட மறத்தி நீ</span><br />
<span style="font-size: x-small;">சொன்னான் உன் பாட்டன் இனம் காத்த நெருப்பு நீ</span><br />
<span style="font-size: x-small;">இன்நாள் வாழ்கின்றாய் குலவீரம் மறந்து நீ!</span><br />
</span><span style="font-size: x-small;"><br />
<span style="color: #134f5c;"><span style="font-size: x-small;">உன்னால் சுகம் பெற்று இனக்கன்றும் தான் பெற்று</span><br />
<span style="font-size: x-small;">கண்ணாம் கணவனாம், அடிமைபோல் வாழ்வதற்கு</span><br />
<span style="font-size: x-small;">பொன்னாம் பொருளெல்லாம் கேட்கின்ற நிலை எதற்கு!</span><br />
</span><span style="font-size: x-small;"><br />
<span style="color: #134f5c;"><span style="font-size: x-small;">மண்ணாம் பூமியிலே முளைக்கின்ற மரக்கன்றும்</span><br />
<span style="font-size: x-small;">தன்னால் இயன்றவரை மனிதனை வாழவைக்கும்</span><br />
<span style="font-size: x-small;">பெண்ணாம் பெரும் பிறப்பை மனிதயினம் தாழவைக்கும்!;</span><br />
</span><span style="font-size: x-small;"><br />
<span style="color: #134f5c;"><span style="font-size: x-small;">விண்ணாம் அதன்மேலே வீசுகின்ற வெண்ணிலாவின்</span><br />
<span style="font-size: x-small;">வண்ணம் கொள்வதுதான் வாழ்நாளின் முறையென்றார்</span><br />
<span style="font-size: x-small;">கண்ணன் மாய்ந்ததனால் பூவையும் அறுத்தெடுத்தார்!</span><br />
<span style="font-size: x-small;"></span><br />
<span style="font-size: x-small;">சொன்னார் வேதத்தில் கைம்மையென்னும் தரிசுநிலம்</span><br />
<span style="font-size: x-small;">என்னால் தாங்காதே, பகுத்தறிவு தீயினிலே</span><br />
<span style="font-size: x-small;">அன்னார் நூலதனை எரித்தாலும் தணியாது!</span><br />
</span><span style="font-size: x-small;"><br />
<span style="color: #134f5c;"><span style="font-size: x-small;">அன்னாய் தமிழணங்கே உன்சாதி வாழ்வதற்கு</span><br />
<span style="font-size: x-small;">எண்ணாக் கொடுமையெல்லாம் ஏற்றிங்கு நோவெதற்கு</span><br />
<span style="font-size: x-small;">கண்ணாம் இருந்தென்ன கருப்பில் வாழ்வெதற்கு!</span><br />
<span style="font-size: x-small;"></span><br />
<span style="font-size: x-small;">கண்ணால் பார்ப்பதெல்லாம் சாமியென்ற கல்லாகி</span><br />
<span style="font-size: x-small;">புண்ணாம் வருவதற்கு மிதிக்கின்றாய் பெரும் தீயை</span><br />
<span style="font-size: x-small;">தன்னால் அடிமையுறும் கொடுநிலை ஆகாது!</span><br />
<span style="font-size: x-small;"></span><br />
<span style="font-size: x-small;">பெண்ணால் இயலாது வையத்தில் என்றில்லை</span><br />
<span style="font-size: x-small;">சொன்னார் ஒரு நூறு விடுதலை சிந்தனைதான்</span><br />
<span style="font-size: x-small;">முன்னால் தோன்றுதடி முயற்சிதான் இல்லையே!</span></span></span></span></span></span><br />
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;"><span style="font-size: x-small;"><span style="font-size: x-small;"><br />
<span style="color: #134f5c; font-size: x-small;">பெண்ணால் ஆளுகின்ற பெருந்தமிழ் நாடொன்றில்<br />
பொன்னால் முடிசூடி செந்தமிழை அரங்கேற்றும்<br />
நன்நாள் வரும்வரைக்கும் அடிமை நிலை மாறாது!<br />
<br />
கண்ணாம் மொழி நமக்கு காப்பதே வேலையென்று<br />
சொன்னான் தமிழ் புலவன் பாரதிதாசன்தான்<br />
பெண்ணால் வாழுமென்றால் பேரின்பம் அளவேது!<br />
</span></span></span></span></span><br />
<span style="color: red;">எழுதியவர் கௌதம்</span></span>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-62852604239954343252009-09-11T15:31:00.008+10:002009-09-23T10:49:32.534+10:0024 மணிநேர தமிழ் வானொலி<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><span style="font-size: x-small;"><span style="background-color: white;"><span style="color: #0b5394;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span style="color: red;">Australia Tamil Broadcasting Corporation</span> </span>என்ற 24 மணிநேர வானொலி அவுஸ்திரேலியாவில் 9 வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது. </span></span></span><br />
<br />
<span style="background-color: #0b5394; font-size: x-small;"><span style="color: #0b5394;"><span style="background-color: white;">இந்த வானொலியில் பகுதி நேரமாக 75 க்கும் மேற்பட்டவர்கள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி தாமறிந்த கலைகளை தமிழ்மொழியில் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்கள்.</span> </span></span><br />
<br />
<span style="color: #0b5394; font-size: x-small;">அதே வனொலியில் சனிக்கிழமை அவுஸ்திரேலிய நேரம் இரவு 10 மணியிலிருந்து 12.30 மணிவரை நடைபெறும் <span style="color: red;">சிந்தனைச் சிதறல்</span> என்ற நிகழ்ச்சியை கடந்த 8 வருடங்களாக மிக ஆர்வத்தோடு நானும் நடாத்திவருகின்றேன். இந்த நிகழ்ச்சியில் ஓர் குறிப்பிட்ட தலைப்பின்கீழ் கருத்துக்கள் பரிமாறப்படும். நேயர்கள் தமது எண்ணக்கருத்துக்களை தொலைபேசியில் அழைப்பெடுத்து கூறுவார்கள். ஒருமித்த கருத்துக்களும் மாற்றுக்கருத்துக்களுமாக மிகவும் அறிவுபூர்வமாகவும் சுவாரசியமாகவும் இந்த நிகழ்ச்சி இருக்கும். </span><br />
<br />
<span style="font-size: x-small;"><span style="color: #0b5394;">உங்களைப்போன்றே முகம் தெரியாத மனிதர்களுடன் மிகவும் நெருக்கமான ஓர் உறவை இந்த நிகழ்ச்சிமூலம் கடந்த எட்டு வருடங்களாக ஏற்படுத்தி வருகின்றேன். தொடர்ந்து வரும் பதிவுகளில் இந்த நிகழ்ச்சியைப்பற்றி விரிவாக எழுதுகின்றேன்.</span></span> <br />
<span style="color: #0b5394;"></span><br />
<span style="color: #0b5394; font-size: x-small;">இணைய வானொலியாகவும் செயல்படுவதால் நீங்களும் இந்த 24 மணிநேரமும் தமிழ் மொழியைப் பேசும் இந்த வானொலியை கேட்டு மகிழலாம். அதற்குரிய இணையத்தள முகவரியை இதனுடன் இணைத்துள்ளேன். முயற்சி செய்து பாருங்கள். </span><br />
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"><a href="http://www.atbc.net.au/">www.atbc.net.au/</a><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD39h3vqvvTTwAUXKb9VwSDe64WVgJYifgzEGxraBa0z0pN4g8RKtaQepgzgg7Xh65bqCEr-Vt48vGdYXkUjxQBwg8yHtMVgR0398ClQZoAO8pPvsGm5ybU1OiZwW8QU6E-QhhO_Um-zc/s1600-h/new+two.JPG" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" mq="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD39h3vqvvTTwAUXKb9VwSDe64WVgJYifgzEGxraBa0z0pN4g8RKtaQepgzgg7Xh65bqCEr-Vt48vGdYXkUjxQBwg8yHtMVgR0398ClQZoAO8pPvsGm5ybU1OiZwW8QU6E-QhhO_Um-zc/s320/new+two.JPG" /></a><span style="font-size: x-small;"><span style="color: #0b5394;">முடிந்தால் என்னோடு இந்த சனிக்கிழமை இரவு கதையுங்கள். இந்த வாரத்து நிகழ்ச்சிக்கான தலைப்பு <span style="color: red;">தனிமை</span> </span><br />
<br />
</span><span style="color: #274e13; font-size: x-small;">வெற்றி பற்றி வித்தியாசமான ஒரு கருத்து உண்டு அதாவது தந்திரமாக செயல்பட்டால்தான் எதிலும் வெற்றி பெற முடியும் என்பது. இதை ஆங்கிலத்தில் <span style="font-family: Arial, Helvetica, sans-serif;">cunning </span>என்று சொல்வார்கள். இப்படி தந்திரமாக செயல்பட்டு அடைகின்ற வெற்றி ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே சந்தோசத்தைத் தரும் அதுவே நிரந்தர சந்தோசம் ஆகிவிடாது என்பதுதான் உண்மை.<br />
<br />
தந்திரமும், புத்திசாலித்தனமும் ஒன்றுக்கொன்று தொடர்பானது போல் தெரிந்தாலும் இரண்டும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன. தந்திரமாக செயல்படுபவர்கள் அடுத்தவர்களை நம்பமாட்டார்கள். அவர்களுக்கு நட்பென்று யாருமே இருக்கமாட்டார்கள். தான் வெற்றி பெறவேண்டும் தனது எண்ணங்களை எப்பாடுபட்டாவது ஈடேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு காய்களை நகர்த்துவதால் மனிதநேயத்தை மறந்தவர்களாகி அவரைச் சார்ந்திருப்பவர்களை இறுதியில் ஏமாற்றிவிடுவார்கள். <br />
<br />
நேர்மையும் புத்திசாலித்தனமும் உடையவர்கள் எதைச் செய்தாலும் மற்றவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தனது வெற்றியை நோக்கி செல்வார்கள் அப்போதுதான் வெற்றி உண்மையான சந்தோசத்தை அவர்களுக்கு கொடுக்கும். அப்படிப்பட்டவர்களைத்தான் உலகமும் நம்பும். அவர்களால்தான் மற்றவர்கள் மீது அன்பு காட்டமுடியும், மற்றவர்கள்மீது நம்பிக்கை கொள்ளமுடியும்.<br />
<br />
இந்த உலகம் நல்லது என்று நம்புகின்ற ஒருவருக்கு இந்த உலகத்தில் வாழ்கின்ற மக்கள் நல்லவர்கள் என்று நம்புகின்ற ஒருவருக்குத்தான் அவர்கள் சந்திக்கின்ற உலகமும் சந்திக்கின்ற மக்களும் தினம் வாழ்கின்ற வாழ்க்கையும் நல்லதாக அமையும். <br />
<br />
தினம் காலையில் நண்பர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் Good Morning என்று சொல்கிறோமே அதன் அர்த்தம் என்ன? இந்த காலை உனக்கு நல்லதாக மலரட்டும் உனது நாள் இன்று நன்றாக இருக்குமானால் உன்னைப்போன்றே எனது நாளும் நன்றாக இருக்கும் என்கின்ற அர்த்தத்தில்தானே பரஸ்பரம் அங்கே அன்பு பரிமாறிக்கொள்ளப்படுகின்றது. நல்ல மனிதர்களுக்கிடையேயான உறவு என்றும் இனிமையானது அப்படிப்பட்ட அன்பை அனுபவிக்கும் மனசை கொண்டவர்கள் உண்மையிலேயே அதிஸ்டசாலிகள். <br />
<br />
ஒருவன் எடுத்ததுக்கெல்லாம் கோவப்படுவான். அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று ஒரு மகானிடம் கேட்டான். அதற்கு அந்த மகான் சொன்னார் உனக்கு எதிரிகளே இல்லாமல் பார்த்துக் கொள் கோவம் குறைந்துவிடும் என்று. சிலவாரங்கள் கழித்து மீண்டும் அவன் அந்த மகானிடம் வந்தான். அய்யா இப்போது முன்பைவிட எனக்கு அதிகமாக கோபம் வருகிறது. அதை யார் மீதாவது காட்டலாம் என்றால் எதிரிகள் எனக்கு யாருமே இல்லையே என்று சொன்னான்.<br />
<br />
மகான் வியந்து போனார். என்ன சொல்கிறாய் உனக்கு இப்போது எதிரிகள் யாருமே இல்லையா அப்படி என்றால் அவர்களை எல்லாம் உன் நண்பர்களாக மாற்றி விட்டாயா என்று கேட்டார். அதற்கு அவன் பதில் அளிக்கையில் இல்லை என் எதிரிகள் அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டேன் என்றான். இப்படிப்பட்ட மனிதர்களை என்ன செய்வது? <br />
<br />
அன்பிற்கு விரோதம் பாராட்டத் தெரியாது. மற்றவர்களது பிரச்சனைகளை, சந்தோசத்தை தனதாக நினைக்கத் தோன்றும். குடும்ப உறவில் நட்பில் வேலைத்தளங்களில் என்று எப்போதும் உண்மையோடு துணிவோடு தன்னை வெளிப்படுத்தி அவர்களால் அன்பு செலுத்தமுடியும். <br />
<br />
அன்பில்லாத ஒரு மனிதருக்கு எப்படி சந்தோசம் கிட்டும். மற்றவர்களது உணர்வுகளை மதிக்காது, வார்த்தைகளாலும் வன்முறையாலும் துன்புறுத்தும் அன்பற்ற மனிதர்களை எவரும் விரும்பமாட்டார்கள். எவரும் நாடி வராது யாரும் அணுகமுடியாத தூரத்தில் இருக்கின்றபோது அவர்களுக்கு வாழ்க்கையில் சந்தோசம் ஏற்படுமா? நினைப்பது கைகூடுமா? அவர்கள் வாழ்வதுதான் வாழ்க்கையா?<br />
<br />
எதையும் உண்மையாக நேசியுங்கள் எதிர்பார்ப்புகள் இன்றி கட்டுப்பாடுகளின்றி ஒன்றை நேசியுங்கள். காதல் அன்பு நேசம் பாசம் உள்ளவர்கள் கண்களுக்கு மற்றவர்கள் குறைகள் தெரிவதுமில்லை நிறைகள் ஆச்சரியப்படுத்துவதுமில்லை. அதற்காக குட்டக் குட்ட குனிவதிலும் உடன்பாடில்லை. சந்தோசம் என்பது அவரவர் அனுபவிக்கும் சுதந்திரத்தைப் பொறுத்தே உள்ளது. நீங்கள் நேசிப்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு தடை போடாது தள்ளிநின்று ரசித்துப்பாருங்கள் நேசம் இறுதிவரை தொடரும்.<br />
<br />
நாம் நேசிப்பவை எம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்ற பயம் ஒருவரது மனதில் எப்போது ஏற்படுகின்றதோ அப்போதே அவர்களுக்கிடையே உள்ள நேசம் தொலைந்துவிடுகின்றது. சந்தேகம், சங்கடம், சஞ்சலம் என்ற சிக்கல்கள் மனதில் குடிகொள்ள ஆரம்பித்து அவர்களையும் அழித்து மற்றவர்களையும் வேதனைப்படுத்தும். வாழும் காலம் கொஞ்சம்தான் அன்பு செலுத்துங்கள்.</span><br />
</div><span style="font-size: x-small;"></span>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-65270676082489018072009-09-02T15:07:00.016+10:002011-01-21T10:09:23.404+11:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGHY0EDqcbiQ1aSg7KkWYnvhyphenhyphenWVao_oN1fNCUbsClXAMODnGWyCa6pGyiMFyaIEsC-6AN0FOG51nzBsrnS0QHIYAevy7ZVUaztPxC6hlQ4ruNTyhuip2p2utPa4lSber-Q91YqPAGddhk/s1600-h/mother.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" lk="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGHY0EDqcbiQ1aSg7KkWYnvhyphenhyphenWVao_oN1fNCUbsClXAMODnGWyCa6pGyiMFyaIEsC-6AN0FOG51nzBsrnS0QHIYAevy7ZVUaztPxC6hlQ4ruNTyhuip2p2utPa4lSber-Q91YqPAGddhk/s320/mother.jpg" /></a><span style="color: blue;"><span style="background-color: white; color: magenta;">தாய்மடி - சௌந்தரி</span> </span></div><span style="color: blue;"></span><span style="background-color: white; color: blue; font-size: x-small;">தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">சந்தம் சுமந்து வந்த வசந்தமொன்றின்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">நெஞ்சம் அழுகின்ற இந்நேரம்;</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">கொஞ்சம் தலைசாய்ந்து கொள்ள</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்</span><br />
<br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">நிலைமைக்கு மீறிப் பறந்ததுமில்லை</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">நிலை தடுமாறி நின்றதுமில்லை</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">நித்தம் அழுது வளர்ந்ததுமில்லை</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">கனவில் வாழ்ந்து பழக்கமுமில்லை </span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">நானென்ற வேடம் ஏற்றதுமில்லை</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">நானாக நானிருக்க பயந்ததுமில்லை</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">நானென்ற உணர்வில் அழித்ததுமில்லை</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">நான்விட்டு நானிருந்தால் அதில் அர்த்தமில்லை</span><br />
<br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">நிற்காத நினைவுகள் அழுத்துகின்றவேளை</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">நிழலேது நிஐமேது ஏனிந்தத் தேடல்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்</span><br />
<span style="color: blue; font-size: x-small;"></span><span style="font-size: x-small;"><br />
</span><span style="background-color: white; color: blue; font-size: x-small;">உயிரும் உடலும் பிரிந்தபின்பு</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">உருவம் இருப்பதில் என்ன பயன்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">இருவரில் ஒருவராய் </span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">இறுதிவரை முதன்மையாய்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">வந்தவர் தொடுப்பதற்கு </span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">வரவைத்தவர் வளர்த்துவிட்டார் </span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">அந்தரத்தில் ஆடுகின்ற இந்நேரம்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">யாரிடம் சென்றுகேட்பேன் புதுவேதம்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">என் கண்களில் ஏனோ கலக்கம்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">என் நெஞ்சினில் ஏதோ வருத்தம்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">என் கன்னமிரண்டிலும் கண்ணீர்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">இதுவும் கடந்து போகும் </span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">சொல்லிச் சென்ற தந்தையின் தத்துவம்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">சுட்ட தங்கமிதை மிளிரச் செய்யும் - அதுவரை</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்</span><br />
<span style="font-size: x-small;"><br />
<span style="background-color: white; color: blue;"></span></span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">ஒரு பிடி இதயம் இரு பாதியானால்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">எது உன்பாதி அதில் ஏது நீதி</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">கட்டிய கனவு கலைவதுமுண்டு</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">காத்திருந்து கலைப்பவருமுண்டு</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">குறைகளில்லா மனிதரேயில்லை</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">குற்றம் கண்பதால் பலனேதுமில்லை</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">கற்றுக்கொண்டது வாழ்க்கைப்பாடம்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">காலம் சொல்லும் காயத்துக்கு நியாயம் </span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">எத்தனை தடைகள் எப்படி வரினும்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">மனிதனாயிருந்து கடவுளாய் சிந்திக்கும்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">கருணை கொண்ட மனசொன்று வேண்டும்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">உடலென்ற பொறிக்குள் குறையொன்றுமில்லா</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">உணர்வுகள் பொங்கி மகிழ்வூட்ட வேண்டும் - அதுவரை</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்</span><br />
<span style="background-color: white; color: blue; font-size: x-small;">தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்</span><br />
<span style="background-color: white; color: blue;"></span></div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-18474933952202556582009-08-28T12:03:00.000+10:002009-08-28T12:03:18.490+10:00<span style="color: magenta;">மீண்டும் சௌந்தரி</span><br />
<br />
<br />
<div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiJ79gAbjkUQurTFkVwkPdEM_i5hrm1wfHegq7_ruU3uKIJoRXkXNOCn_7PSKW-52wo2VMAWb1gwLCQQB2HObfQwslKKaUFcTLsY3ztMuQQQzokHJ6Qlapig4U9LQmREdo_e-fH3kjOEQ/s1600-h/friend.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" lk="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiJ79gAbjkUQurTFkVwkPdEM_i5hrm1wfHegq7_ruU3uKIJoRXkXNOCn_7PSKW-52wo2VMAWb1gwLCQQB2HObfQwslKKaUFcTLsY3ztMuQQQzokHJ6Qlapig4U9LQmREdo_e-fH3kjOEQ/s320/friend.jpg" /></a></div>நட்பு வட்டடத்தை தொலைத்துவிட்டு தேடுவதென்பது சுலபமானதல்ல. தேடல் உள்ளவரை உயிர் வாழ்தலின் அவசியமும் தொடரும் என்பது உண்மையென்றால் என் தேடலும் தொடரும்.<br />
<br />
எதைத் தேடுகின்றேன் எதைத் தொலைத்தேன் என்பது தெரியவில்லை ஆனாலும் ஏதோ ஒன்றைத் தேடுகின்றேன் என்பது மட்டும் புரிகின்றது. <br />
<br />
அனுபவத்தின் நினைவுகள் யாவும் எப்போதும் சுமூகமாக ,ருப்பதில்லை அதற்கு நானும் விதிவிலக்கல்ல.<br />
<br />
உடலை எரித்தோ புதைத்தோ விடலாம் ஆனால் மனசையும் அதில் அடங்கியுள்ள காயங்களையும் அதற்குள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் ரகசியங்களையும் என்ன செய்யமுடியும். <br />
<br />
ஆனாலும் வாழ்தலை நிச்சயித்து தேடலை ஆரம்பிப்பதுதானே யதார்த்தம். தேடியதை அடைந்தவர்கள் உண்டோ என்ற கேள்வி இருப்பினும் மீண்டும் என் எழுத்துக்களுடன் சங்கமம் <br />
<br />
முகம் தெரியாத உறவுகளுடன் உருவாகும் நட்புவட்டம் இனிமையானது, நிஐத்தில் காணமுடியாத ஆத்மார்த்தமான அன்பின் பெருமையை கற்பனையில் உருவாக்கித்தரும் உறவுகள் இனிமையானவை.<br />
<br />
வாழ்க்கையில் எத்தனை துன்பங்களைச் சந்தித்ததாலும் நிலைகுலையாத நட்பைக் காணமுடியுமா? இதை நிஐவாழ்க்கையில் நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்களா? எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட நல்ல நட்பை அனுபவித்ததுண்டா? <br />
<br />
தொடர்ந்து எழுதும்வரை…………BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-74988567266113910152009-03-09T11:07:00.011+11:002009-03-09T13:53:38.144+11:00ஈர்ப்பு<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqKWhNSKq-fTR13sUfCYGLEiiuS6-ptmKK6s2OmIIBur4yGJGkRJqqKSDSeNP5f_EwMyvvphyphenhyphenuiAS0n-fbyc3R8_9y66adK8nDTePvHE6kZ8WDewbidFQqUk469cTR5C28OVRJPTPQgpU/s1600-h/kathal.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5310973160208586274" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 223px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqKWhNSKq-fTR13sUfCYGLEiiuS6-ptmKK6s2OmIIBur4yGJGkRJqqKSDSeNP5f_EwMyvvphyphenhyphenuiAS0n-fbyc3R8_9y66adK8nDTePvHE6kZ8WDewbidFQqUk469cTR5C28OVRJPTPQgpU/s320/kathal.JPG" border="0" /></a><br /><span style="font-size:85%;"><span class=""></span></span><br /><span style="font-size:85%;">இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்ற உணர்வினால் ஈர்க்கப்படும்போது ஏற்படுகின்ற ஓர் இறுக்கமான பிணைப்புத்தான் காதல். </span><br /><span style="font-size:85%;"><span class=""></span></span><br /><span style="font-size:85%;">எதிர்பார்ப்புகளின்றி ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொண்டு, ஒருவர் நலனில் மற்றவர் அக்கறைகாட்டி, கண்கள் கசியும் வேளையில் அன்புடன் ஆறுதலாக ஓர் வார்த்தை சொன்னாலே போதும் அங்கே காதல் நிறைந்திருக்கும்.<br /><br /></span><span style="font-size:85%;">அன்பின் ஆக்கிரமிப்பை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும் அந்த உறவினால் கிட்டும் இன்பம் வார்த்தைகளுக்குள் அடங்காது.<br /></span><span style="font-size:85%;"><span class=""></span></span><br /><span style="font-size:85%;">தொடரும் ஈர்ப்பு என்னும் கவிதை என்மனதில் தோன்றிய ஓர் அன்பின் வெளிப்பாடு. ஒரு வருடத்திற்கு முன்பு ஊடறு என்ற பெண்களுக்கான இணையத்தளத்தில் இந்தக் கவிதை பதியப்பட்டது. <a href="http://udaru.blogdrive.com/archive/569.html">http://udaru.blogdrive.com/archive/569.html</a><br /><br />இதயவாசலுக்குள் வரமாக நுழைந்த ஓர் உறவின் உண்மையான உருவகம்தான் ஈர்ப்பு என்ற இந்தக் கவிதை.<br /><br /><span style="color:#cc0000;">தனிநிகரான உன் உலகத்தில்<br />துணிவாக தடம் பதித்தேன்<br />அந்நியமான என் கண்களுக்கு<br />ஆச்சரியமான பல தோற்றங்கள்<br />ஈர்த்துக் கொண்டேன் - நீ<br />விரும்பியும் விரும்பாமலும்<br />சேர்த்துவைத்த பெரும் ஊதியத்தை<br /><br />உன் நிகரற்ற மண்டலத்தில்<br />ஆர்வமிக்க மாணவி நான்<br />சீர்ப்படாத தொடர் வரலாற்றில்<br />வியப்பான நாகரீகப்படிவம் நீ<br />உன் சிந்தனையின் ஆழத்தை<br />உற்றுநோக்கி பதிவுசெய்தேன்<br />திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டேன்<br />முன்பே உனதாக்கிக் கொள்ளென்று<br /><br />உன் மனமாற்றப் படிநிலையின்<br />நிழல்வெளியில் எனக்குள் பலமாற்றம்<br />நகைப்பொலியில் முகமலர்வேன்<br />ஊற்றெடுக்கும் நீர்த்துளியில்<br />உடையாமல் போட்டியிட்டு<br />உள்ளத்தால் முதிர்வடைந்தேன்<br />என் தொலைத்தோற்ற மனக்காட்டி<br />உள்முகம் நோக்கி சொன்னது<br />உன்விலை என்னவென்று<br /><br />நீ அடிக்கடி மிதிபட்ட பாதையில்<br />முடிவெச்ச வடிவமானேன்<br />உன் கரையற்ற நீர்வரைவில்<br />காற்றோடு கரையேறும் படகானேன்<br />நீ இடைவிடாது செதுக்கிய<br />பாறைவெடிப்பு இடைவெளியில்<br />ஊடுருவி தேடிக்கண்டேன்<br />பசும்புல்தரை கொண்ட<br />சுரங்க வழிப்பாதையொன்றை<br />அளவுகோல் வைத்து<br />அளக்கமுடியாத எல்லைபோலும்<br />அமைதியாக செல்கின்றேன்<br />அமிழ்வுக்குப் பின்னாலும்<br />மிதந்துவரும் மிதவையாகி<br /></span><strong><span style="color:#000000;"><span class=""></span></span></strong></span><br /><span style="font-size:85%;"><strong><span style="color:#000000;">சௌந்தரி (அவுஸ்ரேலியா)</span></strong><br /><span style="color:#000000;"><strong>jan 2008 </strong></span></span>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-19411667327322713262009-03-01T23:41:00.011+11:002009-03-02T08:02:09.074+11:00குடும்பம் என்கிற ஸ்தாபனம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSySASremn5rw0Wr0VmdlAIFrlINDLuhJ6G5pygEs-kL5I1vZGKv-XHxn7KizIaxcuZDmXapKFg_Yc2nENg2o4XNAjYd1bxxRb5YQ9JyuZ2IvdtUVSzsMwxd-ghbhu0sTYNmqWgmK3v5U/s1600-h/Indian%2520Wedding%2520SH02-0219.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5308205713297770514" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 280px; CURSOR: hand; HEIGHT: 280px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSySASremn5rw0Wr0VmdlAIFrlINDLuhJ6G5pygEs-kL5I1vZGKv-XHxn7KizIaxcuZDmXapKFg_Yc2nENg2o4XNAjYd1bxxRb5YQ9JyuZ2IvdtUVSzsMwxd-ghbhu0sTYNmqWgmK3v5U/s320/Indian%2520Wedding%2520SH02-0219.jpg" border="0" /></a><span style="font-size:85%;">வார இறுதி இன்று ஏதாவது எழுதினால்தான் உண்டு பின்பு நேரம் கிடைப்பதென்பது மிகவும் கடினம். எதை எழுதலாம் என்று யோசித்தபோது நான் விரும்பித் திரும்பவும் பார்த்த திரைப்படம் ‘புறவோக்ட் - Provoked' ஞாபகத்திற்கு வந்தது. அதைப் பற்றியே எழுதலாம் என்று யோசித்தேன். </span><div><br /><p><span style="font-size:85%;">ஒரு பக்கசார்பாக இந்தக் கட்டுரை அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமெடுத்து எழுதியுள்ளேன்</span><span style="font-size:85%;">. விதிகளும் விதிவிலக்குகளும் எதிலும் இருப்பதால் எந்த ஓர் செயலையும் பொதுமைப்படுத்தி நியாயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இருப்பினும் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் தாரளாமாக இட்டுச்செல்லலாம். கருத்துக்களுடன் மோதுவது ஆரோக்கியமானதும் ஆக்கபூர்வமானதும் ஆகும். </span><br /></p><p><span style="font-size:85%;">1989 ம் ஆண்டு லண்டனில் குடும்பவன்முறையின் உச்சத்தை எட்டிய பெண் ஒருத்தி தூங்கிக் கொண்டிருந்த தனது கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஒன்று உண்டு. </span><br /></p><p><span style="font-size:85%;">பஞ்சாபிப் பெண்ணான கிரண் என்பவரை லண்டனில் வசிக்கும் தீபக்கிற்கு பெற்றோர்கள் பேசி மணம் முடித்தனர். லண்டனில் தொடங்கிய கிரணின் மணவாழ்க்கை அவளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவளது கணவன் தீபக் ஓர் மனநோயாளியைப்போல் செயல்பட்டான். தினம் கிரணை துன்புறுத்தினான். வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது, யாருடனும் கதைக்கக்கூடாது, சந்தேகத்தின்பேரில் அடி உதை, குடித்துவிட்டு வந்து இரவில் கொடுமை, பெண்களின் சகவாசம் இப்படியாக எண்ணற்ற சித்திரவதைகளுக்கு உட்பட்டாள் கிரண். </span><br /></p><p><span style="font-size:85%;">கல்லானாலும் கணவன் என்பதற்கமைய இயல்பாகவே மென்மையான குணம் கொண்ட கிரண் <span class="">எல்லாவ</span>ற்றையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருநாள் இரவு பொறுமையின் எல்லையைக் கடந்தநிலைக்கு தள்ளப்பட்டாள். அதனால் குடித்துவிட்டு வந்து படுத்திருந்த தனது கணவன்மீது பெற்றோலை ஊற்றி அவனை எரித்துக் கொன்றாள். </span><br /></p><p><span style="font-size:85%;">கொலைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கிரணின் வழக்கை ஆசிய பெண்கள் உரிமைக்காக போராடும் அமைப்பு ஒன்று முன்னெடுத்து நடாத்தியது. தற்பாதுகாப்புக்காகவே கிரண் அந்த முடிவை எடுத்தாள் என்று தீர்ப்புக்கூறி 1992 ல் கிரணை லண்டன் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இன்றும் எல்லோராலும் பேசப்படுகின்றது. </span><br /><span style="font-size:85%;"><span class="">இந்த</span> உண்மைக்கதையை தழுவி ஐஸ்வர்யாராய் நடித்த ‘புறவோக்ட’ என்ற ஆங்கிலப்படம் திரைக்கும் வந்தது.</span></p><p><span style="font-size:85%;"><span class="">இதுபோன்ற</span> வன்முறைகள் எந்தவோர் பெண்ணின் வாழ்க்கையிலும் ஏற்படலாம். இந்த நிலையை தினம்தினம் செய்தித்தாளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இது போன்ற சுழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு வாழ்வை தொலைக்காமல் தற்பாதுகாத்துக் கொள்ளும் மாற்றுவழிகளை அறிந்து வைத்திருத்தல் நன்மையைத்தரும்.</span></p><p><span style="font-size:85%;"><span class="">பிரச்சனைகளை</span> நண்பர்களோடு பகிர்தல், பெற்றோர்களிடம் முறையிடுதல், மனநல சிகிச்சைகளின் உதவியை நாடுதல், எல்லையை மீறும் தருணத்தில் காவல் நிலைய உதவியை நாடுதல், எதுவுமே சரிவரவில்லையென்றால் விவாகரத்து இப்படியாக பலவழிகளில் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கொள்ள வாய்ப்புண்டு. </span><br /></p><p><span style="font-size:85%;">பாவம் கிரணுக்கு இவை எதுவுமே கைகொடுக்கவில்லை. எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்த கிரண் முடிவை தன்கையில் எடுத்துக்கொண்டாள். </span><span style="font-size:85%;">‘என் கணவரின் வன்முறையைத் தடுப்பதற்கு எனக்கு வேறுவழி தெரியவில்லை, அவரை கொல்ல வேண்டும் என்று நான் நினைத்ததில்லை’ என்று கிரணின் சுயகதையை வெளியிட்ட <span style="font-family:arial;">Provoked – The Story of Kiranjit Ahluwalia என்ற புத்தகத்தில் அவர் சொல்லியுள்ளார்.<br /><br />சிறையில் இருந்து விடுதலையானபின் கிரண் லண்டன் தபால் சேவை திணைக்களத்தில் முழுநேர ஊழியராக பணிபுரிந்தவாறு சமூகசேவை மற்றும் பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் ஸ்தாபனங்களிலும் பகுதிநேரமாக பணிபுரிகின்றார். எனது நண்பரும் கிரணும் ஒரே வேலைத்தளத்தில் ஒன்றாக பணிபுரிகின்றார்கள் என்றவுடன் கிரணின் கையெழுத்திட்ட மேற்கூறிய புத்தகம் ஒன்றை கிரணிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டேன். அவரைப்பற்றிய மேலதிக செய்திகளையும் நண்பர் மூலம் அறியமுடிந்தது. 52 வயதைக் கடந்த கிரண் இப்போது தனது வாழ்வை நிறைவாகவும் உண்மையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நல்ல செய்தி சந்தோசமாகவிருந்தது.<br /><br />2002 ம் ஆண்டு குடும்ப வன்முறைக்கு எதிராக போராடும் பெண்களுக்கென்று வழங்கப்படும் ஓர் உயரிய விருது லண்டன் அரசினால் கிரணுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. </span></span></p><p><span style="font-size:85%;"><span style="font-family:arial;">கிரணைப்போன்று பல பெண்கள் இப்படிப்பட்ட சித்திரவதைகளை அனுபவிக்கின்றார்கள். வீட்டுப்பிரச்சனையை வீடுதாண்டி வெளியே கொண்டுபோவது குடும்ப கௌரவத்தை பாதிக்கும் என்ற மன இயல்பில் வீட்டுக்குள்ளேயே வெந்து போகின்றார்கள். சிலர் தைரியத்தோடு வெளியேவந்தால் அவர்கள்மீது சமூகம் காட்டும் எதிர்வினை அதைவிட கொடுமையானது. குடும்ப வன்முறையிலிருந்து தப்பித்து சமூக வன்முறைக்குள் பெண் சிக்கிக்கொள்ளும் நிலைப்பாடுதான் அதிகம்.<br /><br />பெண்களை உடல் மனரீதியாக துன்புறுத்தல், மோசமான வார்த்தைகளால் திட்டுதல், பாலியல் வன்முறை, பொருளாதார ரீதியில் கொடுமைப்படுத்தல் இவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்கள். சட்டமும் தண்டனையும் சிலரை பயம் என்ற பிடிக்குள் கட்டிப்போட்டாலும் காலம் காலமாக வேரூன்றிய ஆணாதிக்க மனோபாவத்தை இந்த சட்டங்களும் தண்டனைகளும் முற்றாக அழித்துவிடமுடியாது. தண்டனையையும் சட்டங்களையும் மீறி பெண்கள் குடும்பவன்முறைக்கு ஆளாகின்றனர். தண்டனையும் சட்டங்களும் இருப்பதனால் வன்முறைகள் முற்றுப்பெற்றுவிடும் என்பது உண்மையல்ல.<br /><br />பெண்கள் மீதான குடும்ப வன்முறைக்கு நாடு மதம் இனம் மொழி என்ற எல்லைகள் கிடையாது. உலகளாவிய அளவில் குடும்ப வன்முறைகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. இதனால் பல பெண்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். அவர்களது உணர்வுகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்த அவர்களுக்காக எந்தவோர் கதவும் திறந்திருக்கவில்லை.<br /><br />எவ்வளவுதான் நேசித்தாலும் புரிந்து வைத்திருந்தாலும் ஆணாதிக்க எண்ணங்கள் அதிகாரங்கள் என்பவை சந்தர்ப்பங்களில் வெளிவந்துவிடுகின்றன. அப்போது அவர்களது மனவோட்டம் எந்த திசையை நோக்கி எப்படிச் செல்லும் என்பதை கணித்துவிடமுடியாது. அன்பினால் எதையும் சாதித்துவிடமுடியும் என்பதைக்கூட பொய்ப்பித்துவிடும் சிலரது செயல்கள். </span></span></p><p><span style="font-size:85%;"><span style="font-family:arial;">காதல், திருமணம், குடும்பம் என்ற வட்டத்திற்குள் அன்பும் கருணையும் புரிதலும்தான் முக்கியமானவை என்று கூற்று நன்றாக இருந்தாலும் யதார்த்தத்தில் ஆழமான இந்த மனித உறவுகள் சந்திக்கின்ற நெருக்கடிகளும் சங்கடங்களும் ஏராளம். </span></span></p><p><span style="font-size:85%;"><span style="font-family:arial;">இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை வேறோர் பரிணாமத்தை சுட்டிக்காட்டுகிறது. வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கு சிறிய வெளிகூட அங்கு இருப்பதில்லை. மற்றய உறவினர்களும் வன்முறையை பொறுத்துக்கொண்டு வாழும்படிதான் அறிவுரை கூறுவார்கள். இதனால் வேறுவழி தெரியாமல் அவர்கள் தற்கொலை என்ற முடிவுக்கு வருகின்றார்கள். தமது முடிவை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தேர்வு செய்யும் வழிமுறைகளும் அவற்றை மனஉறுதியோடு நிறைவேற்றும் விதமும் மனதை உறையச் செய்யும் விதமாகவே இருக்கின்றன.<br /><br />பெண்களைப் பாதுகாக்க முடியாத ஒரு சமூகத்தின் அழிவு வெளிப்படையானது. மணவாழ்க்கையின் மூலம் உருவான குடும்பம் என்கிற ஸ்தாபனம் யாருமே குறுக்கிடமுடியாத எல்லைகளற்ற ஆண்களின் அதிகாரபீடமாக மாறிவிடும் ஒரு சமூகத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவதும் பின்பு சமாதானமடைவதும் சாதாரணவிடயமாக மாறிவிட்டது. </span></p></div></span>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-6320673816371830812009-02-20T10:15:00.010+11:002009-02-23T23:30:03.356+11:00வழக்கொழிந்த தமிழ் சொற்கள்<span style="font-size:85%;">வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற தொடர்பதிவில் என்னையும் இணைத்துக்கொண்ட நண்பன் ராகவனுக்கு முதலில் நன்றி. எதை எப்படிப் பதியலாம் என்ற சிந்தனைக்குள் நுழைந்தபோது இரு தினங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருடன் சிலநிமிடங்கள் பேசியவை நினைவில் வந்தன. அந்த சில நிமிடங்கள் இப்படி பயனுள்ளதாக மாறியதை நினைக்கும் போது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருகின்றது. அவற்றுடன் எனது எண்ணங்களில் உதித்தவற்றையும் இணைத்து ஓர் சிறு பதிவாக இடுகின்றேன். </span><br /><br /><span style="font-size:85%;">மொழியை எழுதுவதிலோ அல்லது பேசுவதிலோ தவறு,பிழை,தப்பு,குற்றம் என்றெல்லாம் யோசிக்கவேண்டியது அவசியமில்லை. நான் சொல்வது உங்களுக்கும் நீங்கள் சொல்வது எனக்கும் புரிய வேண்டும் அதற்கான கருவியாக மொழியின் பயனை பாவிக்கவேண்டும் என்பது எனது சிறிய கருத்து.<br /><br /><span style="color:#00cccc;"><span style="color:#006600;">''யாதும் ஊரே யாவரும் கேளிர்''</span> </span>என்ற கணியன் பூங்குன்றனின் பாட்டை முதலில் எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்தப்பாட்டிற்கு பொருள் “எல்லாம் நம் ஊரே யாவரும் நம் உறவினரே” என்பது. இதில் <span style="color:#ff0000;">கேளிர்</span> என்பது <span style="color:#ff0000;">உறவினர்</span> என்ற பொருளையே குறிக்கிறது. ஆனால் பொதுவாக எல்லோரும் கேளிர் என்பதை கேளீர் என்று நீட்டி எல்லோரும் கேளுங்கள் என்ற பொருள்பட கூறிக்கொள்கிறார்கள். கேளீர் என்று சொல்வதால் சொல்லவந்ததன் கருத்தே மாறிவிடுகின்றது. இதில் இன்னுமோர் விடயம் என்னவென்றல் <span style="color:#000066;">கணவனை ‘கேள்வன்’</span> என்றும் குறிப்பிடுவதுண்டாம். கேளிர் என்ற சொல்லில் இருந்துதான் கேள்வன் வந்திருக்கலாம்.<br /><br /><span style="color:#006600;">''குட்டு வெளிப்பட்டுவிட்டது''</span> பார்த்தீர்களா? இங்கு <span style="color:#ff0000;">குட்டு</span> என்ற சொல் <span style="color:#ff0000;">ரகசியம்</span> என்ற பொருளைத் தருகிறது. ஒவ்வாருவர் வாழ்க்கையிலும் ஏதாவது குட்டு இருக்கத்தான் செய்யும. அதனால்தான் மோதல் வரும்போது குட்டை உடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் நல்ல காலம் குட்டு என்ற சொல் பயன்பாட்டில் குறைந்துவிட்டது.<br /><br />அதே நேரத்தில் <span style="color:#ff0000;">குட்டம்</span> என்றால் <span style="color:#ff0000;">பள்ளம்</span> அல்லது <span style="color:#ff0000;">ஆழம்</span> என்ற பொருளைக் குறிக்கும். <span style="color:#006600;">''குளம்குட்டை''</span> என்ற சொற்தொடரில் குட்டை என்பது சிறு பள்ளத்தை குறிக்கின்றது. சின்னவயசில் அப்பா தலையுச்சியில் குட்டியது ஞாபகம் இருக்கின்றதா? தலையில் பள்ளம் வருவதுபோல் கைமுட்டியால் அழுத்திக் குட்டுவதால் குட்டுதல் என்று வந்திருக்கும். குட்டம் என்ற சொல்லும் மருகிவிட்டது.<br /><br /><span style="color:#ff0000;">முகத்தல்</span> என்பது தண்ணீரை வாளியில் <span style="color:#ff0000;">நிரப்பி எடுத்தல்</span>. <span style="color:#000066;">முகவை</span> என்பது நீர் இறைக்கும் <span class=""><span style="color:#000066;">வாளி</span>யைக்</span> குறிக்கும். முகத்தல் என்பதுதான் பின்பு பேச்சுவாக்கில் மோந்து கொண்டு வா என்று மாறிவிட்டது. முகத்தல் முகவை போன்ற சொற்களும் பாவனையில் இருந்து மறைந்து கொண்டு போகின்றன.<br /><br /><span style="color:#003300;">''துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்<br />துப்பாய தூஉம் மழை''</span><br /><br />இதன் பொருள் உண்பவருக்கு உண்பதற்குரியனவாகிய உணவுகளை உள்வாங்கி அவ்வாறு உண்பவருக்குத் தானும் உணவாவது மழையேயாகும். இது நீரின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.<br /><br />இந்தக் குறளில் வரும் <span style="color:#ff0000;">துப்பு</span> என்ற சொல் <span style="color:#ff0000;">உணவு </span>என்ற பொருளை குறிக்கிறது. இதில் துப்பு என்ற சொல் ஐந்துமுறை திரும்ப வருகிறது. ஆனால் யாரும் நான் துப்பு உண்ணப் போகின்றேன் என்று கூறுவதில்லை.<br /><br />ஆனால் <span style="color:#006600;">''துப்புக் கெட்டவன்''</span> என்று திட்டுகிறோம். அவ்வாறு ஒருவரைத் திட்டும்போது ஒரு வேளை சாப்பாட்டுக்குக்கூட வழியற்றவன் என்றே பொருள். அதை உணர்ந்துதான் திட்டுகின்றோமா என்பது கேள்விக்குறிதான்?<br /><br />அதேவேளை துப்பு என்ற சொல் பலபொருள் கொண்டதாகவும் உள்ளது. <span style="color:#000066;">''துப்புத் துலக்குதல்'' </span>அல்லது <span style="color:#000066;">''துப்பறிதல்''</span> என்பதில் வருகின்ற துப்பு ஒரு செயல் நடந்துவிட்டால் அது பற்றிய விபரங்களை <span style="color:#000066;">ஆராய்ந்து கண்டுபிடித்தல்</span> என்ற பொருள்பட வருகின்றது. அதேபோல் <span style="color:#993399;">துப்புதல்</span> என்ற சொல்லில் வரும் துப்பு வேறோர் பொருளை கொண்டுள்ளது. எச்சிலை கண்ட இடத்தில் <span style="color:#993399;">துப்புவது</span> அல்லது ஒரு பொருளைக் கடித்து துப்புவது. இந்தத் துப்பு இப்போதும் பாவனையில் உள்ளது.<br /><br />சரி உங்களுக்கு வயது என்ன? இவ்வாறு கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? 20 வயதாகிறது அல்லது 30 ஆண்டுகள் ஆகின்றன அல்லது அந்தப் பெரியவருக்கு 60 அகவையாகின்றது என்றுதானே?<br /><br />ஆக <span class=""><span style="color:#ff0000;">வயது</span>க்கு</span> இன்னுமொரு பொருள் <span style="color:#ff0000;">அகவை</span>. அகவை என்பது பொதுவாக குறைந்த அளவுதான் பாவனையில் உள்ளது. ஆனால் ஈழத்தில் ஓரளவு பாவிக்கப் படுகின்றது. அதே போல் வயசு, வயது இரண்டும் ஒன்றுதானோ?<br /><br /><span style="color:#006600;">"வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை"</span> என்றோர் பாடலும்; <span style="color:#006600;">"நினைத்தேன் வந்தாய் நூறு வயசு"</span> என்றோர் பாடலும் இருக்கின்றது அல்லவா? இதிலிருந்து வயது வயசு இரண்டும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வருவோமே.<br /><br /><span style="color:#006600;">"கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு"</span> இதில் கறுப்பு என்பது நிறத்தைக் குறிக்கும். அப்போ கருப்பு என்பது என்ன? கருமை, கரிய, கார்குழலி என்ற சொல்லில் வரும் கார் என்பன நிறத்தைத்தானே குறிக்கின்றன. கருப்பண்ணைசாமி என்ற சாமி கையில் அரிவாளுடன் நிற்கும் காட்சி கடும்கோபத்தைத்தான் குறிக்கிறது. ஆகவே <span style="color:#ff0000;">கருப்பு</span> என்பதற்கு <span style="color:#ff0000;">கோவம்</span> என்ற பொருளும் வருகின்றது. கறுப்பு என்பது நிறத்தை மட்டுமே குறிக்கிறது ஆனால் கருப்பு என்பதற்கு வேறு பொருள்களும் உண்டு.<br /><br />சரி <span style="color:#006600;">"மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்"</span> என்ற திரைப்படப்பாடலில் வரும் மெல்ல என்ற சொல்லுக்கும் <span style="color:#006600;">"மெள்ள வா"</span> என்ற தொடரில் வரும் மெள்ள என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம். மெல்ல நட என்றால் மென்மையான நடையைக் குறிப்பது போலவும் அல்லது மெல்லப்பேசு என்பது மென்மையாகப் பேசு என்பதையும் குறிக்கின்றது. ஆக மெல்ல என்பது மென்மை என்ற பொருளை உணர்த்துகிறது ஆனால் மெள்ள வா என்றால் ஆறுதலாக வா என்று தானே பொருள் படுகிறது. எல்லாமே குழப்பமாக இருகின்றது. மெல்ல மெள்ள இரண்டும் ஒன்றுதானோ?<br /><br />சும்மா வாசித்து விட்டு போகாதீர்கள். தரவுகளைவிட குழப்பங்கள்தான் அதிகமாக இருக்கும். உங்கள் கருத்துக்கள் எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மிக முக்கியமானதும் அவசியமானதும்கூட.<br /><br />இன்னுமோர்விடயம் என்னவென்றால் சில ஆங்கிலச்சொற்கள் எங்கள் மனதில் தமிழ் சொற்களாக பதித்துவிட்டது. உதாரணத்துக்கு கோர்ட் - நீதிமன்றம்; பொலிஸ் - காவல்துறை பாங்க் - வங்கி; போட்டோ – நிழல்படம் இப்படி இன்னும்பல பாவனையில் இருந்து நீங்கிவிட்டன.<br /><br />சரி இதற்குமேலும் குழப்பாமல் வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற பதிவுத் தொடரை தொடர்வதற்கு புதியவர்களை அறிமுகப்படுத்தவேண்டாமா?<br /><br /><span style="color:#000099;"><strong>சக்(ங்)கடத்தார்</strong>:</span> <a href="http://sakkadaththar.blogspot.com/"><span style="color:#ff0000;"><strong>http://sakkadaththar.blogspot.com/</strong></span></a></span><span style="color:#ff0000;"><strong> </strong></span><br /><span style="font-size:85%;">புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மகன். பலதும் பத்தும் எழுதக்கூடிய ஆற்றல் உள்ளவர். தொடர்ச்சியாக தாய்நிலத்தின் சோகங்களை எழுதிக்கொண்டிருப்பதால் ஓர் மாற்றத்திற்கு இத்தொடரையும் தொடரும்படி கேட்போம்<br /><br /><span style="color:#000099;"><strong>நட்புடன் ஐமால்:</strong></span> <a href="http://adiraijamal.blogspot.com/"><span style="color:#ff0000;"><strong>http://adiraijamal.blogspot.com/</strong></span></a></span><br /><span style="font-size:85%;">கணனிபற்றி கலக்கிக் கொண்டிருக்கும் ஐமாலை இந்தத் தொடருக்காக கொஞ்சநேரம் செலவிடும்படி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே<br /></span><br /><span style="font-size:85%;"><strong><span style="color:#000099;">ரசிகா:</span></strong> <a href="http://rasigarasigan.blogspot.com/"><span style="color:#ff0000;"><strong>http://rasigarasigan.blogspot.com/</strong></span></a></span><span style="color:#ff0000;"><strong> </strong></span><br /><span style="font-size:85%;">இவர் என்பதிவுக்கு புதுவரவு அவரை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவது ஓர் கடமையாகின்றது. </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இவர்கள் இன்னும் பல நண்பர்களை அறிமுகப் படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இத் தொடர் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைவு செய்கின்றேன். </span>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-80929025516804854132009-02-12T13:18:00.017+11:002009-02-13T08:57:13.908+11:00காட்டுத்தீ<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2z6xug17LN2HBCX2NfSAYmRM4BgbqtDl_JH8YUjo2zAS7BK1maxgN7RrFDzwhCVZ5Vpl9Z8TfPy1iisRAHU3EAkyzERK6CJveZ7ecKBE-jUGKwpGXhhM1o-FcuE7fX9OnMIZPC91lzQM/s1600-h/Australian-firefighters-t-001.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5302029059763331490" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 192px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2z6xug17LN2HBCX2NfSAYmRM4BgbqtDl_JH8YUjo2zAS7BK1maxgN7RrFDzwhCVZ5Vpl9Z8TfPy1iisRAHU3EAkyzERK6CJveZ7ecKBE-jUGKwpGXhhM1o-FcuE7fX9OnMIZPC91lzQM/s320/Australian-firefighters-t-001.jpg" border="0" /></a> <span style="font-size:85%;">தாயகத்தில் அல்லலுறும் உறவுகளின் வேதனையில் இயங்கிக் கொண்டிருக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும், வாழவைத்துக் கொண்டிருக்கும் நாட்டில் ஏற்பட்ட அவலம் இந்த கட்டுரையை எழுதவைத்தது.<br /><br />ஆஸ்திரேலியாவில் வெப்ப காலத்தில் பொதுவாக ஏதாவது ஒரு மூலையில் காடுகள் பற்றி எரிவதுண்டு. அப்போதெல்லாம் அத்தீயை அணைப்பதற்கு அரசாங்கம் பலகோடி டொலர்கள் செலவு செய்வதும் அடுத்த வருடமாவது காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டவரவேண்டும் என்று புதிய உத்திகளை அறிவிப்பதும் வழமையான ஓர் விடயம். ஆனால் இந்த வருடம் ஏற்பட்ட காட்டுத்தீ உலகநாடுகளையே ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பவைத்துள்ளது.<br /><br />மூர்க்கமான காட்டுத் தீயினால் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் உயிர் மற்றும் உடமைகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை விக்டோரியா மாநிலத்தில் பரவிய காட்டுத்தீயால் 180 க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். கடந்த 100 வருடங்களில் இதுபோன்றதோர் கோரமான காட்டுத்தீ இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.<br /></span><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5301730734572121682" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 351px; CURSOR: hand; HEIGHT: 235px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivDFfGgfL0t-ij6lw3zt6TZOB0ZwGvpFqMcFr2gP_AFXW5SYiRRegJZT1mkbjNlWIJQv-n_mP6WzL9HyCA5cabMbNOmQSLDzgQZsjnMDsN-LdBiBe7UdSD1QLtfxHRHZlkGqPPjpC4ayQ/s320/fire13__5__gallery__600x392.jpg" border="0" /></span> <span style="font-size:85%;"><span class="">பாதிக்கப்பட்டவர்களுக்கு</span> எல்லாப் பக்கத்திலும் இருந்து மக்களும் அனைத்து அமைப்புகளும் போட்டிபோட்டு உதவியவண்ணம் இருக்கிறார்கள். வேலைத்தளங்களில், ஒன்றுகூடும் இடங்களில், விளையாட்டரங்குளில், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் என்று எங்குபார்த்தாலும் உதவித்தெகையை மனம்விரும்பி கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். விக்ரோறிய அரசு 10 மில்லியன் டாலர்களை புணரமைப்பு தொகையாக அறிவித்திருக்கும் வேளையில் றெட் குறொஸ் (Red Cross) ஊடாக 31 மில்லியன் டொலர்களை பொதுமக்கள் உதவிப்பணமாக கொடுத்துள்ளார்கள் அதைவிட வேறு பல அமைப்புகள் சேர்ந்து 20 மில்லியன் டொலர்களுக்கு மேலாக உதவியிருக்கின்றார்கள்.<br /><br />இத்துடன் நின்றுவிடவில்லை ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பெரிய பலசரக்கு வர்த்தக ஸ்பானங்களும் குறிப்பாக Woolworth, Coles போன்றவை 13ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் விற்பனையின்மூலம் பெற்றுக்கொள்ளும் லாபம் அத்தனையையும் காட்டுத்தீயினால் பாதிப்படைந்தவர்களுக்கு கொடுக்கபோவதாக பேப்பர், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக அறிவித்தவண்ணம் இருக்கிறார்கள்.தமது நாட்டு மக்களின் துன்பத்தில் பங்குகொள்ளும் ஆஸ்திரேலிய மக்களின் ஆர்வத்தை பார்க்கும்போது சிலிர்கின்றது.<br />தாயகத்தில் அல்லலுறும் தமது சக உறவுகளின் துர்ப்பாக்கியநிலையை நினைத்து வேதனைப்படும் ஆஸ்திரேலியா வாழ் தமிழ்மக்களும் தாம் அடைக்கலம் புகுந்த நாட்டு மக்களிற்கு உதவவேண்டும் என்ற உணர்வில் செயல்திட்டங்களை நடைமுறை படுத்தியுள்ளார்கள். ரத்ததானம் செய்வதும், பொருள் பணம் போன்ற உதவிகளை வழங்குவதுமாக வெவ்வேறு வடிவத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள தமிழ் மக்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த செயல்திட்டத்தை ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளின் நினைவாக என்று அர்ப்பணித்து அதை ஓர் கவனயீர்ப்பு வடிவமாக செயல்படுத்துகிறார்கள்.<br /><br />தாயகத்தில் தினம்தினம் எமது மக்கள் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்ட ஒவ்வொரு உடல்களையும் கோரமாகப் பார்க்கும்போது நெஞ்சம் கனத்துப்போகின்றது. காட்டில் வசிக்கும் உயிரினம் ஒன்று தீயினால் கஸ்டப்படுவதை சகிக்கமுடியாத மக்கள் வாழும் இந்த நாட்டவர் ஈழத்தில் தினம் துண்டாடப்படும் உடல்களை கண்டும் காணாமலும் ஏன் இருக்கிறார்கள். </span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmNy054mp72uYM-XNoOp-4iHSNkWnR_3GLlpy7Lq6kgRu-9XX1bi3sMHayV7ku2pM7x_y4ayrAWPYba9OHEymRMyzZjEkargoxIlYeSGzAuB6A1fGVABOTApwsKUsaJ_fIC9xbd9LU_Ck/s1600-h/fire15__4__gallery__600x368.jpg"><span style="font-size:85%;"></span></a><span style="font-size:85%;"><br /></span><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5301732760856241522" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 391px; CURSOR: hand; HEIGHT: 264px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFRhZLdZjkGhKZGb74875St7L8DMeSqJZEqzUue5m-Rn_lHQPP2R6cflR7lOCzBRXNHQF3mEPWo8KcWurDKoLFRNjes6IfX0eZQNIgVe6V-7rPzwC2XVrxw42ZQ-RyGt1Ycz0CI_t0wKI/s320/vicbush.JPG" border="0" /> </span><br /><span style="font-size:85%;">சர்வதேச உலகம் தேவையான அனுதாபத்தையோ, ஆதரவையோ ஏன் முழுமையாக தரமறுக்கின்றது. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள்கூட ஏன் எமது நாட்டில் நடக்கும் மனித உரிமைமீறலுக்கு குரல்கொடுக்க மறுக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களாகிய நாம் தாயக அவலங்களைப்பற்றிய பரப்புரைகளை சரியான நேரத்தில் சரியான முறையில் உலகத்துக்கு எடுத்துரைக்க தவறிவிட்டோமா? </span>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-20316703491484760632009-02-10T08:22:00.009+11:002009-02-10T12:45:42.300+11:00கசக்கின்றது காலம் .....<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLhSAXynuNKS-rHrm_NYYc71nIvOysbGwP9l2JTVtRWDvkrB0OF830T8E-LExzlmrtTd05x3-cQziuhISOetFIEpvI689HgZ6cVKLeRLUoijzByYkaHpCor_lgOz7GQlLj573o4uMI_e4/s1600-h/peace.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5300961631971913362" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLhSAXynuNKS-rHrm_NYYc71nIvOysbGwP9l2JTVtRWDvkrB0OF830T8E-LExzlmrtTd05x3-cQziuhISOetFIEpvI689HgZ6cVKLeRLUoijzByYkaHpCor_lgOz7GQlLj573o4uMI_e4/s320/peace.jpg" border="0" /></a><br /><div><span style="font-size:85%;"><span class=""></span></span></div><div><span style="font-size:85%;"><span class="">கடந்த</span> சில நாட்களாக எழுதியதைவிட வாசித்ததே அதிகம். எங்கு பார்த்தாலும் வலியுடன்கூடிய வார்த்தைகள். இதற்குள் நான் எழுதி எதை சாதிக்கப் போகின்றேன் என்ற சிந்தனை வேறு.<br /><br />எங்கு பார்த்தாலும் கவனயீர்ப்பு போராட்டம், பரப்புரை வடிவங்கள், தீக்குளிப்பு உண்ணாவிரதம், மறியல் போராட்டம் என்று எல்லாவிதமான போராட்ட வடிவங்களையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அழிந்து கொண்டிருக்கும் தமது உறவுகளை மீட்டெடுக்க ஆயுதமாக பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் எதற்கும் அஞ்சாது தமிழரை அழிப்பதே எமது கடமை என்று தாயகத்தில் நாள்தோறும் சிறிலங்கா இராணுவம் அப்பாவி மக்களை கொன்று தீர்த்த வண்ணமே இருக்கின்றது. ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரக் கொலைகள், ஊனங்கள் என்று வார்த்தைகளில் கூறமுடியாத சோகங்கள்.<br /><br /></span><span class=""><span style="font-size:85%;"><span class=""></span></span></span></div><div><span class=""><span style="font-size:85%;">நவஜோதி ஜோகரட்னம் எழுத்தில் வந்த கவிதை ஒன்றை வாசித்தேன். </span></span><span style="font-size:85%;"><span class="">கசக்கின்றது</span> காலம் என்ற வரிகளுக்குள் எல்லாமே அடங்கும்.</span></div><br /><div><span style="font-size:85%;"></span></div><span style="font-size:85%;">குத்தும் குளிரிலும் - என்<br />குருதி மிதமான சூடு<br />உரிமையிழந்த மண்ணின்கோலம்<br />பார்வையில் படியும்போது<br />உடல் இறுகி உதிரம் உறைகிறது<br /><br />சரித்திர வட்டத்தில்<br />நெருப்பு இடி பூகம்ப வெடிகள்…<br />மூடாத குழிகளில்<br />அம்மா அப்பா மட்டுமன்றி<br />ஐயோ எம்<br />எதிர்காலச் சோளக் கதிர்களெல்லாம்<br />சிதறிப் போய்க்கிடக்கிறது…<br />இளவேனில் மழைத்தூறல்<br />சிவப்பாகி பெருக்கெடுக்கிறது…<br />இரும்பு இதயங்களின் வேற்றுமை படர்ந்து<br />மண்ணும் வெடுக்கெடுக்கிறது…<br />இனவாதச் சகதிக்குள் மனிதக் கருகல்கள்…<br />மனிதத்துக்குக் கண்ணீர் அஞ்சலி!<br /><br />நாமோ மண் எங்கும் ஓடுகின்றோம்…<br />கனத்து கரைந்து கசக்கிறது காலம்…<br />எரிகிறது இதயம்…<br />ஒளி செத்த தேசம்…<br />சிவப்பாகும் கோபம் உங்களை திரட்டி விழுங்காதா? – எம்<br />குருதியைச் சீராக்கி<br />சிரிப்பைக் கண்டெடுத்து<br />சுதந்திரம் விரைந்து விரைவில்<br />மாலைகளாய் எம்<br />கழுத்தில் வீழாதா?... </span>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-84960751982078594472009-02-03T12:19:00.005+11:002009-02-03T14:51:25.247+11:00தியாகி ரவிக்கு வீர வணக்கங்கள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWEiBISYWb1BAq1dngcVA4P7JsKQQL0KeBAjdw82bN1T4srHKcbALIRCFxNuA8Uz5wBdICTb6p7lPZFNl9Qd95ll8HoOQG08gPVUvayrZkrif5jZcxAOVvyyClf9ENjuIKmf4YKNPhN0U/s1600-h/stop-war.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5298404377618616562" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWEiBISYWb1BAq1dngcVA4P7JsKQQL0KeBAjdw82bN1T4srHKcbALIRCFxNuA8Uz5wBdICTb6p7lPZFNl9Qd95ll8HoOQG08gPVUvayrZkrif5jZcxAOVvyyClf9ENjuIKmf4YKNPhN0U/s320/stop-war.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl_kmPPzjx40TFfCiP7dJl5NXOzcl-dmamwRIgZU4hHx2pbLfdp021gEtNwe78g36rAhRFQRrnS4PBDwwI_UGTolO4mV4A1jD1mzdPkcTMbhsHcdtp-8lu-v6sI5nr7xXK5fv9hUTYpDw/s1600-h/picture-83.jpg"></a><span style="font-size:85%;"><span style="color:#660000;">இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்த திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி இன்று காலை மரணமடைந்தார். தியாகி ரவிக்கு வீர வணக்கங்கள் , அன்னாரின் குடும்பத்தினர்க்கு ஆழ்த்த அனுதாபங்கள். </span></span></div><div><span style="font-size:85%;"><br />உறவுகளே .... ரவியின் தீக்குளிப்பு இறுதியானதாக இருக்கட்டும். தயவு செய்து இப்படி உயிரைவிடாதீர்கள். உங்களது விலைமதிப்பற்ற உயிரை அழிப்பற்கு கொண்டுள்ள மனத்திடத்தை ஆக்கபூர்வமான வழிகளில் பாவிக்கலாம். அநீதியை எதிர்த்து போராட வேறுவழிகள் நிறைய உண்டு. அவற்றை கண்டுபிடித்து செயல்படுங்கள்.<br /><br />இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்த ஓர் தமிழனை வாய் கூசாமல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். தமிழக அரசின் அழுத்தம் காரணமாக இவரின் தியாக மரணத்தை திசைதிருப்ப தமிழக காவல் துறை முயன்றுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. ஒரு உயிரின் மதிப்பை பார்த்தீர்களா?<br /><br />தமிழக சுயநலவாத அரசியல்வாதிகளையும் மத்திய அரசையும் எரிப்பதற்கு எத்தனை உயிர்கள் எரிந்தாலும் ஒன்றும் நடக்காது. அவர்களை மாற்றுவதற்காக நீங்கள் உடல்களில் தீயை பற்ற வைக்காதீர்கள். மக்கள் மனங்களில் கருத்துக்களில் செயற்பாடுகளில் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் கபட நாடகம் போடும் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புங்கள்.<br /><br />ரவி அவர்கள் ஈழத்தின் மீதிருந்த பற்றுக் காரண்மாகவே தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்திருந்தார். இவரது உயிர் கொடைக்கு கிடைத்த பரிசை பாருங்கள். கொதித்து எழும்பும் எதிர்ப்பலையை திசைதிருப்ப கபட அரசியல்வாதிகளினால் சோடிக்கப்பட்ட களங்கமிது.<br /><br />உறவுகளே பெறுமதியான் உங்கள் உயிரை வீணாக்காதீர்கள். இந்த உலகில் இருந்து இன்னும் எவ்வளோவோ உங்களால் சாதிக்க முடியும். உங்கள் வீர மரணம்கூட களங்க படுத்த படலாம் உணர்ச்சி வசப்பட்டு உயிரைப் பலிகொடுகாதீர்கள். வீரர்களின் சாவு சரித்திரமாக வேண்டும் அதற்காக உழையுங்கள்! தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் மனிதர்கள் வாழும் உலகமிது<br />சிந்தியுங்கள்!<br /><br />தமிழர்கள் அனைவரும் இணைந்து பகைவர்கள் யாராயினும் அவர்களை எதிர்க்கத் துணிந்து விட்டார்கள் என்று இன்னும் ஏன் புரியவில்லை இந்த இந்திய அரசுக்கு. ஈழத் தமிழனுக்கு, சொந்தச் சகோதரனாய், இரத்த உறவுக்காரனாய் தமிழகத்துத் தமிழன் தோள் கொடுத்து நிற்கின்றான் என்பது இன்னுமா இந்திய தலைவிக்கு புரியவில்லை. நாளாந்தம் குண்டுவிச்சுக்கும், எறிகணை வீச்சுக்கும் இலக்காகிப் பலியாகும் அவலம் இனியும் தொடர வேண்டாம் எனத் ஈழத் தமிழர்களுக்காகத் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் தமிழக தமிழர்களைப் பார்த்தாவது எதை எப்போது எதிர்க்க வேண்டும்;எப்போது ஆதரிக்கவேண்டும் என்பதில் ஓர் தெளிவை மற்றவர்கள் ஏறபடுத்திக்கொள்ளவேண்டும். ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு! </span></div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-18696472337939184032009-01-31T08:49:00.009+11:002009-01-31T10:18:02.167+11:00நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்......<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_6x5_K4i81f6DSbUYd-3ENcgoe18Axi7vXR9eycYMCxF6aOPBlDTdkqnNmhAz43gKDCtE5zASzT-WQDZ1npOAR8FdrD_dHfiAazukN4fV_iWMagFAmQniiR_gt4tP0pwDtjWKSv7aAk4/s1600-h/untitled.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5297215661953099138" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 265px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_6x5_K4i81f6DSbUYd-3ENcgoe18Axi7vXR9eycYMCxF6aOPBlDTdkqnNmhAz43gKDCtE5zASzT-WQDZ1npOAR8FdrD_dHfiAazukN4fV_iWMagFAmQniiR_gt4tP0pwDtjWKSv7aAk4/s320/untitled.bmp" border="0" /></a><br /><span style="font-size:85%;"><span class=""></span></span><br /><span style="font-size:85%;">புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் அமரர் முத்துக்குமாருக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி.<br /><br />புதுவையின் கவிதையில் உள்ள ஆழத்தையும் ஈர்ப்பையும் அவரது எழுத்தின் வலிமையையும் வியந்தவர்கள் பலர்.<br /><br /><br /></span><p></p><p><span style="font-size:85%;"></span></p><span style="font-size:85%;"><span style="color:#660000;">எனக்கொரு நாடும் எனக்கொரு மொழியும்<br />இருந்திடும்போதும் நானொரு அகதி</span><br /><br />இப்படியாக தனது ஏக்கங்களை வார்த்தைகளாக்கி மற்றவர்களையும் விழித்தெழச்செய்தவர் புதுவை இரத்தினதுரை. தமிழினத்தை நேசித்து தன் உறவுகளின் அழிவை தடுக்க தன்னையே அழித்த வீரனை நினைத்து சதையும் ரத்தமுமாக காட்சி தரும் மண்ணில் நின்றுகொண்டே புதுவை எழுதிய கண்ணீர் காவியமிது.<br /><br /></span></span><span style="font-size:85%;"><span style="color:#660000;">முத்துக்குமரா!<br />முகம் தெரியாப்போதினிலும்<br />செத்துக்கிடக்கின்றாய் எமக்காக,<br />எனவறிந்து<br />தேகம் பதறுகிறதே திருமகனே!<br />உந்தனது,<br />ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே<br />நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ<br />உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி<br />நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்<br />அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.<br />உன் மேனியில் மூண்ட நெருப்பு<br />உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்<br />நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.<br />சின்ன அக்கினிக்குஞ்சே!<br />உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்<br />அந்தச்சோதிப்பெருவெளிச்சம்<br />எமக்குச்சக்தி தரும்<br />வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.<br />உன் இறுதி மூச்சு<br />புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.<br />எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி<br />உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.<br /><br />தம்பி!<br />வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.<br />நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல<br />எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார்<br />இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.<br />உன் குரலைக் கேட்கிறேன்.<br />உன் மூச்சை உள் வாங்குகிறேன்.<br />இடையில் கடல்கடந்தும் வருகின்றது.<br />உன் சிரிப்பின் ஓசை.<br />எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?<br />கடலிலே அனுப்பி வையுங்கள்<br />அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,<br />ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,<br />கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.<br /><br />மகனே!<br />நெருப்பெரியும் தேசத்தை எண்ணி<br />நெருப்பில் எரிந்தவனே !<br />உன்நெஞ்;சின் உணர்வுகளை வாங்கி<br />இங்கே உயிர்கள் பிறக்கும்<br />உன் இறுதி மூச்சை உள்வாங்கி<br />உயிர்கள் சுவாசிக்கும்<br />நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு<br />எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்<br />உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது<br />ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி<br />நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.<br />முத்துக்குமார்,<br />நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக<br />யாராவது அவனின் புனித உடலை<br />எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா?<br />இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக<br />அந்த வித்துடல் வேர் பிடித்து<br />புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.<br /><br />தம்பி!<br />வார்த்தை ஏதும் வரவில்லையே<br />உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக<br />தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது<br />உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து<br />நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீழத்தமிழ்.<br /><br />நண்பனே!<br />முகம் தெரியாத எம்முத்துக்குமார்<br />உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.<br />நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது<br />விண் தொட எழும் - அந்த வெளிச்சத்தில்<br />நாங்கள் ஒளி பெறுவோம் .<br />என் பிரிய உறவே!<br />சென்று வருக<br />திரும்பி வராவிட்டாலும்<br />நன்றியென்ற ஓருணர்வை<br />நாம் சுமந்து நிற்கின்றோம்.<br />பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்<br /></span><br />தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை </span>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-7131217478545884922009-01-30T15:19:00.008+11:002009-01-30T20:57:36.113+11:00'தமிழன் சாகப்பிறந்தவன் அல்ல'<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1brSNpUAC56h_yK1dXQjaBF136S_W8-ibwAUZxbqoG2ZAU-YVNy0o_MqqvEz5QGSL5GFlxpyUBfqLvTWpK46b9SDh5gLDd1pfcrogIj_lG4Rgq7FB7q7yFBX9DOnvsMOTTguasaT8K0A/s1600-h/FIRE1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5296936809110391106" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 239px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1brSNpUAC56h_yK1dXQjaBF136S_W8-ibwAUZxbqoG2ZAU-YVNy0o_MqqvEz5QGSL5GFlxpyUBfqLvTWpK46b9SDh5gLDd1pfcrogIj_lG4Rgq7FB7q7yFBX9DOnvsMOTTguasaT8K0A/s320/FIRE1.jpg" border="0" /></a><br /><div><span style="font-size:85%;"></span></div><div><span style="color:#ff0000;"><span style="font-size:85%;">இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமரன் ஈழத்தமிழர்களுக்காக ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். </span></span></div><div><span style="font-size:85%;"></span></div><div><span style="font-size:85%;"><br />எம் தேசத்தின் துயர் துடைக்க தன் உயிரை பலி கொடுத்த முத்துக்குமரன் என்ற மாமனிதருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்! </span></div><div><br /><span style="font-size:85%;">சொந்த மண்ணில் மக்கள் அவலப்படும் போதும் காட்டிக் கொடுத்து வயறு வளர்க்கும் மனிதர்களின் மத்தியில் இப்படியும் ஜீவன்கள். தன்னினம் வாழ வேண்டும், தன் இனத்திற்கெதிரான போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தன் உயிரை மாய்த்த அவரின் துணிச்சலுக்கும், தன் மானத்துக்கும் தலை சாய்க்கும் அதே நேரம். . . . .. </span></div><div><span style="font-size:85%;"></span></div><div><span style="font-size:85%;"></span></div><div><span style="font-size:85%;"><br />வேண்டாம் இப்படிப்பட்ட உயிரிழப்புகள் இனியும் வேண்டாம். தமிழன் சாகப்பிறந்தவன் அல்ல மற்றவர்களைப் போல் அவனும் வாழப் பிறந்தவன். விலை மதிக்க முடியாத உயிர்களை ஒரு நிமிடத்தில் போக்காதீர்கள். உரிமையுடன் உங்கள் ஆதரவுக்கரத்தை தொடர்ந்தும் நீட்டுங்கள், உங்களது மத்திய மாநில அரசுகளை செய்கையினால் அசையுங்கள். உங்களது உயிர் மிக புனிதமானது உங்களைப் போன்றவர்கள் உயிருடன் இருந்து ஈழத் தமிழருடன் இணைந்து வரவேண்டும். இப்படிப்பட்ட இறப்புகளினால் அழிந்து கொண்டிருக்கும் தமிழரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டாம். </span></div><div><span style="font-size:85%;"></div></span><span class=""></span><div><span style="font-size:85%;"><span style="color:#ff0000;"><br />தோழரே எங்கள் துயர் படிந்த ஈழ வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டீர். உம்மை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களும் இதய பூர்வ அஞ்சலியும். </span></span></div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-12775454460567623272009-01-30T13:09:00.011+11:002009-01-30T20:42:43.045+11:00வாழ்வினை இழந்த தோற்றம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTKlaqAK4Kg39hJiUQoakAtJMxldMPmRYnuwNbN9ZL4QbWln5_ogTlovYFbzAFAknaXiO9uF2lihcPR5KaCRJu-UftlO8zJP2nOPUVs43D42VdDb3gRzGsUDJvPY2oO_aA92c76g3dPGI/s1600-h/LKvillagersflee238.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5296911490342565602" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 228px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTKlaqAK4Kg39hJiUQoakAtJMxldMPmRYnuwNbN9ZL4QbWln5_ogTlovYFbzAFAknaXiO9uF2lihcPR5KaCRJu-UftlO8zJP2nOPUVs43D42VdDb3gRzGsUDJvPY2oO_aA92c76g3dPGI/s320/LKvillagersflee238.jpg" border="0" /></a> <span style="font-size:85%;">தென்றலது தாலாட்டும் தமிழ் ஈழமின்று </span><div><span style="font-size:85%;">சதிகாரர் கைகளிலே பலியாகிப் போனகதை</span></div><div><span style="font-size:85%;">பத்திரிகை </span><span style="font-size:85%;">வாசலில் </span><span style="font-size:85%;">முத்திரை பதிப்பதை </span></div><div><span style="font-size:85%;">எத்திரை தடுத்தாலும் உதிரம் துடிக்கிறதே!</span></div><br /><div><span style="font-size:85%;">அன்று நடந்த கொலை ஆயிரமாயிரம்தான்</span><br /><span style="font-size:85%;">இன்று நடப்பதுவோ எண்ணிமுடியவில்லை</span></div><div><span style="font-size:85%;">சுடுகின்ற துப்பாக்கி துரத்தும் பீரங்கி<br />தூரத்தே பறக்கின்ற துல்லிய விமானங்கள்</span></div><div><span style="font-size:85%;">இடுகின்ற குண்டோடு ஏவுகணையத்தனைக்கும்<br />பலிபீட ஆடுகளாய் பாவிமக்கள் அழிவதுதான்<br />பழகிப்போகும் கதையாச்சோ!</span></div><br /><div><span style="font-size:85%;"><span class=""><br /><br />இருந்த இடம் நீங்கி </span></span><span style="font-size:85%;">இருக்குமிடம்தேடி<br />இறப்பதற்கே பிறந்தவர்போல்<br /><span class="">இழந்தவர்கள் வருந்தியோடும்</span> </span><span style="font-size:85%;">கோலத்தை </div></span><span class=""></span><div><span style="font-size:85%;">காணொளியில் கண்டதற்கு வர்ணனைகள் ஏதுமுண்டோ! </span></div><span style="font-size:85%;"><div><br />ஆடையோர் அழுக்கும் ஆஸ்தியோர் பானையுமாய்<br />வாடையிலும் கோடையிலும் வதைவோரைப் பார்கையிலே<br />வாழ்வோரை வாழவைக்கும் வணங்கும் கடவுளரை</div><div>வையாமல் என்ன செய்ய! </div><div><br />திரும்பும் இடமெல்லாம் அழுதகண் வரண்டமேனி<br />தரித்திரப் படுக்கை; இரத்த வியர்வை; நிரந்தர ஊனம்<br />தன்மகனை ஏன் பெற்றோம் என்று மாய்கின்ற தாய்<br />கண்முன்னே நடப்பதனை காணப்பொறுக்காத வீரம்<br />விடுதலைவேண்டி குருதிநீராட போரிடும் வேகம்!<br />நெஞ்சு பிளந்து குஞ்சுகளை அள்ளும் கொடூரம்?<br />கொடுமையொழி; போரைநிறுத்து<br />தமிழர் பக்கம் பார்வையைத் திருப்பு<br />புலம்பெயர் தமிழர் கதறும் காட்சி<br />எங்கும் வாழ்வினை இழந்த தோற்றம் </div><div><br />பூமித்தாயே போன பசுமைதான் எங்கே?<br />போரின்றி நம்நாடும் மாறுமோ நன்றே!<br />பொன்னான பூமி பொல்லாத கைபட்டு<br />மண்ணாகிப் போகிறதே இது மறக்குமா!<br />இந்த சோகம் எமைவிட்டு இறக்குமா!<br />வானத்தைப்பார்த்து வாழ்ந்த உறவுகளின்<br />வாழ்வுநிலை மாற்ற யார் வருவார்?<br /><br />கண்ணை முழிப்பதுவோ அந்நிய நாட்டில்<br />உடம்பில் காயமில்லை; உதிரம் சிந்தவில்லை<br />தோல் தடித்தாலும் ரத்தம் மறந்திடுமோ?<br />கண்விழித்த நாட்டையும் பிறந்த மண்ணையும்<br />இதயக்கிடங்கினில் சேமித்த உணர்வையும்<br />உயிருள்ளவரை யாரும் மறப்போமோ? </span></div><br /><span style="color:#000066;"><span style="font-size:85%;">சௌந்தரி</span><strong> </strong></span>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-6838653327167351472009-01-28T12:07:00.010+11:002009-09-25T10:32:11.689+10:00அப்பாவும் நானும்......<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg_FiMt3gpaRBxhAoKHO8-ac-lIUUvO_0ogWB4ebBrhPc9x3axTl7VpScC2K33YZdDBRMhy-TdFMpVOz-ggaxySOEKs0AzTtLL7UCLKaJiLjMtShP_zFJxQiQAxK1EMqBsEwB_tulY1qI/s1600-h/3838650-sm.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5296157612893914498" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg_FiMt3gpaRBxhAoKHO8-ac-lIUUvO_0ogWB4ebBrhPc9x3axTl7VpScC2K33YZdDBRMhy-TdFMpVOz-ggaxySOEKs0AzTtLL7UCLKaJiLjMtShP_zFJxQiQAxK1EMqBsEwB_tulY1qI/s320/3838650-sm.jpg" style="cursor: hand; float: left; height: 200px; margin: 0px 10px 10px 0px; width: 133px;" /></a><br />
<div><span style="font-size: 85%;"><span style="color: #000066;"></span></span><br />
</div><div><span style="font-size: 85%;"><span style="color: #003300;">தந்தையின் பெருமைகளை சொல்வதற்கு நிறைய உண்டு, சொல்ல நினைத்தேன் நினைத்ததும் நினைவை வெல்ல முடியவில்லை. நானும் அப்பாவும் நல்ல நண்பர்கள், நாம் வாழ்ந்த காலங்கள் சந்தோசமான இனிய சங்கீதம். அங்கே காயங்கள், வடுக்கள் என்று எதுவுமேயில்லை. போர்ச்சூழல் காரணமாக புலம்பெயர்ந்தேன் அவர் இறந்தபோதுகூட நான் அருகிலில்லை ஊருக்கு போகமுடியாத சூழ்நிலை இறுதிவரை அவர் முகத்தைக்காணவேயில்லை. அந்த ஏக்கத்தின் காயம் ஒர் அழியாதசோகமாக என்னுள் இருக்கின்றது. என் வார்த்தைகளில் கள்ளமில்லை கற்பனையில்லை சொல்ல முடிந்ததை சொன்னேன்.<br />
</span><br />
என் அப்பா</span><br />
</div><div><span style="font-size: 85%;">எனக்கோர் அறிவொளி</span><br />
</div><div><span style="font-size: 85%;">அமைதியின் சிகரம் - அவர் </span><br />
</div><div><span style="font-size: 85%;">உள்ளும் புறமும் வெண்மை </span><br />
</div><div><span style="font-size: 85%;">துள்ளும் மனமோ மென்மை<br />
</span><br />
</div><br />
<div><span style="font-size: 85%;">நானிலம் போற்றிய நற்றமிழ் ஆசான் </span><br />
</div><div><span style="font-size: 85%;">குற்றம் பொறுக்கும் குணமலை </span><br />
</div><div><span style="font-size: 85%;">துள்ளிய நடை துடிப்பான செயல் </span><br />
</div><div><span style="font-size: 85%;">சிம்மக்குரல் சிரிக்கும் கண்கள்</span><br />
</div><div><span style="font-size: 85%;">இது என் அப்பா - அவர்</span><br />
</div><div><span style="font-size: 85%;">தெள்ளிய தேனிலும் இனியவர்</span><br />
</div><div><span style="font-size: 85%;">கற்றவர் அவைதனில் நிற்பவர் </span><br />
</div><div><span style="font-size: 85%;">நற்றமிழ் நலம்பெற்ற நாவீரர் </span><br />
</div><div><span style="font-size: 85%;">கம்பனின் களிநடம் சொல்லுவார்</span><br />
</div><div><span style="font-size: 85%;">கைகட்டி வாய்பொத்த மறுப்பவர்</span><br />
</div><div><span style="font-size: 85%;">வற்றா நதியென வாழ்ந்தவர்<br />
</span><br />
</div><br />
<div><span style="font-size: 85%;">என் தாயின் காதல் நாயகன்<br />
ஏக்கம்தீர எம்மை நேசித்த ஜீவன் </span><br />
</div><div><span style="font-size: 85%;">கண்போன்ற தன் பெண்களுக்கு</span><br />
</div><div><span style="font-size: 85%;">பொட்டு வைத்துப் பார்த்தவர்</span><br />
</div><div><span style="font-size: 85%;">கட்டவிழ்ந்து போகாமல்<br />
பொன்னும் பொருளும் தந்தவர் </span><br />
</div><div><span style="font-size: 85%;">நன்றி சொல்லவேண்டிய நல்லவர்</span><br />
</div><div><span style="font-size: 85%;">கெட்டியான பாசத்தை ஊட்டி வளர்த்தவர்</span><br />
</div><div><span style="font-size: 85%;">மட்டமான எண்ணத்தை மலராமல் தடுத்தவர்</span><br />
</div><div><span style="font-size: 85%;">சுட்டியான கருத்தை பேச்சில் கொண்டவர்</span><br />
</div><div><span style="font-size: 85%;">அட்டகாசமாகவே அவையோரை கவர்பவர்</span><br />
</div><div><span style="font-size: 85%;">கிட்டநின்று பார்ப்போர்க்கு சட்டென்று புரிபவர்</span><br />
</div><div><span style="font-size: 85%;">எட்டிநின்று பார்த்தாலும் காட்சியாக தெரிபவர்<br />
</span><br />
</div><div><span style="font-size: 85%;"><br />
சிந்தனைகள் சொல்லுவார்</span><br />
</div><div><span style="font-size: 85%;">சித்திரத்துப் பாவையென்று</span><br />
</div><div><span style="font-size: 85%;">சின்னவளைப் போற்றுவார்</span><br />
</div><div><span style="font-size: 85%;">அவருடன் வாழ்ந்த காலம் </span><br />
</div><div><span style="font-size: 85%;">அத்தனையும் வசந்தகாலம் </span><br />
</div><div><span style="font-size: 85%;">அவரில்லா நிகழ்காலம் </span><br />
</div><div><span style="font-size: 85%;">நிழலில்லா வனாந்தரம் </span><br />
</div><div><span style="font-size: 85%;"></span><br />
</div><div><span style="font-size: 85%;"></span><br />
</div><div><span style="font-size: 85%;"><br />
பக்கம்பக்கமாக சொல்லுவேன் </span><br />
</div><div><span style="font-size: 85%;">பருகிய பாசத்தைப் பாடுவேன்</span><br />
</div><div><span style="font-size: 85%;">ஆசையோடு அசைபோடுவேன்</span><br />
</div><div><span style="font-size: 85%;">ஆர்ப்பரிக்கும் எண்ணங்களை </span><br />
</div><div><span style="font-size: 85%;">அர்ச்சனைப் பூக்களாக்கி </span><br />
</div><div><span style="font-size: 85%;">அர்பணிக்கும் மனசோடு </span><br />
</div><div><span style="font-size: 85%;">நன்றி என்னும் தீபமேந்தி </span><br />
</div><div><span style="font-size: 85%;">நான் விரும்பும் தந்தைக்கு </span><br />
</div><div><span style="font-size: 85%;">அவர் மென்பாதங்களில் </span><br />
</div><div><span style="font-size: 85%;">அன்போடு தூவுகின்றேன்</span><br />
</div><br />
<div><span style="color: #006600;"><span style="font-size: 85%;">தாய் பாசத்தைபற்றி எத்தனையோ பேர் எழுதியிருக்கிறார்கள் ஆனால் தந்தையின் பாசத்தை ஏனோ பலரும் விபரிப்பதில்லை. அப்பாவும் நானும் என்ற இந்த தலைப்பின்கீழ் நீங்களும் உங்களது அப்பாவைப்பற்றி சில வரிகளை எழுதிச்செல்லுங்கள். அவற்றை தொகுத்து நான் எனது கருத்தையும் இணைத்து மீண்டும் ஒரு பதிவாக போடுகிறேன். </span></span><br />
</div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-80469138329245420042009-01-24T20:53:00.005+11:002009-01-24T21:19:38.655+11:00எல்லோரும் சமமானவர்களே!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz4ADhlGPuKFyqTSF0ZmKw3cuMGVSEmaR56HodgT5Y9F0JJ1RShkIVmLF6uAgYlUZB858J5YNI1Qwe0X-j5v3BozzpKzqWVrPnP0087T15E-Mp0DpOsbVhyaXs5Y5iE23o1ddBn1Lwae4/s1600-h/fuseli_hand_foot.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5294801766485892162" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 255px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz4ADhlGPuKFyqTSF0ZmKw3cuMGVSEmaR56HodgT5Y9F0JJ1RShkIVmLF6uAgYlUZB858J5YNI1Qwe0X-j5v3BozzpKzqWVrPnP0087T15E-Mp0DpOsbVhyaXs5Y5iE23o1ddBn1Lwae4/s320/fuseli_hand_foot.jpg" border="0" /></a> <span style="color:#000066;">சௌந்தரி<br /></span><div><span style="font-size:85%;">அபியும் நானும் என்ற படம் பார்த்தபோது ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜை அவரது மனைவி வயதான பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொள்ளும்படி கூற அவர் செய்கையால் மறுப்பு தெரிவிப்பார். மனைவி தொடர்ந்து வற்புறுத்த வேண்டாவெறுப்பாக குனிகிறார். இந்தக் காட்சியை பார்த்ததும் எனது மனதில் நீண்ட காலமாக உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது. அதையே இன்று எழுதுவோம் என்று யோசித்தேன்.</span></div><span style="font-size:85%;"><br /><div><br />ஊரில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாடுகளிலும்கூட பல வைபவங்களில் மனிதர்களின் கால்களில் மனிதர்கள் விழுவதை காணக்கூடியதாக இருகின்றது. இந்தப் பழக்கம் நீண்ட காலமாக வழக்கத்தில் வந்துகொண்டு இருகின்றது. திருமண நிகழ்வுகளில் பல நூறு பேர் பார்த்துக் கொண்டிருக்க பெற்றவர்கள் கால்களில் மட்டுமல்லாது மற்ற உறவுக்காரர்கள் கால்களில் விழுவது, அரசியல் மேடைகளில் தலைவன், தலைவியின் காலில் விழுவது, கோயில்களில் பெரிய ஐயர், ஆசிரமங்களில் மகான் போன்றவர்கள் கால்களில் விழுவது என்று இன்னும் பல.</div><div><br />ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைவிட எந்த வகையிலும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் துறையில் தனித்திறமைகள் இருக்கின்றது. அந்த வகையில் பார்த்தால் எல்லோரும் சமமானவர்களே. என்னை பொறுத்தவரையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் காலில் விழுவதென்பது அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் ஒரு செயலாகும். </div><div><br />பெற்றவர்கள் காலில் விழுவது அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை என்று சொன்னாலும் மரியாதையை வெளிக்காட்டுவதட்கு இது ஒன்றுதானா வழி. மரியாதை என்பது மனசில் இருக்கவேண்டும் மற்றும் செயலில் இருக்கவேண்டும் வெறும் வாய்சொல்லிலோ காலில் விழுந்து வழிபடுதலிலோ மட்டும் இருந்தால் போதாது. பெரியவர்களது அறிவுரைகள், அவர்களது அனுபவதேர்ச்சி போன்றவற்றை முன்னுதாரணமாக ஏற்று வாழ்வதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதைதான். </div><br /><div>பொதுவாக குழந்தைகளை மற்றவர்கள் கால்களில் விழுந்து வணங்கும்படி சொல்வது மிகவும் நெருடலானது. பெரியவர்களிடம் அன்பு செலுத்து, அவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் சொல்கேட்டு நட என்று சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்களே வீட்டில் விறகு கொத்த வரும் வேற்று ஜாதியைச் சேர்ந்த வயோதிபர் கதிர்காமுவை கதிர்காமன் என்று கூப்பிட சொல்வார்கள், உடுப்புத் துவைக்கும் மாணிக்கம் என்ற வயதான பெண்மணியை தொட்டுப் பேச அனுமதிக்க மாட்டர்கள், பாட்டி வயதை ஒத்த அவரையும் மாணிக்கம் என்றே அறிமுகப் படுத்துவார்கள். </div><br /><div><span class=""></span></div><div>இப்படியாக குழந்தைகளுக்கு பல முரண்பாடுகளை வீட்டுக்குள்ளேயே உருவாக்கும் பெரியவர்கள் அவர்களை மற்றவர்கள் கால்களில் விழச் சொல்வது தன்னம்பிக்கைக்கு எதிராக அவர்களை தூண்டுவது போல்தான் தோன்றுகிறது. இப்படிப்பட்ட காட்சிகளை திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகமாகக் காணக் கூடியதாக இருக்கிறது. </div><br /><div>யாருடைய நம்பிக்கைகளையும் குறை கூறும் நோக்கம் எதுவும் இங்கு இல்லை. மனதில் தோன்றிய சிந்தனையின் வெளிப்பாடு மட்டும்தான். உங்களது பக்க நியாங்களையும் முன் வையுங்கள் ஆரோக்கியமான கருத்துக்களமாக அமையட்டும். </span></div>BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com13